Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
இனி வரும் உதயம் - cover

இனி வரும் உதயம்

ரமணிசந்திரன்

Verlag: Publishdrive

  • 0
  • 0
  • 0

Beschreibung

“அம்...ம்மா!” என்று இருகைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டாள் நித்யா. நித்யகல்யாணி.அவள் தங்கியிருந்த அந்த வேலை பார்க்கும் பெண்களுக்கான விடுதியில், அவளது அடுத்த அறைக்காரி தன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பேர் விரைவிலேயே வந்து சேர்ந்து கொள்ளுவார்கள்.இவர்களால் எப்படி முடிகிறது?வேலை முடிந்து திரும்பி வந்தால் டிபன் சாப்பிடப் போகக்கூடத் தோன்றாமல் அப்படியே விழுந்து கிடக்கத்தானே அவளுக்குத் தோன்றுகிறது; இவர்கள் மட்டும் இப்படித் துள்ளுகிறார்களே! ஒருவேளை மனதின் சோர்வுதான் உடலையும் பாதிக்கிறதோ? விரைவிலேயே செவிப்பறை கிழிந்து விடும் அளவுக்கு உச்சத் தொனியை எட்டியது டிஸ்கோ சங்கீதம். சகித்துக் கொள்ளவும் முடியாமல், பயில்வான் போல கட்டுமஸ்தாக இருந்த பக்கத்து அறைக்காரியோடு மோதும் துணிவும் இல்லாமல் அவளால் சொந்தமாக முடிகிற காரியமாய்த் தன் கைகளால் தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள்.ஆனால் எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? காது மடல்கள் வலிக்கத் தொடங்கவே, எழுந்து சென்று அறைக்கதவோடு சன்னல்களையும் மூடிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.அப்போதும் சத்தம்தான். ஆனால் நல்ல வேளையாக முன்னைப் போலக் காதைத் துளைக்கவில்லை.உதட்டைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஊரின் நடு நாயகமாய் இருந்த பெரிய வீடு நினைவு வந்தது. வீட்டைச் சுற்றிலும் மாவும் பலாவுமாகப் பெரிய பெரிய மரங்களோடு - பெரிய பூந்தோட்டமும், மல்லிகை, இருவாட்சியின் மனதை மயக்கும் வாசனையும், அவ்வப்போது ஊர்க் கோடியில் இருந்த கோவிலில் இருந்து காற்றில் மிதந்து வரும் நாதசுர ஓசையும்..கூடவே திருச்சியில் ஒரே ஒரு மாதத்திற்கென்று வாடகைக்கு எடுத்து, ஒரே ஒரு வாரம் மட்டும் தங்கியிருந்த ஒரு சின்ன வீடும்...சின்ன வீடேதானோ?ச்சு...எப்படி இருந்தால் என்ன?எல்லாம் கனவாகி முடிந்துவிட்ட கடந்த காலம். உண்டு முடித்ததும் நாவிலிருந்து மறைந்துவிடும் இனிப்பும், உறைப்புமான சுவைகள்போல, இன்பம் துன்பம் எல்லாம் மறைந்து வெறும் பொறுமையை மட்டும் அவளுக்குத் துணையாகவிட்டுச் சென்றுவிட்ட கடந்த காலம்!நில்லாமல் சுழலும் இயந்திரம் போல் அதற்கும் பழக்கப்பட்டுப் போய் விட்ட இந்த வாழ்க்கையில் இன்று மட்டும் ஏன் இந்த சலிப்பு?அல்லது பழக்கப்பட்டு விட்டதாக எண்ணியதுதான் தவறோ?தவறேதான்.தெருவில் போகும்போதும் வரும் போதும் அங்கங்கே அந்த சுருக் வலிகள் இன்று வரை நிற்கவே இல்லையே!அன்னியராய் நின்று ஆராய்ந்து சொல்வது என்றால் முன்பு கத்தியால் குத்துவதுபோல இருந்த வேதனை இப்போது குண்டூசியில் குத்தும் அளவுக்குக் குறைந்திருப்பதாகக் கூறலாம். மற்றபடி வலி இல்லாத நாள் என்று ஒரு நாளுமே இல்லை.ஒரு வேளை... இன்னும் கொஞ்ச... நிறையக் காலம் கழிந்தால்... தடதடவென்று கதவை ஒங்கித் தட்டும் ஒசையில் திடுக்குற்று, சிந்தனை கலைந்து எழுந்தாள் நித்யா.பொறுமை இழந்த அவசரத் தட்டுகள் சற்று அதிகப்படி நேரமாகவே கதவு தட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பதை, உணர்ந்து ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.“அட என்னாம்மா, எப்பப் பார்த்தாலும் கதவைப் பூட்டிகினு நீ என்ன தவம் பண்றியா, ஜெபம் செயறியா? வா, உனுக்கு டெலிஃபோனு வந்துக்கிதாம். அழச்சாரச் சொன்னாங்க. வா.” என்று நீட்டினாள் அந்தம்மா
Verfügbar seit: 03.04.2025.
Drucklänge: 194 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Maduve Hennu - cover

    Maduve Hennu

    H S Shivaprakash

    • 0
    • 0
    • 0
    ಎಚ್.ಎಸ್.ಶಿವಪ್ರಕಾಶ್ ಅವರ "ಮದುವೆ ಹೆಣ್ಣು" ಜಪಾನೀಸ್ ನಾಟಕ "no" ಅನ್ನು ಆಧರಿಸಿದೆ.
    ನಾಟಕದಲ್ಲಿ, ತೊಂಡಾ ಬುಡಕಟ್ಟಿನ ಮದುಮಗನು ತನ್ನ ಮದುವೆಗೆ ಮೊದಲು, ತೊಂಡಾ ಬುಡಕಟ್ಟಿನ ಪದ್ಧತಿಯಂತೆ ಮನುಷ್ಯನ ತಲೆಯ ಬೇಟೆಗೆ ಹೋಗುತ್ತಾನೆ. ಗಂಡು ಸಿಗದ ಕಾರಣ, ಅವನು ಒಬ್ಬ ಮಹಿಳೆಯನ್ನು ಕೊಂದು...
    Zum Buch
  • Kanivu - cover

    Kanivu

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Zum Buch
  • Uruthal - cover

    Uruthal

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Zum Buch
  • Raameshwaradallondu Poli Cinema - cover

    Raameshwaradallondu Poli Cinema

    Vasudhendra

    • 0
    • 0
    • 0
    ತಾಯಿ ಮತ್ತು ಮಗನ ನಡುವಿನ ಸೂಕ್ಷ್ಮ ಒಡನಾಟದ ಹೃದ್ಯ ಬರಹಗಳು. ಈ ಪುಸ್ತಕಕ್ಕೆ ರಾಜ್ಯ ಸಾಹಿತ್ಯ ಅಕಾಡೆಮಿಯ ಪುಸ್ತಕ ಬಹುಮಾನ ಬಂದಿದೆ.
    Zum Buch
  • Aezham Ulagam - cover

    Aezham Ulagam

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
    Zum Buch
  • Sivagamiyin Sabatham Part 4 - cover

    Sivagamiyin Sabatham Part 4

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    'Sivagamiyin Sabadham' is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikesi II, and the Pallava Emperor, Mahendra Varmar and at a later stage, his son, Narasimha Varmar, forms the core of the novel. 
    அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது."
    Zum Buch