Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
திக் திக் டிசம்பர் - cover

திக் திக் டிசம்பர்

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

ஹரீஷ் அதிர்ந்துபோய் டாக்டரை ஏறிட்டான். அவர் முகம் இறுகிப்போய் லேப் டெக்னீஷியனை எரிச்சலாய்ப் பார்த்தார். 'பேஷண்டுக்கு நினைவு திரும்பி விட்டதா இல்லையா என்பதைக்கூடக் கவனிக்காமல் இப்படியா உண்மையைப் போட்டு உடைப்பது?' கோபமாய் கண்களால் கேட்ட கேள்விக்கு லேப் டெக்னீஷியன் முகம் வெளுத்து. "ஸாரி" என்று முனகினார்.ஹரீஷ் தடுமாற்றமாய் உடல் நடுங்க எழுந்து உட்கார்ந்தான். "டா... டாக்டர்...! எ... எனக்கு எ... எய்ட்ஸ் நோயா?"டாக்டர் ஓர் இன்ஸ்டண்ட் புன்னகை பூத்தார். "நோ... நோ... அவர் சொன்னது உன்னைப்பத்தி அல்ல. யூ ஆர் நார்மல்.""டாக்டர்... என்கிட்ட எதையும் மறைக்காதீங்க. இவர் என்பேரைச் சொன்னதை நான் கேட்டுட்டேன். எனக்கு எய்ட்ஸ் நோயா டாக்டர்?"டாக்டர் பெருமூச்சொன்றை விட்டபடி. கவலை ஈஷிக்கொண்ட முகத்தோடு தலையாட்டினார்."எஸ்... இது எய்ட்ஸோட ஆரம்ப நிலை.""டா... டாக்டர்... இது... எனக்கு எப்படி...?""அதை... நீதான் சொல்லணும் எய்ட்ஸ் ஒருத்தரைத் தாக்க எத்தனையோ வழிகள் இருக்கு. உனக்கு மோசமான பெண்கள்கிட்டே தொடர்பு இருக்கா?""இல்லை...""உனக்குக் கல்யாணம்...?""இன்னும் ஆகலை.எந்தப் பெண்ணோடவாவது சமீபத்துல...?""இல்லை.""பொய் சொல்லக் கூடாது.""சத்தியமா இல்லை டாக்டர் என்னோட அத்தை பொண்ணு மீராவைக்கூட நான் தொட்டுப் பேசினது இல்லை.""சமீபத்துல உனக்கு யாராவது ரத்ததானம் பண்ணினாங்களா?""இல்லையே...""உன்னோட ரிலேடிவ் சர்க்கிளிலோ, ஃப்ரண்ட்ஸ் சர்க்கிளிலோ யாருக்காவது எய்ட்ஸ் நோய் இருந்ததா?""இல்லை.""எய்ட்ஸ் தடுப்பு நோய் கேம்ப்கள் நடக்கிற இடங்களுக்குப் போய் வாலண்டியரா சர்வீஸ் பண்ணினது உண்டா?""இல்லை.""எதுவுமே இல்லைன்னா எப்படி? சமீபத்துல உடம்புக்கு முடியாம ஏதாவது ஹாஸ்பிடல்ல படுத்துட்டிருந்தியா?""ஹாஸ்பிடல்ல படுக்கலை. ஆனா...""சொல்லு.""போனமாசம் ஒரு நாள் சாயந்திரம் எனக்கு திடீர்னு காய்ச்சல் அடிச்சது. மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் கட்டுப்படலை. ரெண்டு தெரு தள்ளியிருந்த ஒரு டாக்டரோட க்ளினிக்குக்குப் போனேன். அந்த டாக்டர் எனக்கு இஞ்ஜெக்ஷன் பண்ணினார்.""எந்த டாக்டர்?""டாக்டர் சர்வேஸ்வரன்.இஞ்ஜெக்ஷனை டாக்டர் போட்டாரா, இல்லை நர்ஸ் போட்டாளா?""டாக்டர்தான் போட்டார்.""ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ணினாரா?""பண்ணலை.""எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்றே?""நான் டாக்டர்கிட்டே போனபோது அவர் எங்கேயோ வெளியே கிளம்பிப் போகத் தயாராயிருந்தார். நான் போனதுமே டெம்பரேச்சர் பார்த்துட்டு. இன்ஜெக்ஷன் போடணும்னு சொன்னார். நர்ஸ் ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ணப் போகும்போது, "வேண்டாம்அதுக்கெல்லாம் நேரமில்லை'ன்னு சொல்லி டாக்டர் ஊசி போட்டார்.""சந்தேகமே இல்லை. ஸ்டெரிலைஸ் பண்ணாத அந்த ஊசி மூலமாத்தான் எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. கிருமிகள் உன்னோட ரத்தத்தில் கலந்திருக்கு. சில டாக்டர்கள் ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு ஊசியைப் போடறதனால ஏற்படுகிற விபரீதம் இது."ஹரீஷின் உடம்புக்குள் பாய்ந்து கொண்டிருந்த ரத்தமெல்லாம் சட்டென்று வற்றிவிட்ட மாதிரியான உணர்வு. மண்டைக்குள் நட்சத்திரங்கள் வெடித்தன. 'ஸ்டெரிலைஸ் பண்ணாத அந்த ஊசி மூலமாத்தான் எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. கிருமிகள் உன்னோட ரத்தத்தில் கலந்திருக்கு'. டாக்டர் சொன்ன இந்த வாசகம் ஹரீஷின் மனசுக்குள் பெரியதாய்க் கோஷமிட்டது.டாக்டர் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்ல வாயைத் திறந்த விநாடி. அவர் முதுகுக்குப் பின்னால் நடைச் சத்தம் கேட்டது.திரும்பினார்.கலவர முகமாய் நர்ஸ்
Disponible depuis: 08/02/2024.
Longueur d'impression: 84 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Voir livre
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Voir livre
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Voir livre
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Voir livre
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Voir livre
  • Galugambada Atankadali - cover

    Galugambada Atankadali

    D V Guruprasd

    • 0
    • 0
    • 0
    'ಸಾವಿನ ಸೆರಗಿನಲ್ಲಿ' ಕೃತಿಯ ಎರಡನೆಯ ಭಾಗವೇ ಈ ಕೃತಿ, 'ಗಲ್ಲುಗಂಬದ ಆತಂಕದಲ್ಲಿ'. ಇದರ ಹೆಸರೇ ಸೂಚಿಸುವಂತೆ ಮರಣದಂಡನೆಯ ಶಿಕ್ಷೆಗೆ ಈಡಾಗಿರುವ ಕೈದಿಗಳ ಕಥೆಗಳ ಗುಚ್ಛವಿದು.
    Voir livre