Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
முடிந்தால் உயிரோடு - cover

முடிந்தால் உயிரோடு

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

மாருதியை போர்டிகோவுக்குள் கொண்டு போய் அடக்கி கீழே இறங்கின மகளை ஆர்வமாய் எதிர்கொண்டார் சத்தியநாராயணன். பப்ளிமாஸ் நிற வழுக்கை மண்டைக்கு நடுவில் வெள்ளி இழைகளாய் நான்கைந்து நரைமுடிகள் திசைக் கொன்றாய் கோபித்துக் கொண்டு நிற்க தன் பெரிய சைஸ் மூக்கின் மேல் வெள்ளி பிரேமிட்ட கண்ணாடியை உட்கார்த்தி வைத்திருந்தார்.“என்னம்மா வர்ணா... போன காரியம் என்னாச்சு...?”“சக்சஸ்தாம்பா...?”“எவ்வளவு வெச்சு பாக்டரியை எடுத்தே...?”“இருபத்தஞ்சு லட்சம்...'“மோசமில்லை. இன்னிக்கி இருக்கிற நிலவரப்படி அந்த ஏரியாவில் ஒரு செண்ட் அறுபதாயிரத்துக்கு போகும்... சீப்தான்...! மாப்பிள்ளை என்ன சொன்னார்.”“உங்க மாப்பிள்ளைதானே... ரொம்ப கோபப்பட்டார். உன்னை இங்கே யார் வரச் சொன்னதுன்னு கத்தினார்... நான் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டேன்... வரமாட்டேனுட்டார்...”“சரி... உன்னோட அடுத்த ஸ்டெப் என்னம்மா வர்ணா...?” ஹாலில் நடந்து போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டே கேட்டார் சத்தியநாராயணன்.“அடுத்த வாரத்துல ஏதாவது ஒருநாள். அந்த பாக்டரியை எம்பேர்க்கு மாத்தின டாக்குமென்டரியோட அவர் வீட்டுக்குப் போகப் போறேன். பல்லு பிடுங்கின சிங்கம் மாதிரி இருக்கிற அவரை என்னோட வழிக்கு கொண்டுட்டு வரப்போறேன்... நீங்க யு.எஸ்.ஏ. போயிட்டு திரும்பி வர்றப்போ... உங்க மாப்பிள்ளை என்கிட்டகையேந்திகிட்டு நின்னுட்டிருப்பார்... உங்க நெடுநாளைய ஆசைப்படி அவரை நம்ம பாக்டரிக்கு ஒரு ஜி.எம். போஸ்ட்டுக்கு இழுத்துக்கலாம்...”“எனக்கென்னமோ நம்பிக்கையில்லேம்மா...”“எனக்கிருக்கு...”“அப்பாவும் மகளும் இப்படி நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை. “பின்பக்கமாய் எழுந்த உஷ்ணமான குரலைக் கேட்டு இருவரும் திரும்பினார்கள்.அம்மாக்காரி பூரணி கோப முலாம் அடித்த முகத்தோடு நின்றிருந்தாள். வர்ணா சிரித்தாள்.“நீ சப்போர்ட் பண்ணி பேசற மாப்பிள்ளை இன்னிக்கு எங்கே உட்கார்ந்திருந்தார்ன்னு தெரியுமாம்மா...? பாக்டரி கேட்டுக்குப் பக்கத்துல டைம் ஆபீஸையொட்டின மாதிரி ஒரு நாற்காலியைப் போட்டுகிட்டு உட்கார்ந்திருந்தார். அவர் கண் முன்னாடியே பாக்டரியோட மானத்தை கொஞ்சம் கொஞ்சமா ஏலம் போட்டுகிட்டு இருந்தாங்க...”“அவரை அந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே... நீயும் உங்கப்பாவும் தாண்டி. அந்த நல்ல மனுஷன் உன் கழுத்துல தாலி கட்டின பாவத்துக்காக நாய் படாத பாடு பட்டுட்டார். உங்க அப்பாவோட பாக்டரியையும் கம்பெனியையும் நிர்வாகம் பண்ண அவர் வர மறுத்துட்டார்ங்கிற ஒரேயொரு காரணத்துக்காக அவரை இப்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து மானத்தை வாங்கறது நியாயமா... வர்ணா...”“அம்மா...”“என்னடி...?”“உன்னோட அழகான மாப்பிள்ளைக்கு நல்லது தானே பண்ணியிருக்கோம். ஏலத்துல யார் கைக்கோ போக இருந்த... அவரோட மெட்டல் பாக்டரியை மீட்டுகிட்டு வந்தது தப்புன்னு சொல்றியா?”“ஒரு ஆம்பிளையை இதைவிட அழகா அவமானப்படுத்தவே முடியாது வர்ணா. அவர் உனக்கு அடங்கிப் போகணும்ன்னு நீ நினைக்கிறியே... அது மகா தப்பு. உங்க அப்பா குடுக்கிற செல்லத்துல நீ ரொம்பவும் துள்ளறே... இந்த துள்ளலுக்கெல்லாம் எப்பவாவது ஒரு நாள் நீ அனுபவிக்கப் போறே...”“அப்பா...”“என்னம்மா...?”“அம்மா... சாபம் தர்றா...”“அவளுக்கு சொந்த ஊர் திருக்குவளை. புருஷன் காலடிபட்ட மண்ணை எடுத்து நெத்திக்கு இட்டுக்கிற கிராமத்து பஞ்சாங்கம்...”பூரணி வெடித்தாள். “ஆமாங்க... நான் பஞ்சாங்கம்தான். அந்த பஞ்சாங்கத்துல என்னென்ன எழுதியிருக்கோ அதைத்தான் வெள்ளைக்காரனும், ஜப்பான்காரனும் இப்போ புதுசு புதுசா கண்டு பிடிச்சிட்டு வர்றான். ஆம்பிளையை எப்படி வேணும்ன்னாலும் வளர்த்து உட்டுடலாங்க... ஆனா பொண்ணை இப்படித்தான் வளர்க்கணும்ன்னு ஒரு வரைமுறை இருக்குங்க... அவளுக்கு கொம்பு சீவி மாப்பிள்ளை மேலேயே பாய விடறது உங்களுக்கு நியாயமா படுதா...?”“வர்ணா... உங்கம்மா லெக்சர் அடிக்க ஆரம்பிச்சுட்டா. நீ சாவகாசமா உட்கார்ந்து கேளு... நான் கம்பெனிக்கு புறப்படறேன்... பாரின் டூர் கிளம்பறத்துக்குள்ளே சில பைல்ஸையெல்லாம் பார்க்கணும்...”சொல்லிக் கொண்டே போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனார் சத்திய நாராயணன். வர்ணா அலட்சியமாய் கூந்தலை கோதிக் கொண்டே தன் அறைக்கு போக முயன்றாள்
Verfügbar seit: 13.01.2024.
Drucklänge: 88 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Zum Buch
  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Zum Buch
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Zum Buch
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Zum Buch
  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Zum Buch
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Zum Buch