Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
என்னை யாரென்று எண்ணி - cover

என்னை யாரென்று எண்ணி

ரமணிசந்திரன்

Verlag: Publishdrive

  • 0
  • 0
  • 0

Beschreibung

கைகளை உயர்த்தி, மேலே கோர்த்துச் சோம்பல் முறித்தான், சத்யசீலன்.அலுவலக வேலை முடிந்தது. இனி, அத்தையைப் போய்ப் பார்க்க வேண்டும். போனால் எதற்காகவாவது, ஙை, ஙை என்பார்கள். குறைந்தது ஒரு மணி நேரம் அறுப்பார்கள். இன்று அதைச் சகித்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால், இந்த சந்திப்பை, ஏற்கனவே, அவன், ஒருவாரம் தள்ளிப் போட்டுவிட்டான். அதுவும், ‘உடனே வா’ காமேசுவரி - அத்தை தான், உத்தரவிட்ட பிறகும்!காத்துக்கொண்டிருந்தாற்போல, சத்யசீலன், ‘பஸ்ஸ’ரை அழுத்திய மறுகணமே, ஆஃபீஸ் பையன் ரத்தினம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே தலையை நீட்டினான்.முதலாளியின் கண் குறிப்பை ஏற்று, மேஜை மீதிருந்த சிறு கைப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய்க் காரில் வைத்தான்.சலாம் அடித்துவிட்டு, அவன் கிளம்ப, ‘செக்யூரிட்டி’ ஆட்களிடம் ஒரு தலையசைப்புடன், சத்யசீலன் காரை எடுத்தான்.காமேசுவரியின் வீட்டு போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு. இறங்கி, வீட்டினுள் செல்லும்போது அவன் முகத்தில் ஓர் ஏளனப் புன்னகை அரும்பியது;எப்போதுமே, இங்கு வரும்போதெல்லாமே, அவனுக்கு இதே உணர்வுதான் உண்டாகும்.ஏளனமும் கூடவே ஓர் இரக்கமும்.பித்தளைப் பூண்களும் பிடிகளுமாக எட்டடி உயரவெளிக் கதவுகளும், காரோடும் பாதையில் நூற்றுக்கணக்கான விலைஉயர்ந்த செடிகளுடன் கூடிய தொட்டிகள், தொட்டிகளும் விலை உயர்ந்தவையே, தரையில் பாவப்பட்டிருந்த அறுகோண வடிவச் செங்கல்கள், கொத்து விளக்குகள், இவை தாண்டி, உள்ளேசென்றால், சலவைக்கல் தரையும், காஷ்மீர்க் கம்பளமும், பெரிய பெரிய சரவிளக்குகளும், பளபளக்கும் உலோகச்சிலைகளும்...எதற்கு இந்தப் படாடோபம்?அத்தை பணக்காரிதான். இல்லையென்று சொல்ல முடியாதுதான்! ஆனால், இந்த அளவுக்குப் பெரும் பணக்காரி அல்லவே! கோடீசுவரியே, ஆனால், பெரும் கோடீசுவரி அல்ல.இந்தப் பெரும் கோடீசுவரித் தோற்றத்தைக் காப்பாற்றுவதற்காக காமேசுவரி அத்தை, செய்யவேண்டிய செய்து கொண்டிருக்கும் செலவை நினைக்கையில், சத்யனுக்கு உள்ளூர் ஆத்திரம் வரும். கூடவே, என்ன அசட்டுத்தனம் என்று பரிதாபமாகவும் இருக்கும்.அநாவசியம். இந்தப்பகட்டு இல்லையென்றால், இவளை யாரும் மதிக்கமாட்டார்களாமா?அல்லது, இந்த ஆடம்பரத்தில் மட்டுமே மயங்கி எந்தப் பெரிய பணக்காரனாவது. சுந்தருக்குத் தன் பெண்ணைக் கொடுத்து விடுவான் என்கிற எண்ணமா?அத்தையின் முக்கிய காரணம், இரண்டாவதுதான் என்பது, சத்யசீலனின் ஊகம்.அது, சரியே என்றது. அவன் அத்தையோடு அன்று, அவன் நடத்திய பேச்சு. அவனைக் கண்டதும், ஓடிவந்து நின்ற பணியாளரிடம் சொல்லியனுப்பிவிட்டு, அத்தையின் வரவுக்காக, ஹாலில் காத்திருக்க - அதுதான், அந்த வீட்டு வழக்கம் என்றாலும், அப்படிக் காத்திருக்க அவனுக்கு மனமில்லை.ஹாலில் அமர்ந்துகொண்டு, வேலையாளிடம் சொல்லியனுப்பினால், சந்தோஷம் போல, உடனேயோ, அன்றி, சற்றுத் தாமதமாகவோ காமேசுவரி, அங்கு வந்து தரிசனம் தருவாள்.பொதுவாக, அத்தையின் விருப்பப்படி, இந்த மாதிரியான அவள் வீட்டுச் சம்பிரதாயங்களுக்கு, சத்யனும் மதிப்புக் கொடுப்பது உண்டுதான்.ஆனால் இன்று, காமேசுவரியின் வருகையை எதிர்பார்த்து, உட்கார்ந்திருக்க, அவனுக்கு விருப்பமில்லை. முக்கியமாக, - அப்படிக் காத்திருக்கும் பொறுமை இன்று அவனுக்கு இல்லை எனலாம்
Verfügbar seit: 03.04.2025.
Drucklänge: 156 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Aram Thirumurai - cover

    Aram Thirumurai

    Navukkarasaar

    • 0
    • 0
    • 0
    தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் பாடியுள்ளார்கள். 
    முதல் இருவரும் கி.பி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 
    தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர். 
    திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். 
    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம். 
    10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்
    Zum Buch
  • Uruluva GaaliGudu Gudu Mugilu - cover

    Uruluva GaaliGudu Gudu Mugilu

    Raghvendra Patil

    • 0
    • 0
    • 0
    Short story by Raghvanedra Patil
    Zum Buch
  • குயில்பாட்டு - cover

    குயில்பாட்டு

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    ரமணியின் குரலில் பாரதியாரின் குயில் பாட்டு... புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது. "காதல் காதல் காதல்  காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்" இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். "நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன்" என்று கூறியது. கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல். மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது. கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளைக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன. இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாள் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக்காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்ற பறவைகளும் மறைந்தன. நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் பொய்மையை எடுத்துரைக்கின்றான். குயில் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. கவிஞன் குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாயச் செயல்களையும் உணர்ந்து தெளிகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே கொள்ளை வனப்புடை
    Zum Buch
  • சாவின் முத்தம் - cover

    சாவின் முத்தம்

    Suratha

    • 0
    • 0
    • 0
    சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். 
    வளமான சொற்சுவை குன்றாத அழகு, இயற்கைக்கு ஏற்ற ஆனால் புரட்சிகரமான கருத்துக்கள், இன்பந்தரும் காதற்சித்திரங்கள், புதிய புதிய உவமைகள் இவை சாவின் முத்தம் என்ற இந்தக் கவிதைதொகுப்பில் காணக் கிடக்கின்றன.
    Zum Buch
  • Kumaravatara - cover

    Kumaravatara

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Zum Buch
  • Nilukada Chitragalu - cover

    Nilukada Chitragalu

    Lohit Naikar

    • 0
    • 0
    • 0
    Short story by Lohit Naikar
    Zum Buch