Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
ஐ லவ் மை அப்பா - cover

ஐ லவ் மை அப்பா

Shelley Admont, KidKiddos Books

Verlag: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

குட்டி முயல் ஜிம்மிக்குத் தன் அண்ணன்களைப் போல மிதிவண்டியை நன்றாக ஓட்ட தெரியவில்லை.இதற்காக அவன் கிண்டல் செய்யப்படுகிறான். இதில்  அப்பா ஜிம்மிக்கு எப்படி புதிய விஷயங்களை பயமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று காண்பிக்கும்போது தான் வேடிக்கையே தொடங்குகிறது.
இந்த குழந்தைகள் புத்தகம் சிறிய பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற தொகுப்பின் பகுதியாகும்.
இந்த கதையை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உறங்கும்முன் வாசிக்கத் தகுந்தது மற்றும் இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்பத்துடன்  சேர்ந்து படித்து மகிழலாம்!!
Verfügbar seit: 06.05.2024.
Drucklänge: 34 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Valmiki Ramayanam Part 3 - Aaranya Kandam - cover

    Valmiki Ramayanam Part 3 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    ஆரண்ய காண்டத்தில், சித்ரகூடத்தை விட்டு ராமர் சென்று வனத்துக்குள் தொடர்ந்து பயணிப்பது, விராதன் எனும் ராட்சசனை வதம் செய்வது, தவத்தால் பழுத்த பல ரிஷிகளையும்  சந்திப்பது, அகஸ்திய முனிவரை தரிசிப்பது, அவர் ஆலோசனைப்படி பஞ்சவடியில் சென்று வாழ்வது, அங்கே வந்து தகாது நடந்து கொண்ட சூர்ப்பனகையை லக்ஷ்மணன் தண்டிப்பது, அதன் பலனாய் கர தூஷணர்கள் வந்து ராமருடன் போர் செய்வது, அவர்களை ராமர் வதம் செய்வது, சீதையின் அழகைப்பற்றி சூர்பனகையிடமிருந்து கேட்ட ராவணன், மாரீச மானின் உதவியுடன் சீதையைக் கவர்ந்து செல்வது, , சீதையை இழந்த ராமர் அளவிலா துக்கத்தில் ஆட்படுவது, கழுகு ஜடாயு சீதைக்கு உதவ முயன்று ராவணனால் வெட்டுப் பட்டு சாவது, ராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று சிறை செய்வது, ராமர் கபந்தன் எனும் ராட்சசனை வதம் செய்வது, வானரன் சுக்ரீவனைத் தேடி பம்பா ஏரிக்கு செல்வது, அங்கே சபரிக்கு அருள் செய்வது, ருஷ்ய சிருங்க மலையயை நாடிச் செல்வது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Zum Buch
  • Pavalakkoti - cover

    Pavalakkoti

    Pukazhendi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Zum Buch
  • Avvaiyar Kondrai Vendhan - Tamil Audio Book - கொன்றை வேந்தன் - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Kondrai Vendhan - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    கொன்றை வேந்தன் ஒளவையார் எழுதிய  ஒழுக்க நூல்களில் ஒன்று. இந்த நூல் மன்னர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நல்லாட்சி, தர்மம், நீதிமுறை, பக்தி, கல்வி போன்ற வாழ்க்கை நெறிகளை எளிய முறையில் எடுத்துரைக்கிறது. 
         அடக்கம், பணிவு, கருணை, அறிவு, கல்வி, பக்தி ஆகிய நல்லொழுக்கங்கள் போதிக்கப்படுகின்றன மேலும் இதில் அரசனின் கடமைகள், குடிமக்களின் நெறிகள் மற்றும் மனித வாழ்வின் உயர்ந்த வழிமுறைகள் விளக்கப்படுகின்றன. 
    இது தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஒழுக்க நூல்களில் ஒன்று  
    கொன்றை வேந்தனைப் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் நல்லாட்சி, நீதிமுறை, தர்ம சிந்தனை ஆகியவை வளரும்.
    Zum Buch
  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Zum Buch
  • Sotru Kanakku - cover

    Sotru Kanakku

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு  கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !
    Zum Buch
  • Ayndhaavadhu Marundhu - cover

    Ayndhaavadhu Marundhu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு.
    Zum Buch