Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கானமழை நீ எனக்கு! - cover

கானமழை நீ எனக்கு!

ரமணிசந்திரன்

Maison d'édition: Publishdrive

  • 0
  • 0
  • 0

Synopsis

அழகிய மெல்லிய விரல்கள், மடிமீது சாத்தியிருந்த வீணையின் தந்திகளைத் தன் போக்கில் மெல்ல மீட்ட, அதில் எழுந்த இனிய ரீங்காரம் அறையை நிரப்ப, யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பாரதி.சிந்தனையில் சுற்றுப்புறம் மறந்து இலக்கற்று வெளியை வெறித்தபடி அமர்ந்திருந்த நிலையிலும் மகளின் அழகை ரசித்தவாறு சற்றுநேரம் அறை வாயிலிலேயே நின்றாள் சரஸ்வதி.தம்பூரா போலச் சும்மா மீட்டுவது தவிர, மகளின் மோனநிலை கலைவதாக இல்லை என்று நிச்சயப்பட்டு விடவும் பாரதியின் அருகே சென்று, “என்னடா பாரதி, இன்றைய கச்சேரிக்கு வாசிக்க வேண்டிய எல்லாம் வரிசைப்படுத்திக் கொண்டு விட்டாயா? போன வாரக்கச்சேரியில் தோடி வர்ணம் வாசித்தாய், மறக்கவில்லைதானே. இன்றைக்கு... சங்கராபரணத்தில் ‘கருணை செய்...திட... வாசிக்கிறாயா? அடுத்து...” என்றவள் மகள் சும்மா உச்சுக்கொட்டவும் வியந்து, “என்னம்மா?” என்று விசாரித்தாள்.“ஒன்...றுமில்லயம்மா” என்று அலுப்புடன் கூறி வீணையை நகர்த்தி வைத்தாள் பாரதி.“என்னம்மா, சாதகம் செய்யவில்லை?”“என்ன சாதகம் செய்து என்ன, அம்மா? கச்சேரிக்குக் கச்சேரி வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்று கடவுள் வாழ்த்திலிருந்து மங்களம் வரை மாற்றித் திட்டமிட்டு, ஸ்வர சுத்தமாகச் சாதகம் செய்து கஷ்டப்பட்டு வாசிக்கிறோமே, யாராவது முழு ஈடுபாட்டுடன் கேட்கிறார்களா? சபாக்களிலாவது பரவாயில்லை, பத்துக்கு இரண்டு பேராவது ரசித்துக் கேட்கிறார்கள். இந்த மாதிரித் தனியார் நிகழ்ச்சிகள் என்றால் எனக்கு வெறுப்பாக இருக்கிறதம்மா” என்று உரைத்த வண்ணம் வீணையை உறையிலிட்டு, கயிறுகளைக் கவனத்துடன் கட்டினாள் பாரதி
 
பேச்சை நிறுத்தி இதழ்களை இறுக மூடிக் கொண்ட போதும், மகளின் கண்களில் கோபம் குமுறுவதைக் கண்டு “பாரதி, உன்னுடைய கலையே வேறுவிதம். இதே. நாட்டியம் என்றால் கவர்ச்சி என்கிற பெயரில் ஆபாசமாக ஆடலாம். பாட்டில்கூட கண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதற்கேற்ப உடலை ஆட்டிப் பாடலாம். ஆனால் இது... இதில் இதெல்லாம் முடியாது. ஆனால் இது தெய்வீகமான கலை அம்மா. வீணையைப் பார்க்கும் போதே கலைமகளின் நினைவுதானே வருகிறது. மட்டரக ‘கிக்’ வேண்டும் என்பவர்கள் வீணைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யமாட்டார்கள். அதுவும் இவ்வளவு பணம் கொடுத்து தரமான ஓர் இசை விருந்தைத் தானே ரசிக்கும் ஆவலும், தான் ஏற்பாடு செய்யும் விழாவுக்கு வருகிறவர்கள் ரசிப்பார்கள் என்கிற நம்பிக்கையும் இல்லாதவர்கள் இந்தக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வார்களா? சொல்லு. அதனால் ஒட்டு மொத்தமாய் ஒருவரும் ரசிப்பது இல்லை என்று ஒதுக்கக் கூடாதம்மா” என்று இதமான குரலில் எடுத்துரைத்தார் கங்காதரன்.சற்று யோசித்துவிட்டு, “ஒரேயடியாக அப்படியும் சொல்லி விட முடியாது அப்பா. நீங்களே சொன்னது போல வீணையில் பெரிய ‘ஆர்டிஸ்ட்’டின் கச்சேரி வைத்தேன் என்று ஜம்பம் அடிக்கக்கூட என் கச்சேரியை வைக்கலாமே!” என்றாள் பாரதி.மீண்டும் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைக் கவனித்த மகள் சட்டென இளகிப் போனாள். அவளுக்கு எப்போதுமே அவளுடைய பெற்றோரிடம் இது பிடிக்கும். எப்போதும் ஒருவருக்கொருவர் இசைந்து நடப்பதும், திடுமெனப் பிரச்சினைகள் எழும்போதும் ஒருவர் முகத்திலிருந்து அவர் கருத்தை அறிந்து அதற்கேற்ப அடுத்தவர் செயல்படுவதும் காண, கவனிக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும்.ஒவ்வொரு சமயம் உடன் பயின்ற தோழிகள், ‘என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரீ...ய்ய சண்டை’ என்று கூறும்போது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்பாவும் அம்மாவும் எப்படிச் சண்டை போடுவார்கள்?வளரவளர, உலக விவரம் புரியத் தொடங்கிய பிறகு பெற்றோரைப் பற்றிப் பெருமையாக உணர்ந்தாள். அம்மாவுக்கு அமைந்தது போல ஒத்த கருத்து உடைய கணவன் அவளுக்கும் கிடைத்தால்... என்றோர் எண்ணமும் தோன்றியதுண்டு.
Disponible depuis: 03/04/2025.
Longueur d'impression: 92 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • சாவின் முத்தம் - cover

    சாவின் முத்தம்

    Suratha

    • 0
    • 0
    • 0
    சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். 
    வளமான சொற்சுவை குன்றாத அழகு, இயற்கைக்கு ஏற்ற ஆனால் புரட்சிகரமான கருத்துக்கள், இன்பந்தரும் காதற்சித்திரங்கள், புதிய புதிய உவமைகள் இவை சாவின் முத்தம் என்ற இந்தக் கவிதைதொகுப்பில் காணக் கிடக்கின்றன.
    Voir livre
  • Vellikizhamai Raathiri Aval Sethu Ponaal - cover

    Vellikizhamai Raathiri Aval...

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Voir livre
  • பக்திப்பாடல்கள் - cover

    பக்திப்பாடல்கள்

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    பாரதியார் பக்திப்பாடல்கள் வினாயகர் நான்மணி மாலை, முருகன் பாட்டு, வேலன் பாட்டு, கிளிவிடுதூது, எமக்கு வேலை, வள்ளிப்பாட்டு, போற்றி, சிவசக்தி, காணி நிலம் வேண்டும், நல்லதோர் வீணை, சக்திக்கூத்து, சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம், பேதை நெஞ்சே, முத்துமாரி, கண்ணனை வேண்டுதல், நந்தலாலா, கோவிந்தன் பாட்டு, யேசு கிறிஸ்து, அல்லா என்ற இன்னோரன்ன பல தலைப்புகளில் 78 பாடல்களைக் கொண்டது. இவற்றில் சில‌ பல்வேறு வகை இசைப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுள்ளன. இதில் சங்கடம் என்னவென்றால் மொத்தப் பாடல்களில் சிலவற்றையே பலரும் பாடிப் போயிருக்கின்றனர். அந்தச் சிலவும் பார்தியாரின் பக்திக் கோட்பாட்டின் விரிவான பரப்பைக் காட்டுவனவாக அமையவில்லை. ரமணி ஒலி நூலுக்காக அனைத்து 78 பாடல்களும் இந்த நூலில் உள்ளன. கட்டமைக்கப்பட்ட ராக தாள இசைக்குப் புறம்பாக பாவினம் மற்றும் சிற்றிலக்கிய வகைகளில் பரந்த பல வடிவங்களில் பாடவென அமைந்த வடிவில், குறிப்பாக விருத்தம், சிந்து போன்ற பாடல்களுக்கு உரிய ஓசையோடு ரமணி இந்த நூலுக்கு ஒலிவடிவம் கொடுத்திருப்பது தெற்றெனத் தெரியும் சிறப்பாகிறது.
    Voir livre
  • Periyapuranam 2 - cover

    Periyapuranam 2

    Sekkizhar

    • 0
    • 0
    • 0
    பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. 
    இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. 
    பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது. 
    காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது. 
    இந்த ஒலி நூலில் இரண்டாம் காண்டத்தி
    Voir livre
  • Thudiyembo Thudiyilla - cover

    Thudiyembo Thudiyilla

    Raghvendra Patil

    • 0
    • 0
    • 0
    Short story by Raghvendra Patil
    Voir livre
  • Manimegalai Full Story - மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் - Tamil Audio Book - cover

    Manimegalai Full Story -...

    Seethalai Saathanar

    • 0
    • 0
    • 0
    மணிமேகலைக் காப்பியம் – சங்க இலக்கிய காலத்து புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்று. சீத்தலைச் சாத்தனார் எழுதிய இக்காப்பியம் புத்த மதக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. தமிழ் பண்பாடு, மதம், வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் இந்த ஆடியோபுக் அனைவருக்கும் பயன்படும்.
    Voir livre