Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கனவு மெய்ப்பட வேண்டும் - cover

கனவு மெய்ப்பட வேண்டும்

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

அன்று காலையிலிருந்தே மைத்திரேயிக்கு ஒரே பரபரப்பு.பல் துலக்கி வந்ததிலிருந்தே தொடங்கிவிட்டாள்! “அம்மா, இன்று தலைக்கு ஷாம்பூ போடுவதா வேண்டாமா?” என்று தாயாரிடம் கேட்டாள்.“போட்டுக் கொள்ளேன். தலைமுடி அழகாகப் பளபளவென்று இருக்கும்!” இது அம்மா சிவகாமி.“என்னம்மா, ஷாம்பூ போடச் சொல்கிறீர்கள்! ஒரு சின்னக் காற்றுக்குக் கூந்தல் பறந்து கலைந்து போய் விடாதா?” இது மைத்திரேயி.“அப்படியானால், ஷாம்பூ போடாதே!”“என்னம்மா, நீங்கள்! அப்புறம், முகமெல்லாம் எண்ணை வழியாதா? நான் வேறு, இன்றைய நேர்முகப் பேட்டியை மறந்து, நேற்று தலையில் எண்ணை வேறு தேய்த்துத் தொலைத்தேன்!” என்று எரிச்சல்பட்டாள் மகள்.“தெரிகிறதில்லையா? பின்னே ஷாம்பூ போட்டு முடி அலசு... அட அட என்னடி நீ? காலை வேளையில், நான். அஷ்டாவதானம்’ செய்கிற நேரத்தில், இன்னும் ஒன்றாய், நீ வேறு என்ன என்னைப் போரடிக்கிறாய்? நீயாய் யோசித்து, உனக்காய்ச் சரி என்று பட்டதைச் செய், போ!” என்று மகளை விரட்டிவிட்டுத் தன் வேலையில் முனைந்தாள் தாய். “இருபத்திரண்டு வயது முடிந்துவிட்டது. இவள் வயதுக்கு நான் இவளைப் பெற்றும் விட்டேன். இவளானால் பச்சைக் குழந்தை மாதிரி எப்படிக் குளிப்பது என்று கேட்டுக் கொண்டு... இருக்கிறாள்!” என்று எரிச்சலோடு முணுமுணுத்தபடி வெட்டி முடித்த காய்களைத் தட்டில் எடுத்து வைத்தாள்.அடுத்து, அவள் வாணலியை அடுப்பில் ‘ணங்’கென்று வைத்த வேகம், தண்ணீர் மோட்டாரை நிறுத்தி விட்டு வந்த சுந்தரத்தைப் பேச வைத்தது. “பெற்றவளுக்கு ரொம்பத் தெரியும் என்று நினைத்து சின்னப்பிள்ளை ஒன்று கேட்டால் பெரிதாகச் சலித்துக் கொள்கிறாயே!”“இதோ, இதைப்பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். சின்னப் பிள்ளையா, அவள்? இருபத்திரண்டு வயது முடிந்து, ஆறேழு மாதங்கள் சென்றாயிற்று ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணத்தைப் பண்ணி வைக்காமல், ‘ட்ராக் சூட்’ போட்டு ஆண்பிள்ளை மாதிரி ஓடக் கூட்டிப் போகிறீர்கள்! இப்போதானால் வேலைக்கு வேறே அனுப்பப் போகிறீர்கள! இப்போது அவள் சம்பாதித்து என்ன ஆகப்போகிறது? காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தை...’“.“என்னடி அவசரம்? இப்போதெல்லாம் இருபத்திநாலு வயதுக்கு முன்னால் யார் பெண்களுக்குத் திருமணம் செய்கிறார்கள்? கொஞ்ச காலம் சுதந்திரமாய் இருக்கட்டுமே! கல்யாணமானால் இருக்கவே இருக்கிறது, கண்டிப்பு, கட்டுப்பாடு எல்லாம். உன்னையே எடுத்துக்கொள்! பத்தொன்பது வயதில் கல்லூரிப்படிப்பு முடியும் முன்பே திருமணம் உடனே குழந்தை! என்றாவது கவலையற்று இருந்திருக்கிறாயா? பிள்ளையாவது சந்தோஷமாய் அனுபவிக்கட்டுமே என்று நினையேன்!”“கல்யாணம், குழந்தை என்றால் கட்டுப்பாடும் கவலையும்தானா? மகிழ்ச்சியாகவும்...அடடா! போங்கள் சார்! காலை வேளையில் வேலை நடுவே வந்து பேச்சுக் கொடுத்தால் இப்படித்தான். பாருங்கள்! கடுகை இரண்டாம் தடவை போட்டிருக்கிறேன்!” என்று அலுப்பும் எரிச்சலுமாக உரைத்தாள் சிவகாமி.“நல்லதுக்குச் சொல்கிற புருஷனோடு மல்லுக் கட்டினாயல்லவா! அப்படித்தான் நடக்கும். டேய், மது, மனோ, இன்றைக்கு உங்களுக்குக் காய்ப் பொரியலுக்குப் பதிலாக, உன் அம்மா கடுகுப் பொரியல் செய்திருக்கிறாளாமடா! நன்றாகச் சாப்பிடுங்கள்! நல்லவேளையாக எனக்கு மதியச் சாப்பாடு வெளியே! கலெக்டர்கள் கூட்டம் மதிய உணவோடு சேர்ந்து இருக்கிறது! தப்பித்தேன்!” என்று அவர் சிரிக்கவும் சிவகாமியின் முகம் லேசாகச் சிவந்தது
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 136 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • தித்திப்புயல் நீயடா :Thithippuyal Neeyada - College Friendly Romance with Possessive Love - cover

    தித்திப்புயல் நீயடா...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    சட்டென்று, அவள் உடலை தாவணியென மறைத்திருந்த ஆடையை அவன் கரம் உருவி எடுத்தது.. 
     அர்ஜுனிடம் இத்தகைய செயலை எதிர்பார்க்காதவள் “அஜூ... என்ன பண்ற? டோன்ட் பிகேவ் லைக் திஸ், எனக்கு பிடிக்கலை?” என்று அழுத்தமாக அவன் முகம் பார்த்து கூறினாள். 
    கீர்த்தியின் பேச்சில் அவளை மெல்ல விட்டு விலகியவன் கண்களோ அவள் மேனியை அணுஅணுவாக ரசனையாக துளைத்தது. 
    அவளை பார்த்தபடியே “எஸ், எனக்கும் தான்... எனக்கும் தான் பிடிக்கலை. இந்த கல்யாணம் பிடிக்கலை... உன்னை பிடிக்கலை... என்ன பண்ணலாம்?” என்றவன் அவன் இடுப்பில் கைகுற்றி, சற்றே அவள் முன் குனிந்து, 
    ”கல்யாணத்தை நிறுதீடலாமா?” என்று ஆழ்ந்த குரலில் வினவவும்,, 
    அதிர்ந்த விழிகளுடன் “அஜூ...” என்றவள் விழிக்க, 
    “எஸ், வேற வழியில்லை. பாரு, இந்த டிரெஸ்ல நீ எவ்ளோ அழகா இருக்க! எந்த ஆம்பளைக்குமே உன்னை இப்படி பாத்தா என்ன தோணனும்?” என்றவன் விழிகள் பயணித்த இடங்கள் பெண்ணவளை உடல் கூச செய்தது. 
    அர்ஜுன் பார்வை எப்போதும் கண்ணியமானது. அதுவும் அவள் மேல் மிக கண்ணியமாக இருக்கும். அவன் அருகாமை கீர்த்திக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வை மட்டுமே கொடுக்கும். பயஉணர்வை அல்ல. 
    இப்போது அவன் பார்வை, அவன் அவளிடம் நடந்து கொண்டிருக்கும் விதம் அணைத்தும் அவளுக்கு அவன் மேல் அச்சத்தைக் கொடுத்தது. 
    இத்தனை வருட நட்பில், அர்ஜுன் அவளை பயமுறுத்தக் கூட இப்படி பேசியதில்லை.  
    “அஜூ... ஸ்டாப் திஸ். ஸ்டுபிட் மாதிரி பேசாத, திஸ் இஸ் நாட் யூ. நான் போகணும்” என்றவள் நகரப்போக, தன்னிரு கைகளால் அவளுக்கு அணைகட்டியவன், அவளை நெருங்கி நின்றான்.
    Voir livre
  • பரிசு - cover

    பரிசு

    வெள்ளியங்காட்டான்

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    ”அறுகம்புல்லும் ஆலாமரமும் தெய்வங்களல்ல. பஞ்சபூதங்களும் தெய்வங்களல்ல. அவற்றிலிருந்து வெளிப்படும் சக்திகளும் தெய்வங்களல்ல. தத்வமஸி அதுவே நாமான அவைகளின் சாரமாயுள்ள மனிதனின் இருதயத்தில் அடங்கிய சத்தியமே தெய்வம் என்பதை விளக்கவே பரிசு என்ற இந்நூல் எழுதியுள்ளேன்.”  
    வெள்ளியங்காட்டானின் உபநிடதவழித் தத்துவ விளக்கம் பேராசிரியர் ரமணியின் குரலில்…. 
     
    Voir livre
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Voir livre
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Voir livre
  • Ambaraathooni - cover

    Ambaraathooni

    Kabilan Vairamuthu

    • 0
    • 0
    • 0
    AmbaraaThooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future. 
    Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. Now you know why the name! 
    The stories named after characters aren't just characters. They are companions. They stay with you, walk beside you, and sometimes even look you in the eye and ask questions you didn’t know you were ready to answer. 
    Get ready to step into the world of Kabilan Vairamuthu’s AmbaraaThooni. Listen with all your heart. 
    அம்பறாத்தூணி பதினைந்து சிறுகதைகள் கொண்ட புத்தகம் என்று கூறுவதை விட அது பதினைந்து தனித்துவமான உணர்ச்சிகளின் தொகுப்பு என்று சொல்வதே சரி. ஒவ்வொரு கதையும் தனக்கேயுரிய ஒரு குரலில் நம்முடன் பேசுகிறது. சில, வரலாற்றின் மண்ணில் ஆழப் பதிந்தவை; சில, நம்முடைய இன்றைய நொடிகளில் மெல்லப் பூக்கின்றவை; சில, எதிர்காலத்தின் கதவுகளை மெல்லத் தட்டுபவை. 
    ஒவ்வொரு கதையும் ஒரு கூரிய அம்பு, தன் இலக்கை அடைய தேவையான விசையுடன் பாய்ந்து வரும் அம்பு. புத்தகத்தின் பெயர் காரணம் புரிந்ததல்லவா? 
    கதாபாத்திரங்களின் பெயரைக் கொண்ட இந்தக் கதைகள், வெறும் பாத்திரங்கள் அல்ல; அவை தனிமையை இனிமயாக்கும் உறவு போன்றவை. உங்களுடன் பயணித்து, உங்கள் தோளோடு தோள் உரசி, சில நேரங்களில் உங்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, உங்களுக்குள் ஆழமான சில கேள்விகளை மெல்ல எழுப்பும் துணை. 
    செவியும் மனமும் திறந்து, கேளுங்கள் கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி.
    Voir livre
  • Sandhosham - cover

    Sandhosham

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Voir livre