¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
ஒரு சின்ன மிஸ்டெத் - cover

ஒரு சின்ன மிஸ்டெத்

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ஸ்ரீபதி ட்ரேடர்ஸ்.எட்டுக்குடிக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த டவுனின் மையப் பகுதியல் அமைந்திருந்தது அந்த பம்ப்செட் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. சதுரம் சதுரமான ஷெல்ஃபுகளில் பம்ப்செட் ஸ்பேர்கள் இனம் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.மேஜையோரம் நின்றிருந்த அந்த காக்கிப் பேன்ட்-பதினாறு வயசுப் பையன் கஸ்டமர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.“யார் ஸார் வேலும்?”“எங்கேடா உன் முதலாளி?”“இப்ப வந்துடுவார் ஸார்...”“இப்பன்னா எப்போ?”“எட்டரை மணிக்கு...”தன் வாட்சில் பார்வையைப் போட்டார்.8.25“எட்டரைன்னா ஒரு எட்டே முக்கால் ஆகுமா...?”“அதெப்படிங்க...? எட்டரைன்னா எட்டரைக்குத்தான் வருவார்...”ஒரு ஃபோல்டிங் சேரை எடுத்து விரித்துப் போட்டான்.இப்படி உக்காருங்க ஸார்... அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவார். முதலாளி கொஞ்சம் ஆசாரமானவர். வீட்ல பூஜை... அது... இதையெல்லாம் முடிச்சுட்டு - கோயிலுக்கு போய்ட்டு அப்புறமாத்தான் இங்கே வருவார்...”அவன் சொல்லி முடித்த விநாடி வாசலில் மொபெட் சத்தம். கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்திருந்தான். நீலநிறப் பூக்கள் தெறித்த டி.ஸி. சர்ட்டை உடம்புக்குக் கொடுத்து, வேஷ்டி கட்டியிருந்தான். நெற்றி நிறைய திருநீற்றுப்பட்டை, நடுவில் ஒரு குங்குமக் கீற்று. அசப்பில் கொஞ்சம் ‘முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் மாதிரி பார்வையை வருடினான்.“குட்மார்னிங் ஸார்...”“குட்மார்னிங்!”கிருஷ்ணமூர்த்தி மொபெட்டை ஸ்டாண்ட் இட்டுவிட்டு கடைப்படிகளில் ஏறினான். உட்கார்ந்திருந்த அந்த கஸ்டமர் எழுந்தார்.“வந்து ரொம்ப நேரமாச்சுங்களா?”“இல்லே... இப்பத்தான் வந்தேன்.”“மன்னிக்கணும்... கோயில்ல பூஜை முடிய லேட் ஆயிடுச்சு...”“இருக்கட்டுங்க... இதுக்கு எதுக்கு மன்னிப்பு கின்னிப்பு எல்லாம்?”கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தபடியே நாற்காலிக்கு உடம்பைக் கொடுத்தான். எட்டுக்குடியின் பரம்பரைப் பாரம்பரியமுள்ள அந்த கோவிந்தராஜ் குடும்பத்தில் மூன்றாவது சகோதரன் இந்த கிருஷ்ணமூர்த்தி. இந்த முப்பத்தைந்தாவது வயதில் கையிலுள்ள ஆறுவயசுப் பையனைப் டவுன் எல்கேஜில் சேர்த்திடலாமா அல்லது கிராமத்து எலிமெண்ட்ரி பள்ளியிலேயே தவழவிடலாமா? என்று பெரிதாய் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான்.கஸ்டமர்களிடம் இவன் பேசினால் அதில் ஒரு நயம் இருக்கும்... அந்த நயத்துக்காகவே இவன் வியாபாரம் நிமிர்வோடே இருக்கிறது
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 59 páginas.

Otros libros que te pueden interesar

  • Thirakkadha Kadhavugal - cover

    Thirakkadha Kadhavugal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    The protagonist meets his boss in his hotel suite. When he is talking, he gets shocked to see the prostitute who comes to meet the boss. Why is he shocked? How does it impact his family? Listen to Thirakkadha Kadhavugal.
    
    தான் பணிபுரியும் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப்
    பேசுவதற்காக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறான் கதையின் நாயகன். அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அந்த அதிகாரியை சந்தோஷப்படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓர் அழகான பெண் வருகிறாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்து போகிற கதையின் நாயகனுக்கு அடுத்தடுத்து வரும் குழப்பங்கள்தான் ஒட்டு மொத்த கதையும். குழப்பத்திற்கான பதில் கேட்டு எந்தக் கதவைத் தட்டினாலும் அந்தக்கதவு திறக்கப்படுவதில்லை. இறுதியில் ஒரு கதவு திறந்த போது அவனுக்குக் கிடைத்த பதில்தான் என்ன ?
    Ver libro
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Anónimo

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Ver libro
  • Oru Gram Dhrogam - cover

    Oru Gram Dhrogam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும்.
    
    இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கடைசிப் பகுதியை நீங்கள் கேட்கும்போதுதான் தெரியும். கதையின் மையக்கரு ஒரு விஞ்ஞான விஷயம்தான். அது சோலார் எனர்ஜி சம்பந்தப்பட்டது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சோலார் எனர்ஜியை உபயோகப்படுத்தி எத்தனையோ அதிசயங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு அற்புதம் இந்த நாவலிலும் நிகழ்த்தப்படுகின்றது.
    
    இந்த விஞ்ஞான த்ரில்லர் நாவலில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர் விவேக் நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் வருகிறார். அவர் குற்றவாளிகளை நோக்கி நெருங்க வகுக்கிற வியூகங்கள் கேட்க வாசகர்களைத் திகைக்க வைக்கும்.
    
    ஒட்டுமொத்த நாவலும் டெல்லியோடு சம்பந்தப்பட்டது என்பதால், டெல்லிக்கு போய்விட்டு வந்த உணர்வும் வாசகர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி."
    Ver libro
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver libro
  • Vivek Irukka Bayamen - cover

    Vivek Irukka Bayamen

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    This is a political thriller. A dramatic political change in Tamil Nadu. Work is going on behind the scenes for the plot to occur. For that an MP is coming to Chennai from Delhi with a bizarre plan. Traumatic events are layered within the execution of that plan. Unexpected deaths. Vivek is all set to find out the facts. Listen to Vivek Irukka Bayamen to know how he sets things in place.
    
    இது ஒரு அரசியல் த்ரில்லர். தழிழ்நாட்டில் அதிரடியான ஒரு அரசியல் மாற்றம்
    நிகழ்வதற்காக திரைமறைவில் சதி பின்னும் வேலை நடக்கிறது. அதற்காக
    டெல்லியிலிருந்து ஒரு விபரீதமான திட்டத்தோடு எம்.பி.ஒருவர் சென்னைக்கு வருகிறார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் அடுக்கடுக்காய் அதிர்ச்சி சம்பவங்கள். எதிர்பாராத மரணங்கள். உண்மைகளைக் கண்டறிய விவேக் களம் இறங்குகிறான். விவேக்கின் கூர்மையான விசாரணை உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது.
    Ver libro
  • Brahmaratchas - cover

    Brahmaratchas

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    "'Brahmaratchas' is a novel by Kottayam Pushpanath. It was published in the period of the 1980s. It is one of the most famous among his works.
    It reveals the culture of rural people and their belief in that period. The novel revolves around mythological beliefs.
    The novel has been translated into many languages ​​such as Malayalam, Hindi and Tamil etc.
    'Brahmarakchas' was made into a movie in Malayalam.
    "பிரம்மராட்சஸ்" கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை. இது 1980 களில் வெளியிடப்பட்டது. அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானது. கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்தை பற்றி எடுத்துக்காட்டுகிறது.புராண நம்பிக்கைகளையும் எடுத்தியம்புகிறது. மலையாளம் ,ஹிந்தி, தமிழ் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷஸ் மலையாளத்தில் ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது."
    Ver libro