¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
இரும்பு கனவுகள் - cover

இரும்பு கனவுகள்

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

நான் வாசலை விட்டு இறங்கும் போதே -பூக்காரி எதிர்ப்பட்டாள். இடுப்பில் இருத்திக்கொண்ட கூடையில் - சம்பங்கியும் ரோஜாவும் மலர்ந்தது. பழக்க தோஷத்தால் என்னைப் பார்த்து சிரித்தாள். வெற்றிலைக்காவி பற்களைக் காட்டி கேட்டாள்.“என்னம்மா வேலைக்கு கிளம்பிட்டீங்களா?”“ம்...”“பூ... வேணுமா தாயீ...?”“வேண்டாம்...தலையில இருக்கே...?”“அது மல்லி தானே... ரெண்டு சம்பங்கியையும் சொருகு...”“நீ விடமாட்டியே...?”மணக்கிற சம்பங்கியும், ரோஜாவும்…. என் தலையில் ஏறிக் கொண்டது. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை டம்பப் பையிலிருந்து எடுத்து அவளுடையகையில் திணித்துவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி போனேன். இந்தப் பூக்காரி எனக்கு இரண்டு வருஷமாய் பழக்கம். வாரத்தில் மூன்று நாளாவது நான் வேலைக்கு கிளம்பி வெளியே வரும் போது எதிர்ப்பட்டு விடுவாள். என் தலையில் பூ இருந்தாலும் என்னிடம் போணி பண்ணாமல் நகர மாட்டாள்.இரண்டு நிமிஷ நடையில் பஸ் ஸ்டாப் வந்தது. கூட்டம் அதிகம் இல்லை. ஹிண்டு பேப்பரோடு ஒரு பெரியவர். காய்கறிகூடையோடு ஒரு கிழவி. கல்லூரி மாணவர்கள் போல தோற்றம் காட்டிய இரண்டு இளைஞர்கள். பஸ் ஷெல்டரின் பக்கவாட்டில் ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த போவதாக புதிதாக ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் சொல்லியது. போஸ்டரில் தேவையே இல்லாமல் ஒரு நடிகையின் படம்.நான் போய் ஷெல்டர்க்கு கீழேநின்றேன். மணிக்கட்டில் நேரம் பார்க்க 9.20. பஸ் வர இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது. டிபன் ஃபாக்ஸ் இருந்த பைக்குள் ‘மனோசக்தி’ இதழ் இருப்பது ஞாபகத்துக்கு வரவே -, அதை எடுத்துக் கொண்டு பக்கங்களை புரட்டினேன்.ஒரு நிமிணம் கரைந்திருந்த போது - எனக்கு முன்பாய் ஏதோ வாகனம் ஒன்று வந்து நிற்க கலைந்தேன். நிமிர்ந்தேன்.‘சென்னை தூர்தர்ஷன்’ என்று ஆங்கிலத்திலும் இந்திலும் எழுதப்பட்ட வாசகங்களோடு ஒரு வேன்.நான்கைந்து பேர் இறங்கினார்கள். இரண்டு பேர்களின் கைகளில் காமிரா. ஒருவர் உருண்டை மைக்கோடு என்னை நெருங்கினார். ,“எக்ஸ்க்யூஸ் மீ...! நீ ங்க காலேஜ் ஸ்டூடண்டா...? இல்லை வேலைக்கு போகிற பெண்ணா...?”“வேலைக்கு போயிட்டிருக்கேன்.”“எங்கே...?”“தமிழ்நாடு டூரிஸம் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில்...”“என்ன வேலை...”“டெஸிக்னேஷன் கைடு...”“நீங்க மிஸ்ஸா... மிஸஸா...?”“மிஸ்… “நாங்க சென்னை தூர்தர்ஷன்... நேத்து வெளியான பட்ஜெட்டைப் பத்தி பொது மக்களோடகருத்தை திரட்டிட்டி வர்றோம்... நீங்களும் பட்ஜெட்டை பத்தி கமெண்ட் பண்ணனும்... இந்த பட்ஜெட்டைப் பத்தி என்ன நினைக்கறீங்க...?”நான் புன்னகைத்தேன்.‘‘என்னோட கமெண்ட் எப்படி இருந்தாலும் அதை அப்படியே டி.வி.யில் டெலிகாஸ்ட் பண்ணுவீங்களா...?’’“பண்ணுவோம்...’’“இந்த இந்திய ஜனநாயகத்தில் மக்களுக்கு எப்படி நம்பிக்கையில்லையோ... அதேமாதிரி பட்ஜெட்டில் சொல்லப்படுகிற திட்டங்களிலும் அவங்களுக்கு நம்பிக்கையில்லை. – போடுகிறவரிகளையெல்லாம் முன்னாலேயே போட்டுவிட்டு அப்புறமும் எதுக்காக தனியா பட்ஜெட்…”“அப்படீன்னா… வரியே விதிக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?’’“வரி விதிக்கலாம்... ஆனா... அந்த வரி விதிப்பு மக்களை இம்சைப்படுத்தாமே இருக்கணும்... பூவுக்கு வலிக்காமல் பூவை சேதப்படுத்தாமல் வண்டுதேன் எடுக்குமே... அந்த மாதிரி இருக்க வேண்டும்... ஆனா இப்போது போடப்படுகிற பட்ஜெட்டுக்கள் செடிகளின் ஆணி வேரையே ஹதம் பண்ணுகின்றன...”“இப்போது இருக்கிற நிதி அமைச்சரைப் பத்தி என்ன நினைக்கிறீர்கள்...?”“அவர் தன்னை கெட்டிக்காரர் மாதிரி காட்டிக்கொள்கிறார். அவ்வளவுதான்...”“முடிவாக பட்ஜெட்டைப் பத்தி...?”“ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் சந்தோஷப்படுகிற மாதிரி என்றைக்கு ஒரு பட்ஜெட் வருகிறதோ... அன்னைக்குத்தான் உண்மையான பட்ஜெட்...”நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - தூரத்தில் பஸ்ஸின் முகம் தெரிந்தது. நான் போக வேண்டிய பஸ்
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 78 páginas.

Otros libros que te pueden interesar

  • Sivappaai Sila Pulligal - cover

    Sivappaai Sila Pulligal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A loving husband, beautiful wife and two amazing children. The husband is a professional assassin but also has a full time job in an office. What happens to his family in such a peculiar situation. Listen to Sivappai Sila Pulligal.
    
    ஒரு அன்பான கணவன், அழகான மனைவி, பூத்த மலர்களைப் போல் ஏழு வயதிலும், ஐந்து வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள். கணவன் ஒரு ப்ரொப்ஷனல் கில்லராகவும் இருந்து கொண்டு ஒரு அலுவலகத்தில் நல்ல வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த குடும்பத்தின் நிலைமை என்னவாகும் என்று சொல்கிறது இந்த சிவப்பாய் சில புள்ளிகள்.
    Ver libro
  • Kolai Thodarbukku Appaal - cover

    Kolai Thodarbukku Appaal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Our hero goes to Dubai for a job and stays in a small room. What is his job and why does he face a lot of problems in it? How intelligent are the Dubai Police? Listen Kolai Thodarbukku Appaal to know more.
    
    செல்வம் கொழிக்கும் துபாயில் தமிழர்கள் நிறைய பேர் பல்வேறு பணிகளில்
    இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகனும் துபாயில் ஓர் அறையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அது எது மாதிரியான வேலை என்பதும் அந்த வேலையின் காரணமாய் அவன் சந்திக்கும் பிரச்சினைகளுமே நாவலின் சுவாரஸ்யமான விஷயங்களாய் இருக்கின்றன. துபாய் போலீஸின் கெட்டிக்காரத்தனங்கள் இந்த நாவலில் கூடுதல் கவனத்தோடு சொல்லப்பட்டு இருப்பது கொலை தொடர்புக்கு அப்பால் நாவலுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்.
    Ver libro
  • Kodu Thaandadhe - cover

    Kodu Thaandadhe

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    There is a limit to all the atrocities that happen in this society. However, 90% of us ignore the unjust incidents around us. The rest 10% alone raise their voice against injustice. This story is about 4 such people who raise their voice. What do they do? Listen to Kodu Thaandathe.
    
    எந்த ஒரு அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் எல்லை உண்டு. இந்த சமுதாயத்தில் நடக்கும் சில அநீதிகளை நாம் கண்டும் காணாமலும் கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். நம்மில் 90% பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். வெகு அரிதாக உள்ள 10% பேர் மட்டுமே துணிச்சலோடு முன்வந்து குரல் கொடுக்கிறார்கள். அந்த 10% பேரில் உள்ள ஒரு நான்கு பேரின் கதைதான் இந்த கோடு தாண்டாதே. நம் தமிழ்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு ஒரு எல்லைக்கோட்டை அந்த நான்கு பேரும் வரைந்து எச்சரிக்கை விடுகிறார்கள். இந்த நால்வர் என்ன செய்கிறார்கள்? அறிய கேளுங்கள் கோடு தாண்டாதே
    Ver libro
  • Irumbu Pattampoochigal - cover

    Irumbu Pattampoochigal

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் உண்டு என்று சொல்ல வருகிற கதையம்சம் கொண்ட நாவல் இது. பெண்கள் உடலளவில் மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களில் பலர் உள்ளத்தளவில் வலிமை வாய்ந்தவர்கள். அப்படிப்பட்ட பெண்களுக்குப் பெயர் இரும்புப் பட்டாம்பூச்சிகள். அந்த இரும்புப் பட்டாம்பூச்சிகளில் ஒருத்திதான் இந்த நாவலின் நாயகி. அவள் செய்த சாகசம்தான் என்ன? காது கொடுத்து கேளுங்கள்.
    Ver libro
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு  பல இடையூறுகள்  வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு  இடையூறுகள்  எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Ver libro
  • Yandhira Jaalam - cover

    Yandhira Jaalam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is the story of Yantras and Mantras! The protagonist who tries to kill himself is saved by a monk and he gives a Yantra to him. In 48 days, the protagonist becomes a Lakhpati. The monk asks for the Yantra back. What does he do? Listen to Yandhira Jaalam.
    
    யந்திர மந்திர தந்திரத்தில் யந்திரம் ஒன்றின் ஜாலத்தை சொல்லும் கதை இக்கதை. தற்கொலைக்கு முயல்பவன் கையில் ஒரு சன்யாசி யந்திரம் ஒன்றை தந்து பூஜிக்க சொல்கிறார். 48  நாளில் லட்சாதிபதி ஆகிறான் அவன். தான் கொடுத்ததை திரும்ப கேட்கிறார். அவன் தந்தானா?
    Ver libro