Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
விவேக் விஷ்ணு வெற்றி - cover

விவேக் விஷ்ணு வெற்றி

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

இன்டர்காம் கூப்பிட்டது.பார்த்துக் கொண்டிருந்த ஃபைலினின்றும் பார்வையை எடுக்காமல் கைநீட்டி ரிஸீவரை எடுத்தான் சித்தார்த்தன். முப்பது வயது. ஐந்தடி பத்து அங்குல உயர உடம்பு. மெலிதான இள நீல நிற சூட் - இவைகளின் கூட்டணியில் இருந்த சித்தார்த்தன் ரிஸீவரை காதுக்கு ஒட்டவைத்து “எஸ்” என்றான்.“மிஸ்டர் சித்தார்த்தன்...! அயம் காமேஷ்வரன். உங்கக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. ஒரு பத்து நிமிஷம் எனக்கு அப்பாய்ன்மென்ட் கொடுக்க முடியுமா...?”சித்தார்த்தன் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை தள்ளி வைத்துவிட்டு பவ்யமாய் எழுந்தான்.“அப்பா...! இப்படியெல்லாம் பேசி என்னோட மனசைக் கஷ்டப்படுத்தாதீங்க... உங்க மகனைப் பார்க்க நீங்க எப்ப வேணும்ன்னாலும்... வரலாம்...!” சொல்லிக் கொண்டே அறையின் கதவுக்குப் போய் தாழ்ப்பாளைப் பிடித்து இழுத்தான்.வெளியே –செல்போனோடு அவனுடைய அப்பா காமேஷ்வரன்.“உள்ளே வாங்கப்பா...”“பத்தே பத்து நிமிஷம் போதும். பதினோராவது நிமிஷம் வெளியே போயிடுவேன்... அப்பாய்ண்மென்ட் கிடைக்குமா...?”“நீங்க மொதல்ல உள்ளே வாங்கப்பா...!”அறைக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த காமேஷ்வரனுக்கு அறுபது வயது. சற்று ஒடிசலான சிவப்பு நிற தேகம். மெலிதான நரைமுடியை படிய வாரியிருந்தார். மொட மொடப்பான கதர் வேஷ்டியும் சர்ட்டும் அவருடைய உடம்புக்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது.“உட்கார்ங்கப்பா...!”“நான் உட்காரலை... மொதல்ல இந்தப் போட்டோக்களைப் பாரு...!”ஒரு ப்ரெளன் கவரை நீட்டினார்.சித்தார்த்தன் நெற்றியில் பெரிதாய் ஒரு கேள்விக்குறி...!“என்ன போட்டோஸ்?”“வாங்கிப் பாரு... தெரியும்...”வாங்கிப் பார்த்தான். கவர்க்குள்ளே ஐந்து போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோக்கள். ஒவ்வொரு போட்டோவிலும் ஒரு பெண் நேர்பார்வை பார்த்து புன்னகைத்தாள்.“என்னப்பா இதெல்லாம்...?”“பொண்ணுங்க எப்படி இருக்காங்க...?”“நல்லாத்தான் இருக்காங்க...”“இதுல யாராவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணிச் சொல்லு... நாளைக்கு பெண் பார்க்க போலாம்.”“அ... அப்பா...”“என்ன...?”“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்...! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்...”“எதுக்கு ரெண்டு வருஷம் வாய்தா கேட்கிறே?”“கம்பெனியோட பிசினஸ் கிராப் இப்பத்தான் ரெய்ஸாகியிருக்கு... அதை இன்னும் டெவலப் பண்ணிட்டு...இதோ பார்ரா... கம்பெனியோட பிசினஸ் கிராப்பைப் பத்தி நீ கவலைப்படாதே... உனக்கு கீழே ஒரு ஏ.வி.பி., ஒரு ஜி.எம்., ரெண்டு டி.ஜி.எம்., நாலு மேனேஜர்ஸ், ஒரு அட்மினிஷ்ட்ரேஷன் ஆபீஸர், பத்து அக்கவுண்ட் ஆபீஸர்ஸ் இருக்காங்க. இவங்க எல்லாரும் கம்பெனியோட பிசினஸ் கிராப்பை பார்த்துக்குவாங்க.”“அப்பா...! நான் என்ன சொல்ல வர்றேன்னா...?”“நோ... ஆர்க்யூமெண்ட் ப்ளீஸ்... போட்டோக்களைப் பாரு...! அஞ்சுல ஒண்ணை செலக்ட் பண்ணு.”“உடனேவா...?”“உடனே... உடனே...!”“எனக்கு அவகாசம் வேணும்...”“எப்ப எனக்கு உன்னோட முடிவைச் சொல்லுவே?”“இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு உங்க கையில இந்த போட்டோக்களில் ஏதாவது ஒண்ணு இருக்கும்.”“நிஜமாத்தானே சொல்றே...?”“இதுல பொய் சொல்ல என்னப்பா இருக்கு...?”“சித்தார்த்...! இந்தப் போட்டாக்களில் இருக்கிற பெண்கள் எல்லாமே நம்ம ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி பெரிய இடத்துப் பெண்கள். இதுல நீ யாரை செலக்ட் பண்ணினாலும் எனக்கு சந்தோஷமே!”“ராத்திரி நான் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு போட்டோவைக் கொடுத்துடறேன். போதுமா...?”“போதும்...! நான் புறப்படறேன்... நீயும் வீட்டுக்கு சீக்கிரமே வந்து சேரு… உழைப்புக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த உடம்பு இப்போ இல்லை. கண்ணாடிக்கு முன்னாடி ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு உன்னையே நீ பார்த்துக்கிட்டாத்தான் தெரியும்... எப்படி இளைச்சு போயிருக்கேன்னு...!”சித்தார்த் சிரித்தான். “அப்பா...! அடுத்த மாசம் ஊட்டிக்குப் போய் பதினஞ்சு நாள் ரெஸ்ட் எடுக்கப் போறேன். அந்த ரெஸ்ட்ல பழைய உடம்பு வந்துடும்...! கவலைப்படாதீங்க...!உன்னோட அம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படி உன்னை விட்டிருக்கமாட்டா... எப்பவோ கல்யாணத்தை பண்ணி வெச்சிருப்பா... நீயும் ஒரு பேரப் பிள்ளையையோ பேத்தியையோ பெத்து கொடுத்து இருப்பே...!’ காமேஷ்வரன் தனக்குள் முனகிக் கொண்டே அறையைவிட்டு வெளியேறினார்
Disponible depuis: 08/02/2024.
Longueur d'impression: 69 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • I am Tired - ஐ யம் டயர்ட் - துப்பறியும் நாவல் - cover

    I am Tired - ஐ யம் டயர்ட் -...

    Kavani

    • 0
    • 0
    • 0
    I am tired - ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட திரைக்கதையை நாவல் வடிவில் தந்துள்ளேன். பணப் பற்றாக்குறையால் இத் திரைப்படம் தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நாவலை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்கள் திறனாய்வுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!  
     - ஆசிரியர் - கவாணி  
    Voir livre
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Voir livre
  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Voir livre
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Voir livre
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Voir livre
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Voir livre