Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
ஒரு சின்ன மிஸ்டெத் - cover
LER

ஒரு சின்ன மிஸ்டெத்

ரமணிசந்திரன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

ஸ்ரீபதி ட்ரேடர்ஸ்.எட்டுக்குடிக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த டவுனின் மையப் பகுதியல் அமைந்திருந்தது அந்த பம்ப்செட் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. சதுரம் சதுரமான ஷெல்ஃபுகளில் பம்ப்செட் ஸ்பேர்கள் இனம் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.மேஜையோரம் நின்றிருந்த அந்த காக்கிப் பேன்ட்-பதினாறு வயசுப் பையன் கஸ்டமர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.“யார் ஸார் வேலும்?”“எங்கேடா உன் முதலாளி?”“இப்ப வந்துடுவார் ஸார்...”“இப்பன்னா எப்போ?”“எட்டரை மணிக்கு...”தன் வாட்சில் பார்வையைப் போட்டார்.8.25“எட்டரைன்னா ஒரு எட்டே முக்கால் ஆகுமா...?”“அதெப்படிங்க...? எட்டரைன்னா எட்டரைக்குத்தான் வருவார்...”ஒரு ஃபோல்டிங் சேரை எடுத்து விரித்துப் போட்டான்.இப்படி உக்காருங்க ஸார்... அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவார். முதலாளி கொஞ்சம் ஆசாரமானவர். வீட்ல பூஜை... அது... இதையெல்லாம் முடிச்சுட்டு - கோயிலுக்கு போய்ட்டு அப்புறமாத்தான் இங்கே வருவார்...”அவன் சொல்லி முடித்த விநாடி வாசலில் மொபெட் சத்தம். கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்திருந்தான். நீலநிறப் பூக்கள் தெறித்த டி.ஸி. சர்ட்டை உடம்புக்குக் கொடுத்து, வேஷ்டி கட்டியிருந்தான். நெற்றி நிறைய திருநீற்றுப்பட்டை, நடுவில் ஒரு குங்குமக் கீற்று. அசப்பில் கொஞ்சம் ‘முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் மாதிரி பார்வையை வருடினான்.“குட்மார்னிங் ஸார்...”“குட்மார்னிங்!”கிருஷ்ணமூர்த்தி மொபெட்டை ஸ்டாண்ட் இட்டுவிட்டு கடைப்படிகளில் ஏறினான். உட்கார்ந்திருந்த அந்த கஸ்டமர் எழுந்தார்.“வந்து ரொம்ப நேரமாச்சுங்களா?”“இல்லே... இப்பத்தான் வந்தேன்.”“மன்னிக்கணும்... கோயில்ல பூஜை முடிய லேட் ஆயிடுச்சு...”“இருக்கட்டுங்க... இதுக்கு எதுக்கு மன்னிப்பு கின்னிப்பு எல்லாம்?”கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தபடியே நாற்காலிக்கு உடம்பைக் கொடுத்தான். எட்டுக்குடியின் பரம்பரைப் பாரம்பரியமுள்ள அந்த கோவிந்தராஜ் குடும்பத்தில் மூன்றாவது சகோதரன் இந்த கிருஷ்ணமூர்த்தி. இந்த முப்பத்தைந்தாவது வயதில் கையிலுள்ள ஆறுவயசுப் பையனைப் டவுன் எல்கேஜில் சேர்த்திடலாமா அல்லது கிராமத்து எலிமெண்ட்ரி பள்ளியிலேயே தவழவிடலாமா? என்று பெரிதாய் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான்.கஸ்டமர்களிடம் இவன் பேசினால் அதில் ஒரு நயம் இருக்கும்... அந்த நயத்துக்காகவே இவன் வியாபாரம் நிமிர்வோடே இருக்கிறது
Disponível desde: 13/01/2024.
Comprimento de impressão: 59 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Adipatta Puli - cover

    Adipatta Puli

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    Coimbatore city is rocked by two terrorist bomb blasts. The mastermind behind them is Karuppasamy who has escaped police custody and joined a terrorist group as a 'consultant'. He sends letters to the Police commissioner's office in advance through courier, giving hints about the upcoming blasts. He demands the release of the arrested terrorist leader Shahul Iqbal. Two more blasts were in the offing. Did the police succumb? Did they trace the location of Karuppusamy? What is the role of the young college-going son of a Police officer who lies in bed recovering from gun-shots, in the complex process of investigations? Did the police thwart the subsequent bomb blasts?
    
    கோயம்புத்தூர் நகரம் அடுத்தடுத்த இரண்டு தீவிரவாத வெடிகுண்டுகளால் அதிர்கிறது. தீவிரவாதிகளுக்குப் பின்னால் மூளையாக இருந்து செயல்படுபவன் கருப்பசாமி. போலீஸ் காவலில் இருந்து தப்பித்த அவன், வெடி குண்டு வைப்பதற்கு அந்த பயங்கரவாதக் குழுவுக்கு 'ஆலோசகராக' இருக்கிறான். போலீசை சீண்டும் விதத்தில் , வரவிருக்கும் குண்டுவெடிப்பு பற்றிய குறிப்புகளைக் முன்கூட்டியே தந்து , போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குக் கூரியர் மூலம் கடிதங்கள் அனுப்புகிறான். கைது செய்யப்பட்ட பயங்கரவாதத் தலைவன் 'ஷாகுல் இக்பாலை' விடுதலை செய்ய கோருகிறான்.
    
    மேலும் இரு குண்டுவெடிப்புகள் நிகழ இருக்கின்றன. போலீசார் அடிபணிந்தார்களா? அவர்கள் கருப்புசாமியின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார்களா? போலீஸ் விசாரணைகளின் மூலம் துப்புத் துலக்குவதில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு படுக்கையில் கிடக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் இளம் மகனான கல்லூரி மாணவனின் பங்கு என்ன? அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளை காவல்துறை முறியடித்ததா?
    Ver livro
  • Kodu Thaandadhe - cover

    Kodu Thaandadhe

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    There is a limit to all the atrocities that happen in this society. However, 90% of us ignore the unjust incidents around us. The rest 10% alone raise their voice against injustice. This story is about 4 such people who raise their voice. What do they do? Listen to Kodu Thaandathe.
    
    எந்த ஒரு அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் எல்லை உண்டு. இந்த சமுதாயத்தில் நடக்கும் சில அநீதிகளை நாம் கண்டும் காணாமலும் கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். நம்மில் 90% பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். வெகு அரிதாக உள்ள 10% பேர் மட்டுமே துணிச்சலோடு முன்வந்து குரல் கொடுக்கிறார்கள். அந்த 10% பேரில் உள்ள ஒரு நான்கு பேரின் கதைதான் இந்த கோடு தாண்டாதே. நம் தமிழ்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு ஒரு எல்லைக்கோட்டை அந்த நான்கு பேரும் வரைந்து எச்சரிக்கை விடுகிறார்கள். இந்த நால்வர் என்ன செய்கிறார்கள்? அறிய கேளுங்கள் கோடு தாண்டாதே
    Ver livro
  • Oomatham Pookal - cover

    Oomatham Pookal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    கார்டியாலஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனும், ஹரேஷூம் ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தோடு கூடிய மிகப் பெரிய ஹாஸ்பிடலை நடத்தி நகரில் நல்ல பெயர் எடுத்து இருப்பதால் அவர்களுக்கு எதிரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கெட்டப் பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மறைமுக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அனந்த கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
    
    போலீஸ் விசாரணையில் இறங்கி டாக்டர்கள் அனந்த கிருஷ்ணனுக்கும், ஹரேஷூக்கும் எதிராகவும், மறைமுகமாகவும் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது, அவர்களால் முடியாமல் போகவே க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் அதிரடியாய் விசாரணையில்
    இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
    விவேக்கின் புத்திசாலித்தனமான நுணுக்கமான புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி யார் என்பது தெரியும்போது அனைவர்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி
    ஏற்படுகிறது.
    
    "அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? "க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்.
    Ver livro
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Ver livro
  • Karuppu Malligai - cover

    Karuppu Malligai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஜ்வாலா இயக்கம் என்னும் தீவிரவாத கூட்டம் மூன்று இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க நினைக்க, அந்த திட்டத்தை எஸ்.பி. தனசேகர், அவருடைய தங்கை சங்கீதா மற்றும் பாம் ஸ்ஃவாட் சுனில் குமார் முறியடித்து விடுகிறார்கள். மிக விறு விறுப்பாகவும், சுவாரஸ்யமாயும் இந்த கதை செல்கிறது.
    Ver livro
  • Yandhira Jaalam - cover

    Yandhira Jaalam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is the story of Yantras and Mantras! The protagonist who tries to kill himself is saved by a monk and he gives a Yantra to him. In 48 days, the protagonist becomes a Lakhpati. The monk asks for the Yantra back. What does he do? Listen to Yandhira Jaalam.
    
    யந்திர மந்திர தந்திரத்தில் யந்திரம் ஒன்றின் ஜாலத்தை சொல்லும் கதை இக்கதை. தற்கொலைக்கு முயல்பவன் கையில் ஒரு சன்யாசி யந்திரம் ஒன்றை தந்து பூஜிக்க சொல்கிறார். 48  நாளில் லட்சாதிபதி ஆகிறான் அவன். தான் கொடுத்ததை திரும்ப கேட்கிறார். அவன் தந்தானா?
    Ver livro