Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
திக் திக் டிசம்பர் - cover

திக் திக் டிசம்பர்

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

ஹரீஷ் அதிர்ந்துபோய் டாக்டரை ஏறிட்டான். அவர் முகம் இறுகிப்போய் லேப் டெக்னீஷியனை எரிச்சலாய்ப் பார்த்தார். 'பேஷண்டுக்கு நினைவு திரும்பி விட்டதா இல்லையா என்பதைக்கூடக் கவனிக்காமல் இப்படியா உண்மையைப் போட்டு உடைப்பது?' கோபமாய் கண்களால் கேட்ட கேள்விக்கு லேப் டெக்னீஷியன் முகம் வெளுத்து. "ஸாரி" என்று முனகினார்.ஹரீஷ் தடுமாற்றமாய் உடல் நடுங்க எழுந்து உட்கார்ந்தான். "டா... டாக்டர்...! எ... எனக்கு எ... எய்ட்ஸ் நோயா?"டாக்டர் ஓர் இன்ஸ்டண்ட் புன்னகை பூத்தார். "நோ... நோ... அவர் சொன்னது உன்னைப்பத்தி அல்ல. யூ ஆர் நார்மல்.""டாக்டர்... என்கிட்ட எதையும் மறைக்காதீங்க. இவர் என்பேரைச் சொன்னதை நான் கேட்டுட்டேன். எனக்கு எய்ட்ஸ் நோயா டாக்டர்?"டாக்டர் பெருமூச்சொன்றை விட்டபடி. கவலை ஈஷிக்கொண்ட முகத்தோடு தலையாட்டினார்."எஸ்... இது எய்ட்ஸோட ஆரம்ப நிலை.""டா... டாக்டர்... இது... எனக்கு எப்படி...?""அதை... நீதான் சொல்லணும் எய்ட்ஸ் ஒருத்தரைத் தாக்க எத்தனையோ வழிகள் இருக்கு. உனக்கு மோசமான பெண்கள்கிட்டே தொடர்பு இருக்கா?""இல்லை...""உனக்குக் கல்யாணம்...?""இன்னும் ஆகலை.எந்தப் பெண்ணோடவாவது சமீபத்துல...?""இல்லை.""பொய் சொல்லக் கூடாது.""சத்தியமா இல்லை டாக்டர் என்னோட அத்தை பொண்ணு மீராவைக்கூட நான் தொட்டுப் பேசினது இல்லை.""சமீபத்துல உனக்கு யாராவது ரத்ததானம் பண்ணினாங்களா?""இல்லையே...""உன்னோட ரிலேடிவ் சர்க்கிளிலோ, ஃப்ரண்ட்ஸ் சர்க்கிளிலோ யாருக்காவது எய்ட்ஸ் நோய் இருந்ததா?""இல்லை.""எய்ட்ஸ் தடுப்பு நோய் கேம்ப்கள் நடக்கிற இடங்களுக்குப் போய் வாலண்டியரா சர்வீஸ் பண்ணினது உண்டா?""இல்லை.""எதுவுமே இல்லைன்னா எப்படி? சமீபத்துல உடம்புக்கு முடியாம ஏதாவது ஹாஸ்பிடல்ல படுத்துட்டிருந்தியா?""ஹாஸ்பிடல்ல படுக்கலை. ஆனா...""சொல்லு.""போனமாசம் ஒரு நாள் சாயந்திரம் எனக்கு திடீர்னு காய்ச்சல் அடிச்சது. மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் கட்டுப்படலை. ரெண்டு தெரு தள்ளியிருந்த ஒரு டாக்டரோட க்ளினிக்குக்குப் போனேன். அந்த டாக்டர் எனக்கு இஞ்ஜெக்ஷன் பண்ணினார்.""எந்த டாக்டர்?""டாக்டர் சர்வேஸ்வரன்.இஞ்ஜெக்ஷனை டாக்டர் போட்டாரா, இல்லை நர்ஸ் போட்டாளா?""டாக்டர்தான் போட்டார்.""ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ணினாரா?""பண்ணலை.""எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்றே?""நான் டாக்டர்கிட்டே போனபோது அவர் எங்கேயோ வெளியே கிளம்பிப் போகத் தயாராயிருந்தார். நான் போனதுமே டெம்பரேச்சர் பார்த்துட்டு. இன்ஜெக்ஷன் போடணும்னு சொன்னார். நர்ஸ் ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ணப் போகும்போது, "வேண்டாம்அதுக்கெல்லாம் நேரமில்லை'ன்னு சொல்லி டாக்டர் ஊசி போட்டார்.""சந்தேகமே இல்லை. ஸ்டெரிலைஸ் பண்ணாத அந்த ஊசி மூலமாத்தான் எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. கிருமிகள் உன்னோட ரத்தத்தில் கலந்திருக்கு. சில டாக்டர்கள் ஊசியை ஸ்டெரிலைஸ் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு ஊசியைப் போடறதனால ஏற்படுகிற விபரீதம் இது."ஹரீஷின் உடம்புக்குள் பாய்ந்து கொண்டிருந்த ரத்தமெல்லாம் சட்டென்று வற்றிவிட்ட மாதிரியான உணர்வு. மண்டைக்குள் நட்சத்திரங்கள் வெடித்தன. 'ஸ்டெரிலைஸ் பண்ணாத அந்த ஊசி மூலமாத்தான் எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. கிருமிகள் உன்னோட ரத்தத்தில் கலந்திருக்கு'. டாக்டர் சொன்ன இந்த வாசகம் ஹரீஷின் மனசுக்குள் பெரியதாய்க் கோஷமிட்டது.டாக்டர் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்ல வாயைத் திறந்த விநாடி. அவர் முதுகுக்குப் பின்னால் நடைச் சத்தம் கேட்டது.திரும்பினார்.கலவர முகமாய் நர்ஸ்
Verfügbar seit: 08.02.2024.
Drucklänge: 84 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Anjathe Anju - cover

    Anjathe Anju

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "இரண்டு பணக்கார இளைஞர்கள் தனியாக உட்கார்ந்து குடிபோதையில் பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேடிக்கையாக பேச ஆரம்பித்த ஒரு விஷயம் வினையாக மாறுகிறது.
    
    அதாவது என்னதான் திட்டம் போட்டு ஒருவரை கொலை செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து கொலையாளியால் தப்ப முடியாது. அவன் ஏதாவது தப்பு செய்து மாட்டிக்கொள்வான் என்று ஒருவன் சொல்ல, இன்னொரு நண்பன் அதை மறுக்கிறான்.
    
    "புத்திசாலித்தனமாய் யோசித்து துல்லியமாய் திட்டம் போட்டு ஒருவரை கொலை செய்தால் போலீஸையும், சட்டத்தையும் ஏமாற்ற முடியும். ஒரு கொலை செய்கிறேன். நான்தான் கொலை செய்தேன் என்பது போலீஸுக்கு எந்தக்காலத்திலும் தெரியப் போவதில்லை. ஒரு வருட கால அவகாசம். போலீஸ் கையில் நான் மாட்டிக் கொள்ளாவிட்டால் உன் சொத்தை என்னுடைய பெயர்க்கு நீ எழுதி வைக்க வேண்டும். நான் மாட்டிக்கொண்டல் என்னுடைய சொத்து உனக்கு..."
    
    இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
    
    பந்தயப்படி அந்த நண்பன் கொலை செய்தானா.... கொலை செய்திருந்தால் பிடிபட்டானா? என்பதை சொல்லும் கதைதான் அஞ்சாதே அஞ்சு."
    Zum Buch
  • Yaarendru Mattum Sollathe - cover

    Yaarendru Mattum Sollathe

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    இது காதல் கலந்த அமானுஷ்ய மர்ம நாவல்! ஒரு நாகமணிக்கல் தான் இந்த நாவலின் மையம்.. ஒரு பணக்கார பெண்மணியும், ஜமீன்தார் ஒருவரும் இந்த கல்லுக்காக போட்டி போடுகிறார்கள். இதனுடே சித்தர்களும் வந்து போகிறார்கள். ஒரு காதல் கதைக்குள் எப்படி இதெல்லாம் என்கிற கேள்விக்கு 24 அத்தியாயங்களில் யாரும் எதிர்பாத்திராத ஒரு பதிலை தருகிறது இந்த நாவல். கேளுங்கள் -- ஒரு புதிய உலகுக்குள் நுழைந்தது போல் இருக்கும்.
    Zum Buch
  • Adipatta Puli - cover

    Adipatta Puli

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    Coimbatore city is rocked by two terrorist bomb blasts. The mastermind behind them is Karuppasamy who has escaped police custody and joined a terrorist group as a 'consultant'. He sends letters to the Police commissioner's office in advance through courier, giving hints about the upcoming blasts. He demands the release of the arrested terrorist leader Shahul Iqbal. Two more blasts were in the offing. Did the police succumb? Did they trace the location of Karuppusamy? What is the role of the young college-going son of a Police officer who lies in bed recovering from gun-shots, in the complex process of investigations? Did the police thwart the subsequent bomb blasts?
    
    கோயம்புத்தூர் நகரம் அடுத்தடுத்த இரண்டு தீவிரவாத வெடிகுண்டுகளால் அதிர்கிறது. தீவிரவாதிகளுக்குப் பின்னால் மூளையாக இருந்து செயல்படுபவன் கருப்பசாமி. போலீஸ் காவலில் இருந்து தப்பித்த அவன், வெடி குண்டு வைப்பதற்கு அந்த பயங்கரவாதக் குழுவுக்கு 'ஆலோசகராக' இருக்கிறான். போலீசை சீண்டும் விதத்தில் , வரவிருக்கும் குண்டுவெடிப்பு பற்றிய குறிப்புகளைக் முன்கூட்டியே தந்து , போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குக் கூரியர் மூலம் கடிதங்கள் அனுப்புகிறான். கைது செய்யப்பட்ட பயங்கரவாதத் தலைவன் 'ஷாகுல் இக்பாலை' விடுதலை செய்ய கோருகிறான்.
    
    மேலும் இரு குண்டுவெடிப்புகள் நிகழ இருக்கின்றன. போலீசார் அடிபணிந்தார்களா? அவர்கள் கருப்புசாமியின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார்களா? போலீஸ் விசாரணைகளின் மூலம் துப்புத் துலக்குவதில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு படுக்கையில் கிடக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் இளம் மகனான கல்லூரி மாணவனின் பங்கு என்ன? அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளை காவல்துறை முறியடித்ததா?
    Zum Buch
  • Thamaraikulam - cover

    Thamaraikulam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"
    Zum Buch
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Zum Buch
  • Kaatraai Varuven - cover

    Kaatraai Varuven

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    பரபரப்பான நாவல். இறந்தவர் காற்றாக ஆவியாக திரும்ப வந்து தன் விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள முயலும் ஒரு கதை. விஞ்ஞானமும் இதில் கலந்திருக்கிறது. ஒரு புகை பட நிபுணன் எடுக்கும் ஒரு படத்தில் ஆவி ஒன்றின் வடிவம் அகப்பட அவன் அதை ஆராய முயல்வதில் உருவாகும் டென்ஷன் நாவல் முழுதும் தொடர்கிறது. பரபரப்பின் உச்சம் இந்த நாவல்.
    Zum Buch