Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
ஒன்று இரண்டு இறந்து விடு - cover

ஒன்று இரண்டு இறந்து விடு

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

காரைப் பார்த்ததும், வாயிலிருந்த பீடிக்கு வாலண்டரி ரிடையர்மெண்ட் கொடுத்த கூர்க்கா, காம்பௌண்ட் கேட்டை வேகவேகமாய் திறந்துவிட்டான்.கார் உள்ளே நுழைந்து போர்டிகோவில் அதங்கி நின்றது. ஹரிஹரேஷ் காரை விட்டு இறங்காமல் கீதாம்பரியை ஏறிட்டான்.“கீத்து...”“ம்...”“நீ படுத்து தூங்கு... நான் ஸ்டார்லைட் ஹோட்டல் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்...”கீதாம்பரி சிணுங்கிக் கொண்டே - அவனுடைய தோளில் குத்தினாள்.“நீங்க அந்த ஸ்டோரி டிஸ்கஷனுக்கு போய்த்தான் ஆகணுமா...?”“என்ன கீத்து... இப்படி கேட்டுட்டே... நாளைக்கு மத்தியானம் நாம் சிங்கப்பூர் புறப்படறோம்... திரும்பி வர ஒரு மாசமாயிடும்... இன்னிக்கு கே.ஜே.ஆர். மூவீஸ் கதையை பைனலைஸ் பண்ணிட்டுப் போனாத்தான்... நான் திரும்பி வர்றதுக்குள்ளே ஸ்கிரிப்ட் ரெடியாயிருக்கும்...”“சரி... டிஸ்கஷன் முடிஞ்சு எத்தனை மணிக்கு வருவீங்க?”“எப்படியும் மூணு மணி ஆயிடும்... எவ்வளவு நேரமானாலும் நான் வந்துடறேன். நீ எனக்காக தூங்காமே காத்திட்டிருக்க வேண்டாம் கீத்து.”கீதாம்பரி காரைவிட்டுக் கீழே இறங்கினாள். காரைச் சுற்றிக் கொண்டு ஹரிஹரேஷிடம் வந்தாள்ஜெயக்குமாரைப் பத்தி போலீஸ் கம்பளையண்ட் தர வேண்டாமா...?“நான் ஸ்டார்லைட் ஹோட்டலுக்குப் போற வழியில்தானே போலீஸ் ஸ்டேஷன்...? இன்ஸ்பெக்டர் அபு தாஹிர் ட்யூட்டியில் தான் இருப்பார். ஸ்ட்ராங்கா ஒரு கம்பளைய்ண்ட் எழுதி குடுத்துட்டு போயிடறேன்... வரட்டுமா...?”“கொஞ்சம் குனிங்க...”“எதுக்கு...?”“குனிங்க... சொல்றேன்.”ஹரிஹரேஷ் குனித்தான்.அடுத்த விநாடி -அவனுடைய கன்னத்தில் 'பச்' சென்று முத்தமிட்டாள் கீதாம்பரி. ஹரிஹரேஷ் புன்னகைத்து - “எதிர்பாராத இனிய அதிர்ச்சிக்கு என்னுடைய நன்றி...”காரைக் கிளப்பினான்.“சீக்கிரமா வந்துடுங்க.”“ம்...”கார் காம்பௌண்ட் கேட்டைக் கடந்து - ரோட்டில் பாய்ந்தது. போக்குவரத்து வெறிச்சோடிப் போயிருந்த சென்னை நகர ரோடுகளில் கார் பயணித்து - ஒரு பத்து நிமிஷத்தை விழுங்கியபின் - அந்த போலீஸ் ஸ்டேஷனின் வாசலுக்கு முன்னால் நின்றது.ராத்திரி கேஸ் நான்கைந்தைப் பிடித்து மிரட்டிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் அபுதாஹிர் - ஹரிஹரேஷைப் பார்த்ததும் - இருக்கையை விட்டு எழுந்தார். (ஹரிஹரேஷின் ஹைஸ்கூல் நண்பன்)“வாங்க டைரக்டர் ஸார்... என்ன இந்நேரத்துல... ஏதாவது ஸ்டுடியோ பிராப்ளமா...?”“நோ... நோ... என்னோட பிராப்ளம் தான். ஒரு கம்பளையண்ட் கொடுக்கணும்...”கம்ப்ளைய்ண்ட் ... யார் மேலே...?”“தொப்பியைக் கழட்டி வெச்சுகிட்டு... என்னோட கார்க்கு வாங்க இன்ஸ்பெக்டர்... கொஞ்சம் ப்ரெண்ட்லியா பேசணும்...”அபுதாஹிர் அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிளை ஏறிட்டார்.“யோவ் ட்ரிபிள் ஃபோர்... புடிச்சுட்டு வந்த நாலு கழுதைகள் மேலேயும் எப்... ஐ... ஆர். புக் பண்ணி உள்ளே தள்ளய்யா... நான் வந்ததும் முட்டிக்கு முட்டி தட்டலாம்...”ஹரிஹரேஷும், அபுதாஹிரும் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். இன்ஸ்பெக்டர் அபு தொப்பியில்லாத தன் தலையை இரண்டு கைகளாலும் கோதிக்கொண்டே கேட்டார்.“என்னடா, வீட்ல ஏதாவது பிராப்ளமா...?”“ஆமா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி - கீதாம்பரியோட மொதல் புருஷன் நடு ரோட்ல எங்களை மறிச்சு... என்னையும் அவளையும் கேவலமா பேசினான்.”“என்ன பேசினான்...? மிரட்டினானா?”“மிரட்டலை...”“பின்னே...?”
Verfügbar seit: 08.02.2024.
Drucklänge: 102 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Zum Buch
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Zum Buch
  • Galugambada Atankadali - cover

    Galugambada Atankadali

    D V Guruprasd

    • 0
    • 0
    • 0
    'ಸಾವಿನ ಸೆರಗಿನಲ್ಲಿ' ಕೃತಿಯ ಎರಡನೆಯ ಭಾಗವೇ ಈ ಕೃತಿ, 'ಗಲ್ಲುಗಂಬದ ಆತಂಕದಲ್ಲಿ'. ಇದರ ಹೆಸರೇ ಸೂಚಿಸುವಂತೆ ಮರಣದಂಡನೆಯ ಶಿಕ್ಷೆಗೆ ಈಡಾಗಿರುವ ಕೈದಿಗಳ ಕಥೆಗಳ ಗುಚ್ಛವಿದು.
    Zum Buch
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Zum Buch
  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Zum Buch
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Zum Buch