Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
ஜோடிப் புறாக்கள் - cover

ஜோடிப் புறாக்கள்

ரமணிசந்திரன்

Verlag: Publishdrive

  • 0
  • 0
  • 0

Beschreibung

அன்புத் தோழி மஞ்சுளாவின் வீட்டிலிருந்து வெளியேறிய கவிதா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள்.உடல் தன் போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. உறுதியாகத் தெரிந்துவிட்ட உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறினாள்.“உயிரே நீதான்” என்று சொன்னவன் மாறி விட்டானே!‘வண்ண மலரே’ என்று கொஞ்சியவன் வண்டாகிவிட்டானா?இது உண்மைதானா? எப்படி இருக்க முடியும்? அவளால் நம்ப முடியவில்லை.மின்னாமல் வீழ்ந்த இடிபோல் எண்ணாமல் நேர்ந்த துன்பத்தின் சுமைதாளாமல் தவித்தாள்; தடுமாறினாள். அதுமட்டும் நடுத்தெருவாக இல்லாமல் வீடாக இருந்தால், ‘ஓ’ வென்று கதறியிருப்பாள்.சற்று நின்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டாள்.அதற்குள் சரவணனுடைய சிரித்த முகம் மனதில் எழுந்தது. உள்ளத்தில் கள்ளங்கபடு உள்ளவன் முகமா அது? இல்லவே இல்லை என்று சத்தியம்கூடச் செய்வாள் கவிதா. ஆனால் கண்ணெதிரே அவன் நடந்து கொள்ளும் விதம், அவன் கள்ளமனம் படைத்தவன்தான் என்பதைப் பறை சாற்றியது. மஞ்சுளா தெள்ளத் தெளிவாய்க் கண்டுவிட்டு அல்லவா சொன்னாள்? அவள் சொன்னதில் ஐயத்துக்கு இடம் இல்லையே...“சரவணன், உங்களை நல்லவர் என்று நம்பினேன் கடைசியில் இப்படி மோசம் செய்கிறீர்களே” அவள் இதயம் விம்மியது.‘வெளித்தோற்றத்தைக் கொண்டு ஒருவரை எடை போடாதே’ என்று யார் சொல்லியிருப்பார்கள்? யாரோ நம்போல அனுபவித்தவர்கள்தாம் சொல்லியிருப்பார்கள். ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்று நம்மைஎச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். நாம்தான் என்னவோ நம்மை மிஞ்சிய மூளையில்லை என்று முட்டாள்தனமாக நடந்து கொண்டு பிறகு மாட்டிக்கொண்டு விழிக்கிறோம் என்று நொந்து கொண்டாள்.சரவணன் நல்லவன்! ஒருநாளும் சொல் மாறமாட்டான் என்று கவிதா நம்பிக்கையோடு நினைத்து இருந்தாள். அவனுடைய சீரிய பண்பும், நேரிய நோக்கும் அமைதியான போக்கும் அமரிக்கையான நடவடிக்கையும் அத்தகைய எண்ணங்களை அவள் மனதில் எழுப்பி இருந்தன.கூடவே சரவணனுடைய தூரத்து உறவினன் கோபாலின் நினைவு வந்தது. சில நேரம் சரவணனோடு அவன் வருவான்.அவனுடைய தொங்கு மீசையும், ஓயாத சிகரெட்டால் கறுத்த உதடுகளும், சதா பெண் முகம் நாடி அலையும் கண்களும், மட்டரகச் சிரிப்பும், சே சரவணனே, “அவன் பெண்களிடமும் பழக அருகதை உள்ளவன் அல்ல. நான் இல்லாத நேரம் வந்தால் வெட்டி விடுங்கள்” என்று எச்சரித்திருந்தான். அப்படி எல்லாம் அடுத்தவனைப்பற்றி எச்சரிக்கை செய்தவன், இப்போது அவனைப் போலவே நடந்துவிட்டான். இது எப்படி சாத்தியமாயிற்று?நிமிர்ந்து பார்த்தாள் கவிதா. பஸ் நிற்குமிடம் வந்தாயிற்று. எந்திரம்போல் பஸ்சுக்காக வரிசையில் நின்றாள். ஆனால் நம்ப வைத்து மோசம் செய்தவனைப் பற்றிய எண்ணங்களில் இருந்து மனதை அகற்ற முடியவில்லை. சே... துரோகி.“என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார், வரிசையில் அவள் முன்னே நின்ற ஒருவர்.எண்ணியதோடு மட்டுமின்றி வாய்விட்டுச் சொல்லியும் விட்டோம் என்பதை அறிந்ததும் அவமானமாகிவிட்டது. அவளுக்கு. ‘ஒன்றுமில்லை’ என்று சமாளித்தாள். குனிந்து தன் தங்க நிற மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள். அலுவலகத்திற்கு இன்னமும் நேரம் இருந்தது. இங்கே நிற்பதைவிட அடுத்த ‘ஸ்டாப்’ வரை நடக்கலாம் என்று நினைத்தாள். நடந்தால் நெஞ்சில் சுமை சற்றுக் குறையும் என்று தோன்றவே நடக்கத் தொடங்கினாள்.
Verfügbar seit: 03.04.2025.
Drucklänge: 188 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Kamparamayanam Yuththakantam 1 - cover

    Kamparamayanam Yuththakantam 1

    Kampar

    • 0
    • 0
    • 0
    கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 
    6            யுத்த காண்டம்         42 படலங்கள் 
    1.   கடல் காண் படலம் 
    2.   இராவணன் மந்திரப் படலம் 
    3.   இரணியன் வதைப் படலம் 
    4.   வீடணன் அடைக்கலப் படலம் 
    5.   ஒன்னார் வலிஅறி படலம் 
    6.   கடல் சீறிய படலம் 
    7.   வருணன் அடைக்கலப் படலம் 
    8.   சேது பந்தனப் படலம் 
    9.   ஒற்றுக் கேள்விப் படலம் 
    10. இலங்கைகாண் படலம் 
    11. இராவணன் வானரத்தானை காண் படலம் 
    12. மகுட பங்கப் படலம் 
    13. அணிவகுப்புப் படலம் 
    14. அங்கதன் தூதுப் படலம் 
    15. முதற் போர் புரி படலம் 
    16. கும்பகருணன் வதைப் படலம் 
    17. மாயா சனகப் படலம் 
    18. அதிகாயன் வதைப் படலம் 
    19. நாகபாசப் படலம் 
    20. படைத் தலைவர் வதைப் படலம் 
    21. மகரக்கண்ணன் வதைப் படலம்
    Zum Buch
  • Sandhosham - cover

    Sandhosham

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Zum Buch
  • Kadal Purathil - cover

    Kadal Purathil

    Vanna Nilavan

    • 0
    • 0
    • 0
    இந்தக் கதையில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.
    மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாக்க் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது.
    Zum Buch
  • Oru Thuli Kadal - cover

    Oru Thuli Kadal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இரண்டு தடங்களை வைத்துக் கதை எழுதுவதில் நிபுணரான ராஜேஷ்குமார் அவர்களின் மற்றோர் படைப்பு.
    ஒருபுறம் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்பத்தை கலைக்க பவ்யா என்னும் புயல் வீச வருகிறது. மற்றொருபுறம் தனது தைரியத்தாலும், நேர்மையான தன்மையாலும் வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்கிறாள் மற்றொருவள். அப்புயலின் தாக்கத்தால் அக்குடும்பத்தின் நிலையை அறிய கேளுங்கள் " ஒரு துளி கடல்".
    
    இக்கதையை கேட்டும் வாசகர்கள், இருவேறு தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றிணையும்போது ஆச்சரியம் அடைவார்கள். எழுத்தாளரின் கதை நடை நம்மை கதைக்குள் மூழ்கடிக்கிறது.
    Zum Buch
  • Kaatru Kaatru Uyir - cover

    Kaatru Kaatru Uyir

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Saravanan, a bank officer, builds his dream home upon taking loans. One night, a murder happens in his new home and the body is buried there. Next day, during the house-warming ritual, the ghost of the dead person enters Saravanan's body and seeks revenge! Listen to this blood curdling story - Kaatru Kaatru Uyir to know what happens.
    
    சரவணன் ஒரு வங்கி ஊழியன். கடன் வாங்கி வீடு கட்டுகிறான். அப்படி அவன் கட்டும் வீட்டில் ஒரு இரவில் ஒரு கொலை நடந்து ஒரு இளைஞன் உடல் புதைக்கப்படுகிறது. மறுநாள் கிரஹப்பிரவேசம் செய்யும் சமயம் சரவணன் உடலில், கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் ஆவி புகுந்து தன்னை கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்குகிறது. உடல் உயிர் ஆத்மாவின் ரகசியங்களை கூறும் நாவலே காற்று காற்று உயிர்.
    Zum Buch
  • பட்டினத்தாரின் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும் - cover

    பட்டினத்தாரின்...

    பட்டினத்தார், பத்திரகிரியார்

    • 0
    • 0
    • 0
    பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.  பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.  
    அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதிணென் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் மெய்ஞ்ஞானப் புலம்பல் என்று மிகவும் புகழ் பெற்றவை. மிக எளிய வார்த்தகளையும் ஆழமான பொருளும் கொண்டிருக்கும் பாடல்கள் அவை. 
    இந்த ஒலிநூலில் சந்த ஓசையில் ரமணி படைத்திருக்கும் நூல்கள், அருட்புலம்பல், இறந்தகாலத்திரங்கல், நெஞ்சொடு புலம்பல், பூரணமாலை, நெஞ்சொடு மகிழ்தல், கோயிற்றிருவகவல், தாயார் தகனக்கிரியை, திருத்தில்லை, முதல்வன் முறையீடு, மற்றும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்
    Zum Buch