Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
தேவி - cover

தேவி

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

தேவிக்குத் தனியாகச் சிந்திக்க வேண்டியிருந்தது!‘என் தோழியைப் பார்க்கப் போகிறேன்’ என்று அத்தையிடம் சொன்னாள். அத்தையின் பதிலை எதிர்பாராமலே விரைவாக வெளியே நடந்து விட்டாள். சற்றுத் தயங்கினால் கூட அத்தை தடுத்து விடுவாள் என்பது அவளுக்குத் தெரியும். இப்போதுகூட தேவிக்காக அவளுடைய தங்கை செல்வி அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பாள் என்பது தேவிக்கு செந்தாமரை தேவிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்ன செய்வது? சுயமான சிந்தனைக்கு அந்த வீட்டில் இடமே கிடையாதே, சிந்திக்காமல் எப்படிச் செயல்பட முடியும்?செந்தாமரை தேவி, வெண் தாமரைச் செல்வி. ஆகா நிரம்பவும் பொருத்தம் பார்த்துதான் அப்பாவும், அம்மாவும் பெயர் சூட்டி விட்டார்கள். தன் தோழிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டுமானால் உறைவாங்க இருபது பைசா கூட தேவியிடம் கிடையாது! செல்வியோ அத்தையின் அதட்டலில் எட்டாவதோடு படிப்பை நிறுத்தி விட்டாள். தேவியின் திடமும் துணிவும் அவளுக்கும் இருந்திருந்தால் அவளும் மேலே படித்திருப்பாள். ஆனால், அவள் வெறும் கோழை, முதுகெலும்பே கிடையாது.லேசான புருவச் சுளிப்புடன் தேவி மேலும் வேகமாக நடக்கலானாள்.வைகையின் வெண்மணல் பரப்பு விரிந்து அகன்று பரந்து கிடந்தது. “வா மகளே, உனக்கு என்ன வேதனை? என்னிடம் சொல்லி ஆறுதல் பெற்றுக் கொள்’ என்று ஓடையாகச் சென்ற ஆறும் மணலும் அழைப்பது போல் தேவிக்குத் தோன்றியது. சட்டென விழிகளில் நீர் மல்கியது. சுற்றுப்புறத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதிருந்தால் அப்படியே குப்புற விழுந்து அழுதிருப்பாள்.அழுதிருப்பாளா! அதுவும் சந்தேகம்தான். தேவியைப் பொறுத்தவரையில் அழுவது கோழைத்தனம். அதிலும் மற்றவர் பார்க்க அழுவது என்றால் சே! அவமானம்! ஆத்திரத்துடன் தலையைச் சிலுப்பிக் கொண்டாள். நிமிர்ந்து நேராக நடந்தாள். தன் வழக்கமான இடத்தை அடைந்தாள்.
 
வைகை ஆற்றுப் பாலத்தின் ஒருபுறமாக பாலத்தைத் தாங்கும் கரையோரத் தூண் மீது சாய்ந்தபடி, அவள் அமர்ந்தாள். மெல்லிய நீண்ட விரல்கள் பட்டு மணலில் கோலமிட்டன. பூமணலின் பூக்கோலம், பாவையின் மனதிலோ எண்ணத்தின் கோலம்.எண்ணுவதற்கும் அதிகமாக ஒன்றும் இல்லை. சசி அக்கா சொல்லுவதை ஏற்பதா வேண்டாமா? இரண்டில் ஒன்று முடிவு செய்ய வேண்டும்.செல்விக்கும் அவளுக்கும் இந்தப் பிறவியில் ஒரு விடிவு காலம் வேண்டும் என்றால், சசி அக்கா சொல்வதை ஏற்பதுதான் வழி. ஆனால், குடும்பத்தை விட்டுப் பிரிந்தாக வேண்டும். பிரிய முடியாதபடி யாருக்கும் யாரிடமும் பற்றும் பாசமும் உருகி ஓடுவது ஒன்றும் இல்லைதான். ஆனால் செல்வியும் தேவியும் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட வேண்டியதிருக்கும். ஒரு கவலை கலக்கம் என்றால், காப்பதற்குப் பெரியவர்கள் இருக்கமாட்டார்கள்.இப்போதும் கலக்கத்தை தீர்க்க யாருமே கிடையாது. என்றாலும் தனியே இருக்கும் பெண்கள் தானே என்று யாரும் வாலாட்ட முடியாது. அதுவும்தான் எப்படிச் சொல்வது? அத்தையின் அக்கா மகன் ஒரு தடியன் வந்திருக்கிறானே அவன் செல்வியைப் பார்த்து விசில் அடிப்பதும் கொச்சையாகப் பாடுவது... எல்லாம் அத்தை கொடுக்கும் இடம். செல்வியும் பயந்து ஓடுகிறாள். அந்த நாய் விரட்டுகிறது. திரும்பி நின்று ஒருதரம் முறைத்தால் கூடப் போதும். அதற்குக் கூடத் துணிவின்றி நடுங்கிக் கொண்டு கிடக்கிறாள் மக்கு!இந்தக் கஷ்டத்தில் இருந்து அவளை மீட்க எந்தப் பெரியவர்கள் இருக்கிறார்கள்? இந்தப் பெரியவர்களை நம்பி எட்டிப் பார்க்கும் விடிவு காலத்தை விட்டு விடுவதா?சிந்தனையில் மூழ்கிக் கிடந்த தேவிக்கு சுற்றுப்புறமே மறந்திருந்தது.‘சுளீர்’ என்று யாரையோ அறையும் ஓசையும் “அய்யோ சத்தியமாய் நான் திருடவில்லையே” என்று ஒரு சிறு பெண்ணின் கதறலும் வெகு அருகில் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தாள்.கதறிய குரல் அறிமுகமானது போலவும் தோன்றியது. சுற்று முற்றும் பார்த்தாள். பாலத் தூணின் மறுபுறம்தான் அங்கே விரைந்து ஓடினாள்
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 136 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Kamparamayanam Aranyakantam - cover

    Kamparamayanam Aranyakantam

    Kampar

    • 0
    • 0
    • 0
    கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 
    3            ஆரண்ய காண்டம் 13 படலங்கள் 
    விராதன் வதைப் படலம் 
    சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 
    அகத்தியப் படலம் 
    சடாயு காண் படலம் 
    சூர்ப்பணகைப் படலம் 
    கரன் வதைப் படலம் 
    சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 
    மாரீசன் வதைப் படலம் 
    இராவணன் சூழ்ச்சிப் படலம் 
    சடாயு உயிர் நீத்த படலம் 
    அயோமுகிப் படலம் 
    கவந்தன் படலம் 
    சவரி பிறப்பு நீங்கு படலம் 
    இராமன் காட்டில் விராதன், சரபங்கன், அகத்தியர், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார். அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறார். இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள். ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான். இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான். அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள். இராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார். வழியில் சடாயு சீதையை மீட்கப் போராடி வீழ்கிறார். சீதையை இல்லத்தில் காணாது தேடி வரும் சகோதரர்களுக்கு இராவணனைப் பற்றிக் கூறிவிட்டு உயிர்விடுகிறார் சடாயு.
    Voir livre
  • Kamparamayanam Yuththakantam 2 - cover

    Kamparamayanam Yuththakantam 2

    Kampar

    • 0
    • 0
    • 0
    கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 
    6            யுத்த காண்டம்         42 படலங்கள் 
    22. பிரமாத்திரப் படலம் 
    23. சீதை களம்காண் படலம் 
    24. மருத்துமலைப் படலம் 
    25. களியாட்டுப் படலம் 
    26. மாயா சீதைப் படலம் 
    27. நிகும்பலை யாகப் படலம் 
    28. இந்திரசித்து வதைப் படலம் 
    29. இராவணன் சோகப் படலம் 
    30. படைக் காட்சிப் படலம் 
    31. மூலபல வதைப் படலம் 
    32. வேல் ஏற்ற படலம் 
    33. வானரர் களம் காண் படலம் 
    34. இராவணன் களம் காண் படலம் 
    35. இராவணன் தேர் ஏறு படலம் 
    36. இராமன் தேர் ஏறு படலம் 
    37. இராவணன் வதைப் படலம் 
    38. மண்டோதரி புலம்புறு படலம் 
    39. வீடணன் முடி சூட்டு படலம் 
    40. பிராட்டி திருவடி தொழுத படலம் 
    41. மீட்சிப் படலம் 
    42. திருமுடி சூட்டு படலம் 
    43. விடை கொடுத்த படலம் 
    இராமன் இலங்கைக்குப் பாலம் அமைத்து வானரப் படையுடன் சென்று, இராவணனுடன் போர் செய்கிறான். அப்போது இராவணனின் சகோதரன் வீடணன் இராமனுடன் இணைந்து கொள்கிறான். இராமன் இராவணனுடைய தம்பியான கும்பகருணன், மகன் இந்திரசித்து என அனைவரையும் போரிட்டுக் கொல்கிறார். இறுதியாக இராவணனைக் கொன்று வீடணனுக்கு இலங்கையைத் தந்துவிட்டு, சீதையை மீட்டு அயோத்திக்குச் செல்கிறார். அயோத்தியில் இராமருக்குப் பட்டாபிசேகம் நடைபெற்றது.
    Voir livre
  • Manimegalai Full Story - மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் - Tamil Audio Book - cover

    Manimegalai Full Story -...

    Seethalai Saathanar

    • 0
    • 0
    • 0
    மணிமேகலைக் காப்பியம் – சங்க இலக்கிய காலத்து புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்று. சீத்தலைச் சாத்தனார் எழுதிய இக்காப்பியம் புத்த மதக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. தமிழ் பண்பாடு, மதம், வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் இந்த ஆடியோபுக் அனைவருக்கும் பயன்படும்.
    Voir livre
  • Narrinai - cover

    Narrinai

    Sangam Poets

    • 0
    • 0
    • 0
    எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியத்தில் ஒன்று. 
    நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்களில் 'நல்' என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவார். நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம். நற்றிணையில் 7 அடிகள் கொண்ட பாடலும் 13 அடிகள் கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
    நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. இஃது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் 'நல்' என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவார். நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம். நற்றிணையில் 7 அடிகள் கொண்ட பாடலும் 13 அடிகள் கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குற
    Voir livre
  • Vajramukutarayana Kathe - cover

    Vajramukutarayana Kathe

    Krishnamurthy Hunoor

    • 0
    • 0
    • 0
    Short story by Krishnamurthy Hunoor
    Voir livre
  • Ondu Soligi Godi - cover

    Ondu Soligi Godi

    Raghvendra Patil

    • 0
    • 0
    • 0
    Short story by Raghvendra Patil
    Voir livre