Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
தப்பு + தப்பு = சரி - cover

தப்பு + தப்பு = சரி

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“திலகா...!”“என்ன ஷாம்...?”“வர்ற சண்டே கோவளம் போய்ட்டு வரலாமா?”“வர்ற சண்டேவா...?”“முடியாதே...!”“ஏன் முடியாது... அன்னிக்கு லீவுதானே...?”“லீவா...! லீவு என்கிற வார்த்தையே எங்க கம்ப்யூட்டர் லேப்ல கிடையாது. ரொம்பவும் அர்ஜெண்ட்ன்னா ஒருமணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு வெளியே போய்ட்டு வரலாம்.”“இது உலக மகா அநியாயம்...”“ஷாம்...! நான் இந்த கம்ப்யூட்டர் லேப்பில் வேலைக்கு சேர்ந்த அன்னிக்கே இங்கே இருக்கிற காலண்டர்களை புரட்டிப் பார்த்தேன். சனி, ஞாயிறு நாட்களே கிடையாது... இங்கே வேலை நேரம் ஹவர்ஸ் கணக்குத் தான்...! எனக்கு இங்கே இருபதாயிரம் மணி நேரம் வேலை...”“அப்படீன்னா... நீ வெளியே வரவே முடியாதா?”“வரலாம்... ஆனா உன் கூட சேர்த்து ஜாலியா சுத்த முடியாது...”“அதாவது காதலிக்க முடியாதுன்னு சொல்றே...?”“ஷாம்...! ஜாலியா சுத்தினாத்தான் காதலா...? இப்ப போன்ல பேசிக்கறோமே இது கூட காதல்தான்...!“திலகா...!”“ம்…”“உன்னை 24 மணி நேரமும் பார்த்துக்கிட்டே இருக்கணும் போலிருக்கு”“நான் பாத்ரூம்கூட போக வேண்டாமா?”“ஜோக் அடிக்க இது நேரம் இல்லை திலகா. நீ அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் போய் வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள்தான் ஆகியிருக்கு. ஆனா 20 வருஷம் ஆன மாதிரி ஒரு ஃபீலிங்...! உன்னைப் பார்க்காமே இருக்க முடியலை.”“ஷாம்...! பேத்தாதே... நான் ஒரு க்ளார்க் உத்தியோகமோ... முன்சீஃப் கோர்ட் குமாஸ்தா உத்தியோகமோ பார்க்க வரலை... மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஒரு ரெப்யூட்டட் கம்ப்யூட்டர் லேப்பில் எக்ஸிக்யூட்டிவ் ட்ரெய்னியாக, இருபத்தைந்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்த்துகிட்டு இருக்கேன். 20,000 மணி நேரம் வேலை பார்த்த பிறகுதான் நீயும் நானும் ஜாலியா வெளியே போக முடியும்...!”“ஒழிக...!”“யாரு...”“கம்ப்யூட்டரைக் கண்டுபிடிச்சவன்...!”திலகா சிரித்துக் கொண்டிருக்கும்போதே கம்ப்யூட்டர்க்குப் பக்கத்தில் இருந்த இண்ட்டர்காம் கூப்பிட்டது.“ஷாம்...! எனக்கு என்னோட எம்.டி.கிட்டயிருந்து போன். நான் நாளைக்கு மறுபடியும் உனக்கு போன் பண்றேன்.”“அந்த எம்.டி.யும் ஒழிக...!”திலகா பலமாய் சிரித்து ரிசீவரை வைத்துவிட்டு இண்ட்டர்காம் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். மறுமுனையில் எம்.டி. மஹாதேவ் குரல் கேட்டது.“திலகா...“ஸார்...”“அந்த எஸ்.க்யூ சர்க்யூட்டை பார்த்து முடிச்சுட்டியா?”“பார்த்துட்டிருக்கேன் ஸார்!”“அதுல ஒரு சின்ன கரெக்ஷன் பண்ண வேண்டியிருக்கு. பத்து நிமிஷம் என்னோட கேபினுக்கு வந்துட்டு போ. வரும்போது சர்க்யூட் சார்ட்டை கொண்டு வந்துடு...”“எஸ்... ஸார்...!” சொன்ன திலகா கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் நிறைந்த அந்த ஏ.ஸி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள்.சல்வார் கம்மீஸுக்குள் ஒரு சந்தன சிலையாய் தெரிந்த திலகாவுக்கு சற்றே நீள்வட்டமான சதைபிடிப்பு முகம். புருவம் மழித்த இடத்தில் வளையல் துண்டுகளாய் ‘ஐ’ப்ரோ பென்சிலின் உபயத்தில் தீற்றல்கள். சின்ன உதடுகளில் உறுத்தாத லிப்ஸ்டிக் பூச்சு. கழுத்தில் வெள்ளி சங்கிலி. லேசாய் உயர்த்திப் போட்ட கொண்டை. சென்னை நகர்க்குள் அழகிப் போட்டி நடத்தினால் சுலபமாய் மிஸ் சென்னை பட்டத்தை தட்டிக் கொண்டு வந்து விடுவாள். ரொம்ப நாட்களாய் ஆண்களை வெறுத்துக் கொண்டிருந்தவள் கடைசியில் ‘ஷாம்’ என்ற அழகான இளைஞனுக்கு தன் இதயத்தைத் தூக்கிக் கொடுத்தாள்.ஷாம்...?முழுப்பெயர் சாம்ராஜ். வயது 25. எம்.பி.ஏ. படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவன். பிடிக்காத மூன்று விஷயங்கள். 1. அரசியல். 2. பெரிய திரை. 3. சின்னத்திரை. பிடித்த மூன்று விஷயங்கள். 1. திலகா. 2. திலகா. 3, திலகா.தன்னுடைய கம்ப்யூட்டர் அறையிலிருந்து வெளிப்பட்ட திலகா ப்ளைவுட் தடுப்புகளாலான பல அறைகளைக் கடந்து கடைசியில் இருந்த எம்.டி.யின் அறைக்கதவுக்கு முன்பாய் நின்றாள். கதவை மெல்லத் தட்ட உள்ளேயிருந்து மஹாதேவ் குரல் கொடுத்தார்
Disponible depuis: 08/02/2024.
Longueur d'impression: 69 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Ragasiyamaga Oru Ragasiyam - cover

    Ragasiyamaga Oru Ragasiyam

    Anonyme

    • 0
    • 0
    • 0
    சித்தர்பட்டி ஒரு கிராமம் -இங்கே சித்தர்கள் கட்டிய சிவன் கோயில் ஒரு அதிசயம்.இந்த கோயில் மாலை ஆறு மணியானால் மூடப்படும். ஆறு மணிக்கு மேல் கோயிலுக்குள் யார் இருந்தாலும் காலபைரவனால் கொல்லப்படுவார். ஏன் அப்படி? திருப்பமும் பரபரப்பும் நிறைந்த திரில்லர் தான் ரகசியமாக ஒரு ரகசியம்.
    Voir livre
  • Marma Maaligai - cover

    Marma Maaligai

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    "'Maranam Pathiyirikkunna Thazhvara' is one of the most famous detective novels written by Kottayam Pushpanath. It belongs to the Pushparaj series of Kottayam Pushpanath.
    Detective Pushparaj, he is a private detective working in India. The Criminal Department seeks his help in cracking down on many cases of trauma and confusion. In this novel, 'Maranam Pathiyirikkunna Thazhvara' Detective Pushparaj unravels a mysterious bungalow and some of the events surrounding it. The novel tells the story of a valley where death hides, just like the title of the novel.
    
    கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மிகவும் பிரபலமான துப்பறியும் நாவல்களில் ஒன்று 'மரணத்தாழ்வரா'. இது கோட்டயம் புஷ்பநாத்தின் புஷ்பராஜ் தொடருக்கு சொந்தமானது. துப்பறியும் புஷ்பராஜ், இந்தியாவில் பணிபுரியும் ஒரு தனியார் துப்பறியும் நபர். அதிர்ச்சி மற்றும் குழப்பம் தொடர்பான பல வழக்குகளைத் தீர்ப்பதற்கு குற்றவியல் துறை அவரது உதவியை நாடுகிறது. இந்த நாவலில் துப்பறியும் புஷ்பராஜ் ஒரு மர்மமான பங்களாவையும் அதைச் சுற்றியுள்ள சில நிகழ்வுகளையும் அவிழ்த்து விடுகிறார். நாவலின் தலைப்பைப் போலவே மரணம் மறைந்திருக்கும் ஒரு பள்ளத்தாக்கின் கதையையும் இந்த நாவல் சொல்கிறது.
    Voir livre
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Voir livre
  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Voir livre
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Voir livre
  • Thamaraikulam - cover

    Thamaraikulam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"
    Voir livre