Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கோவையில் ஒரு குற்றம் - cover

கோவையில் ஒரு குற்றம்

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

பாரஸ்ட் காலேஜிற்கு கொஞ்சம் தள்ளி - ஏராளமான சவுக்கு மரங்களுக்கு மத்தியில் காவி நிற டிஸ் டெம்பரோடு - அந்த ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் தெரிந்தது. மெயின் ரோட்டிலிருந்து உள்ளே போன - அந்த பத்தடி அகல மண்பாதை கூட வெகு புராதனமாய் வளைந்து வளைந்து போயிருந்தது. 'புதை பொருள் ஆராய்ச்சி நிலையம்' என்கிற வார்த்தைகளை இந்தியிலும் இங்கிலீஷிலும் மொழிபெயர்த்துச் சொன்ன அந்த போர்டு சமீபத்திய மழையிலும் வெய்யிலிலும் வெகுவாய் பாதிக்கப்பட்டிருந்தது. - உள்ளே இருந்த ரீடிங் ஹாலில் -வரிசையாய் நாற்காலிகள் போடப்பட்டிருக்க - ஏழு நாற்காலிகளில் ஜெசிந்தாவிலிருந்து - ஊர்மிளா வரை நிரம்பியிருந்தார்கள். பக்க வாட்டு நாற்காலிகளில் தேவாமிர்தமும் - அகிலா நாராயணனும் மோவாய்களைத் தாங்கி தெரிந்தார்கள். அவர்களுக்கு முன்புறமாய் இருந்த மேடையின்மேல் புரபசர் லிங்கப்பா தன் குறுந்தாடியை இடது கையால் சொறிந்து கொண்டே - வலது கையிலிருந்த குச்சியை சுவரில் மாட்டியிருந்த ஒரு மேப்பின் மேல் நகர்த்திக் கொண்டிருந்தார். மேப்பின் நெற்றியில் சிறுவாணி - வெள்ளியங்கிரி காடுகள் என்று எழுதியிருந்தது. மேப் பூராவும் சிவப்பு புள்ளிகள்.லிங்கப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.“நீங்கள் புறப்பட்டு போக வேண்டிய இடம் சிறுவாணிக்கும் வெள்ளியங்கிரிக்கும் இடைப்பட்ட பாரஸ்ட்... அந்தப் பகுதியை புல்லு மேடுன்னு சொல்லுவாங்க... அடர்த்தியான பாரஸ்ட்... பாரஸ்ட்டுக்குள்ளே தோல் பதனிடுகிற தொழிற்சாலையொண்ணு பல வருஷமா மூடியிருக்கு. அதுல வேலை நடந்தப்போ லேசா ஜனநடமாட்டம் இருந்து வந்தது... ஆனா இப்போ நடமாட்டமே இல்லை...”ஜெசிந்தா எழுந்து நின்றாள்“ஸார்... ஒரு சந்தேகம்?”“என்ன?”“அந்த இடத்துல போய் தோல் பதனிடற தொழிற்சாலையை யார் ஸார் கட்டினாங்க?”“ரோத்மான் என்கிற ஒரு வெள்ளைக்காரன்... ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தஞ்சுல கட்டின தொழிற்சாலை அது... அவனுக்கப்புறம் எத்தனை பேர்கிட்டே அது கைமாறி இப்போ கோயமுத்தூர் மில் ஓனர் ஒருத்தர் கிட்டே இருக்கு... அஞ்சு வருஷம் தொழிற்சாலையை அவரும் நடத்திப் பார்த்தார். முடியலை. மூடிட்டார்...”இதயா எழுந்தாள்.“நாங்க போக வேண்டிய இடம் எது ஸார்...?”“புல்லுமேடு பாரஸ்ட்... பேர்தான் புல்லு மேடு... ஆனா உள்ளே பூராவும் ராட்சச மரங்கள். சூரிய வெளிச்சம் ஒரு சொட்டு கூட கீழே விழாத பூமி... நீங்க தேடிப் போற காளி கோயில் அங்கேதான் இருக்கு. அந்த காளி கோயிலோட பேர் என்ன தெரியுமா...?”புரபசர் லிங்கப்பா நிறுத்திவிட்டு - எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். அவருடைய இடது கை தாடையில் இருந்த சொற்ப தாடியை சட்சட்சென்று வருடிக் கொண்டிருந்தார். அரை நிமிஷ நேரம் ஹால் முழுவதும் நிசப்தம்... பிறகு அந்த நிசப்தத்தை புரபசர் லிங்கப்பாவே கலைத்தார்.“உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயமில்லை... அந்தக் காளியம்மனோட கோயில் பேரு குடல் வாங்கி காளியம்மன் கோயில்... ரொம்பவும் உக்கிரமான காளி... ஒவ்வொரு அமாவாசையன்னிக்கும்தான் பூசாரி அங்கே போவார். உச்சி நேர பூஜையை முடிச்சுகிட்டு உடனே தன்னோட செம்மேட்டு கிராமத்துக்கு போயிடுவார். அந்த கோயிலுக்குன்னு ஒரு ஜனம் கூட போகாது...”சிறிது நேர மௌனத்திற்கு பிறகு - காஞ்சனா மெள்ளமாய் எழுந்து நின்றாள்.“அந்த கோயில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது ஸார்...?“பதினாறாம் நூற்றாண்டு... சேரன் இரும்பொறை காலத்துல அந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம்... எல்லாமே கருங்கல்... காளி சிலையோட உயரம் ஏழடி. உக்கிரம் அதிகம். ஏந்தியிருக்கிற சூலத்துல குடல் தொங்குகிற கோரம்...”சில விநாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு - மறுபடியும் தொடர்ந்தார் லிங்கப்பா...” உங்களுக்கு அந்த காளி சிலையோ... காளி கோயிலோ முக்கியமில்லை... அதைச் சுற்றி இருக்கிற ஐநூறு மீட்டர் தூரம்தான் முக்கியம்... கடந்த அஞ்சு வருஷ காலத்துல மூணு கல்வெட்டுக்களை அங்கிருந்து தோண்டி எடுத்திருக்கோம். நீங்க எப்படியாவது ஒரு கல்வெட்டையாவது கொண்டு வரணும்... உங்க குழு தலைவர் மிஸ்டர் தேவாமிர்தமும் - திருமதி அகிலா நாராயணனும் இந்த ஆர்க்கியாலஜி துறையில் பல வருஷமா ஈடுபட்டு இருக்கிறவர்கள். கல்வெட்டை கொண்டு வர்ற முயற்சியில் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க...”“நாங்க எப்போ புறப்படணும்... ஸார்...?” இதயா மறுபடியும் எழுந்து கேட்க - லிங்கப்பா சொன்னார்.
Disponible depuis: 08/02/2024.
Longueur d'impression: 96 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Jadi Maleya Ratri - cover

    Jadi Maleya Ratri

    Yandamoori Veerendranath

    • 0
    • 0
    • 0
    ಬದುಕು ಇಂಡೆಕ್ಸ್ ಇಲ್ಲದ ರಟ್ಟಿನ ಪುಸ್ತಕ. ಎಚ್ರಿಕೆಯಿಂದ ಹುಡಿಕಿದರೆ ನಮಗೆ ಬೇಕಾದ ಪದಗಳು ಬೇರೆ ಬೇರೆ ಪುಟದಲ್ಲಿ ಸಿಗದೇ ಇರಲಾರವು! ನಾವು ಮಾಡಬೇಕಾಗಿದ್ದು ಅವುಗಳನ್ನು ಸಮನ್ವಯ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು ಮಾತ್ರವೇ...
    Voir livre
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Voir livre
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Voir livre
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Voir livre
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Voir livre
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Voir livre