Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
உலராத ரத்தம் - cover

உலராத ரத்தம்

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 3
  • 0

Synopsis

கங்கப்பா வாழைக் கன்றை அதிர்ந்துபோய் நின்றிருந்த ருத்ரமூர்த்தியின் கையில் திணித்துவிட்டு பதட்டத்தோடு குழியருகே வந்தார். மண்டியிட்டு உட்கார்ந்து குழிக்குள் எட்டிப் பார்த்தார்.வெகுவாய் அழுகிப்போன அந்த விரல்களில் சதை பாகங்கள் உரித்து எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. குப்பென்று ஒரு கவுச்சு நாற்றம் அடித்தது.கையில் கடப்பாரையோடு ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்த பட்ராச்சாரியாரின் குரல் வெடவெடத்தது... “ஐ.ஜி. ஸார்... பொ... பொணத்தை யாரோ... இ... இ... இங்கே கொண்டாந்து புதைச்சிட்டு போயிருக்காங்க. நல்ல நாளும் அதுவுமா கிரஹப் பிரவேசம் செய்யப்போற இந்த சமயத்திலா இது வெளியே வரணும்... கர்மம்... கர்மம்...”“பட்ராச்சாரியார்? மொதல்ல மண்ணைத் தள்ளி அந்தக் குழியை மூடுங்க. சுடுகாடா இருக்கிற இந்தப் பங்களாவை வாங்காதீங்கன்னு நான் தலை தலையா அடிச்சுகிட்டேன். ஆனா எங்கப்பா கேட்கலை. இப்ப பார்த்திங்களா வாழைக் கன்றை நடறதுக்கு குழியைத் தோண்டினா பொணம் கைளை நீட்டுது... ம்... மண்ணை போட்டு வேற பக்கமா ஒரு குழியைத் தோண்டுங்க.”“அதுவும் சரிதான்” நகர முயன்ற பட்ராச்சாரியாரை கங்கப்பாவின் குரல் தடுத்து நிறுத்தியது “கொஞ்சம் நில்லுங்க.”பட்ராச்சாரியார் நிற்கிறார்.“குழியை மூடாதிங்க... அந்தப் பிணத்தை முழுசுமா தோண்டி வெளியில எடுத்து போடணும். அந்த பிணம் ஆணா பெண்ணா... இந்த இடத்துக்கு யார் கொண்டு வந்து எப்படிப் புதைச்சாங்கன்னு போலீசைவிட்டு கண்டுபிடிக்கச் சொல்லணும்.போலீசா?” முகம் மாறினார் ருத்ரமூர்த்தி. “கங்கப்பா! இந்த விஷயத்தை பெரிசு பண்ணிடாதே! கிரஹப்பிரவேசத்தை நடத்தப்போற இந்த நல்ல நாள்லே போலீசைக் கூப்பிட்டு அசிங்கம் பண்ணிடாதே.”கங்கப்பா முகம் இறுகிப் போய் இருந்தார் “ருத்ரமூர்த்தி! நான் ஒரு எக்ஸ் போலீஸ்மேன். இதையெல்லாம் பார்த்துட்டும் பார்க்காத மாதிரி போக என்னால முடியாது. பாடியோட ஃபிங்கர்ஸைப் பார்த்தா சமீபத்தில் புதைச்ச பொணமாத்தான் தெரியுது. உன்னோட பங்களாவில் இருக்கிற யாரையாச்சும் ஒருத்தரைக் கூப்பிட்டு குழியைத் தோண்டி பொணத்தை வெளியே எடுக்கச் சொல்லு.”“கங்கப்பா.”“நான் சொன்னதை செய் ருத்ரமூர்த்தி போலீஸ் வந்து பாடியை பாத்து போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்துப் போனப்பறம்... உன்னோட கிரஹப்பிரவேச பங்ஷனை வெச்சுக்கோ.”ருத்ரமூர்த்தி இருண்டுபோன முகத்தோடு - போர்டிகோ தூணோரமாய் நின்றிருந்த - எடுபிடி வேலைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்த கந்தப்பனைப் பார்த்தார். எரிச்சலான குரலில் சொன்னார்.“அந்தக் கடப்பாறையை வாங்கித் தோண்டுடா.”“சரிங்கய்யா.” ஓடி வந்து பட்ராச்சாரியார் கையில் இருந்த கடப்பாறையை வாங்கிக்கொண்ட கந்தப்பன், குழியை நெருங்கி அகலமாய் கொத்த ஆரம்பித்தான். கங்கப்பாவைத் தவிர எல்லோரும் எட்டடி பின்வாங்கி தூரப் போய் நின்று கொண்டார்கள்.“பாடி மேல கடப்பாரை குத்து படாமே ஜாக்ரதையா...” கங்கப்பா கர்சீப்பால் முகத்தைப் பொத்திக்கொண்டே சொல்ல, கந்தப்பன் தலையை ஆட்டியபடி தோண்ட ஆரம்பித்தான்
Disponible depuis: 13/01/2024.
Longueur d'impression: 113 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Voir livre
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Voir livre
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Voir livre
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Voir livre
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Voir livre
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Voir livre