Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கண்ணிமைக்க நேரமில்லை - cover

கண்ணிமைக்க நேரமில்லை

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

நந்தா வீறிட்டாள்.“அ... அண்ணா…!”கார் கிறீச்சிட்டு நின்றது. உத்தம் நெற்றியைப் பிடித்துக் கொண்டு கலவரமானான்.“இப்படி திடீர்ன்னு குறுக்கே ரோட்டை கடப்பாள்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை நந்தா…”“வா… இறங்கிப் பார்க்கலாம்…”“வேண்டாம் நந்தா…! போயிடலாம்… கார்மோதி தூக்கி எறிஞ்ச வேகததுல... அந்தப் பொண்ணு கண்டிப்பா செத்திருப்பா! இறங்கிப் பார்த்துட்டிருந்தா… பிரச்சினையில் மாட்டிக்குவோம்…”“ஒரு வேளை... அந்தப் பொண்ணு உயிரோட இருந்துட்டா…?”“நந்தா...! அவ உயிரோடு இருந்தா என்ன…? செத்துப் போயிருந்தாதான் என்ன…? இந்த விபத்தைப் பார்த்தவங்க யாரும் இல்லை... நாம இங்கிருந்து எவ்வளவு சீக்கிரத்தில் கிளம்பறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது…’“ஒரு நிமிஷம் இறங்கிப் பார்த்துடலாம்.”“வேண்டாம் நந்தா...! நான் சொல்றதைக் கேளு, நாம பாட்டுக்கு போயிட்டே இருப்போம்…”“எனக்கு மனசு கேக்கலை... அண்ணா...” நந்தா சொல்லிக்கொண்டே காரின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினாள், நிசப்தமான இருட்டின் பின்னணியில் சில்வண்டுகள் விதவிதமாய் சுருதி சேர்த்துக் கொண்டிருக்க, நந்தா பத்தடி தள்ளி குப்புற விழுந்திருந்த அந்தப் பெண்ணை நெருங்கினாள்.குனிந்தாள்.தலையில் இரத்தக்காயம் தெரிய – அந்தப் பெண்ணின் உடல் லேசாய்த் துடித்துக் கொண்டிருந்தது. சின்னதாய் முனகல் சத்தம். இரத்தப் பெருக்கை நிறுத்துவதற்காக சேலையைக் கிழித்து தலைக்குக் கட்டுப் போட்ட நந்தா திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தாள்.“அண்ணா…!”“என்ன…? போயிட்டாளா...?”“தலையில் மட்டுந்தான்காயம். உயிர் இருக்கு…”“இருந்தா இருக்கட்டும்… வந்து கார்ல ஏறு. நாம போய்க்கிட்டே இருப்போம்…”“நீ முதல்ல இறங்கி வாண்ணா…”“எதுக்கு?”“வா… சொல்றேன்…”“நந்தா...! நீ விபரீத்தை விலை கொடுத்து வாங்கிட்டிருக்கே… வேற ஏதாவது வாகனம் இந்த வழியா வர்றதுக்கு முந்தி வந்து கார்ல ஏறு…”“நீ இப்போ… காரை விட்டு கீழே இறங்கி வரப் போறியா?இல்லையா...?”உத்தம் எரிச்சலோடு காரின் கதவை அறைந்து சாத்திவிட்டு வேக வேகமாய் நடந்து வந்து நந்தாவின் பக்கத்தில் நின்றான்.“என்ன…?”“ஒரு கை பிடி... இந்தப் பொண்ணை நம்ம காருக்கு கொண்டு போயிடலாம்...”“நந்தா...! என்ன உளர்றே…?”“உளரலை அண்ணா... உயிரோடு இருக்கற பொண்ணை இப்படியே விட்டுட்டுப் போனா… கொஞ்ச நேரத்தில் செத்துடுவா… ஏதாவது மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துட்டு போயிடுவோம்...”உத்தம் கோபத்துக்குப் போனான். “நந்தா! நீ புரிஞ்சு பேசறியா…? இல்ல புரியாம பேசறியா…? இந்தப் பொண்ணை மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தா… விபத்து எப்படி நடந்துசுன்னு டாக்டர் கேக்க மாட்டாங்களா?”“கண்டிபப்பா கேப்பாங்க...”“அப்படி கேட்டா என்ன பதில் சொல்றது…?”“ஒரு பொய் தயாராயிருக்கு…”“என்ன பொய்…?”“நாங்க கார்ல வரும் போது ரோட்டோரமா இந்தப் பொண்ணு விழுந்துகிடந்தா… என்னாச்சுன்னு தெரியலை. உடம்பை சோதிச்சுப் பார்த்தோம். உயிர் இருக்கவே கொண்டு வந்துட்டோம்…”ரோட்டின் மேல் வளைவில் ஏதோ ஒரு வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சம் தெரிந்து ஹாரன் சத்தம் கேட்டது.“பீங்க்கக்க…’“அண்ணா...! ஏதோ... வாகனம் வந்துட்டிருக்கு. யோசனை பண்ண நேரமில்லை. ஒரு கை பிடி. இவளை காருக்கு கொண்டு போயிடுவோம்…”“நந்தா...! நான் சொல்றதைக் கொஞ்சம்…”“அண்ணா…! வர்ற வாகனம் போலீஸ் ஜீப்பாக்கூட இருக்கலாம்… ம்… சீக்கரம்… இவளைத் தூக்கு…”உத்தம் நந்தாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே கீழே குனிந்து அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கினான். கைகளில் இரத்தம் பிசுபிசுத்தது.
Available since: 02/08/2024.
Print length: 137 pages.

Other books that might interest you

  • Vittu Vidu Karuppaa - cover

    Vittu Vidu Karuppaa

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    The village of Vettaikara Mangalam has a strange rule. Only if the village deity Karuppusamy approves, will the villagers do anything. A doctor falls in love with Ratna, a young girl from the village. When he proposes, she asks him to seek the approval of Karuppusamy. Who is this Karuppusamy? Doctor Neena comes in search of the answer. What does she find out? Listen to Vittu Vidu Karuppa.
    
    வேட்டைக்காரன் மங்கலம் கருப்புசாமி துடியான சாமி. இந்த சாமி உத்தரவு தந்தால் தான் யாரும் எதையும் செய்யலாம். இந்த ஊரை சேர்ந்த ரத்னாவை டாக்டர் ஒருவர் காதலிக்க ரத்னா கருப்பு உத்தரவு தராது என்னை காதலிக்காதே என்கிறாள். கருப்பு யார் காதலிக்க அனுமதி தர? டாக்டர் நீனா என்பவள் உண்மையை கண்டறிய வருகிறாள். கண்டுபிடித்தாளா?
    
    ஒரு கிராமத்து மர்மம் தான் விட்டு விடு கருப்பா!
    Show book
  • Kadathal Kaatru - cover

    Kadathal Kaatru

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான். இவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும், எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள். ஒரு ஹீரோவின் அத்தனை லட்சணங்களும் பொருந்திப்போகும் இவன், நிஜத்தில் ஹீரோவா , வில்லனா? தாவூத் இஸ்மாயில் . போலீஸ் இவனுக்கு நண்பனா எதிரியா? இப்படிப்பட்ட திறமைசாலிக்கு வேறு எதிரிகள் இருக்கமுடியுமா? இப்போது எதற்காக இவன் இந்தியா வந்திருக்கிறான்? அவனை தீர்த்துக்கட்டத் தயாராக இருக்கும் எதிரிகள் அவனை சும்மா விடுவார்களா? பரபரப்பான திருப்பங்களும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும் நிறைந்த இந்த நாவலை எழுதியவர், கோட்டயம் புஷ்பநாத். மலையாளத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விறுவிறுப்பான நாவல்களை எழுதிய இவரின் படைப்புகள் தமிழ், ஹிந்தி, வங்காளம், குஜராத்தி உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
    Show book
  • Brahmaratchas - cover

    Brahmaratchas

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    "'Brahmaratchas' is a novel by Kottayam Pushpanath. It was published in the period of the 1980s. It is one of the most famous among his works.
    It reveals the culture of rural people and their belief in that period. The novel revolves around mythological beliefs.
    The novel has been translated into many languages ​​such as Malayalam, Hindi and Tamil etc.
    'Brahmarakchas' was made into a movie in Malayalam.
    "பிரம்மராட்சஸ்" கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை. இது 1980 களில் வெளியிடப்பட்டது. அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானது. கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்தை பற்றி எடுத்துக்காட்டுகிறது.புராண நம்பிக்கைகளையும் எடுத்தியம்புகிறது. மலையாளம் ,ஹிந்தி, தமிழ் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷஸ் மலையாளத்தில் ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது."
    Show book
  • Neela Nilaa - cover

    Neela Nilaa

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Students studying archaeology decide to venture into a deep forest to research about an old fort. Despite the warnings by the forest department, they enter the forest. Did they reach the fort? What is the relationship between the fort and moon? What is Blue Moon? Listen to Neela Nila!
    
    அடர்த்தியான ஒரு காட்டுப்பகுதிக்குள் இருக்கிறது ' காணாதது கண்டான் ' என்கிற ஒரு பழங்காலத்து கோட்டை. எந்த காலத்திலோ கட்டப்பட்ட அந்தக் கோட்டையை ஆய்வு செய்வதற்காக ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சில ஆராய்ச்சி மாணவ மாணவிகள் வருகிறார்கள். வனத்துறை எச்சரிக்கையையும் மீறி அவர்கள் காட்டுப் பகுதிக்குள் நுழைகிறார்கள்.
    அவர்களால் ' காணாதது கண்டான் ' கோட்டையை அடைய முடிந்ததா.....? எதைத் தேடி அவர்கள் வந்தார்கள். அவர்கள் தேடிவந்த பொருளுக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்? நிலா சரி! அது என்ன நீல நிலா ......... ?
    Show book
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Anonymous

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Show book
  • Thirakkadha Kadhavugal - cover

    Thirakkadha Kadhavugal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    The protagonist meets his boss in his hotel suite. When he is talking, he gets shocked to see the prostitute who comes to meet the boss. Why is he shocked? How does it impact his family? Listen to Thirakkadha Kadhavugal.
    
    தான் பணிபுரியும் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப்
    பேசுவதற்காக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறான் கதையின் நாயகன். அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அந்த அதிகாரியை சந்தோஷப்படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓர் அழகான பெண் வருகிறாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்து போகிற கதையின் நாயகனுக்கு அடுத்தடுத்து வரும் குழப்பங்கள்தான் ஒட்டு மொத்த கதையும். குழப்பத்திற்கான பதில் கேட்டு எந்தக் கதவைத் தட்டினாலும் அந்தக்கதவு திறக்கப்படுவதில்லை. இறுதியில் ஒரு கதவு திறந்த போது அவனுக்குக் கிடைத்த பதில்தான் என்ன ?
    Show book