Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
சிறகடிக்க ஆசை! - cover

சிறகடிக்க ஆசை!

ரமணிசந்திரன்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

லேகா காலேஜ் முடிந்து வீடு திரும்பியபோது - சாயந்தரம் ஆறு மணி.பாத்ரூம் ஷவரில் பதினைந்து நிமிஷங்கள் நனைந்து விட்டு ரோஜாப் பூ நிற நைட்டிக்குள் நுழைந்தாள் லேகா.டொக்...டொக்...டொக்...கதவுத் தட்டல் கேட்டதைத் தொடர்ந்து குரல் கொடுத்தாள்.“யாரு...?”“நான்தாம்மா...”அறைக்கு வெளியே இருந்து வேலைக்காரி தங்கத்தின் குரல் கேட்டது.“உள்ளே வா...”ஆவி பறக்கும் டிகிரி காபியோடு உள்ளே வந்தாள் அவள்.“இந்தாங்கம்மா காபி...”“அப்படி டேபிள் மேல வெச்சிட்டுப் போ...”வழியும் காபிக் கோப்பையை சிந்தாமல் கவனமாய் மேஜையின் மேல் வைத்துவிட்டு தயக்கமாய் நின்றிருந்தாள் தங்கம்மேஜைக்கருகே இருந்த பர்சனல் கம்ப்யூட்டரில் உறையை நீக்கிக் கொண்டே அவளைப் பார்த்தாள் லேகா.“என்ன வேணும் தங்கம்...”“அ... அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னால போன் பண்ணியிருந்தார் லேகாம்மா...”“எதுக்கு...?”“உங்களைத்தான் விசாரிச்சார்...”“என்ன விசாரிச்சார்...?”“நீங்க காலேஜிலிருந்து வந்தாச்சான்னு கேட்டார்... இல்லைன்னு சொன்னதும்... பதறிப் போய்ட்டார்...”“எத்தனை மணிக்கு போன் பண்ணினார்…?”“அஞ்சு மணிக்கு...”“காலேஜ் நாலரை மணிக்கு முடியுது... டாண்ணு அஞ்சு மணிக்கு வீடு வந்து சேர முடியுமா...? லைப்ரரிக்குப் போக வேண்டியிருக்கும்... அல்லது ப்ரொபசர்கள்கிட்டே சந்தேகம் கேக்க வேண்டியிருக்கும்...”“உங்க கவலை உங்களுக்கு... அவர் கவலை அவருக்கு… அவர் இருக்கறப்ப லேட் ஆனா பரவாயில்லை... அவர் வெளியூர் போயிருக்கிறப்ப நீங்க வீடு வந்து சேர லேட் ஆச்சுன்னா... அய்யா என்னை சத்தம் போடுவார்ம்மா...”“அவரோட கவலையில் கொஞ்சம்கூட நியாயம் இல்லை தங்கம்... நான் ஒண்ணும் பச்சைக் குழந்தை இல்லை...”“அவருக்கு நீங்க என்னிக்குமே குழந்தைதாம்மா... பெண்ணைப் பெத்தவங்களுக்கு அவளை ஒருத்தன்கிட்டே கட்டிக்குடுக்கற வரைக்கும் வயத்தில் நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கும்...”“இட்ஸ் ஹைலி இடியாட்டிக்.”“என்னவோ இங்கிலீஷில் திட்டறீங்கன்னு தெரியுது. நாளைக்கு நீங்க ஒரு பொண்ணுக்கு அம்மா ஆனிங்கன்னா அப்போதுதான் உங்க அப்பாவோட கவலை என்னன்னு உங்களுக்கு நிஜமாவே புரியும். அதுவரைக்கும் அவர் மேல் உங்களுக்குக் கோபம்தான் வரும்...”“கவலையானாலும் சரி... சந்தோஷமானாலும் சரி... அது நியாயமாவே இருந்தாலும் அளவோட இருக்கணும்... அளவுக்கு மீறி கவலைப்படக்கூடாது... இவர் அளவுக்கு மீறி கவலைப்படறார்... அவர் கவலைப்படறாரா... இல்லை நான் தப்பான பாதையில் போயிடுவேன்னு சந்தேகப்படறாரான்னு எனக்குப் புரியலை...”“இல்லைம்மா...”என்று வார்த்தைகளை ஆரம்பித்த தங்கத்தைப் பாதியில் மறித்தாள் லேகா.“உன்னோட லெக்ச்சர் போதும்... மறுபடியும் அவர் போன் பண்ணினார்ன்னா. நான் பத்திரமா வீடு வந்து சேர்ந்தாச்சுன்னு சொல்லிடு...”“சரிம்மா...”தலையசைத்து விட்டுத் தங்கம் நகர்ந்த விநாடி -டிரிங்...டிரிங்...டிரிங்...டெலிபோன் வீறிட ஆரம்பித்தது.“அய்யாவாகத்தான் இருக்கும்மா...” என்று சொல்லிவிட்டு தங்கம் அறையைக் கடந்தாள்.ரிசீவரை எடுத்துக் காதில் பொருத்தி “ஹலோ...” என்றாள் லேகா.தங்கம் சொன்ன மாதிரியே ராமகிருஷ்ணன்தான் பேசினார்.“லேகா... வந்துட்டியாம்மா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் கூப்பிட்டேன்... நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு வேலைக்காரி சொன்னா...”“காலேஜில் ஒரு ப்ரொபசர்கிட்டே சந்தேகம் கேக்கப் போயிருந்தேன்...”“அப்படி ஏதாவது இருந்தா... வீட்டுக்கு ஒரு போன் அடிச்சு சொல்லிடு லேகா... நான் வெளியூரிலிருந்தாலும் மனசெல்லாம் உன் மேலேயே இருக்கும்.”“அப்பா... இட் ஈஸ் டூ மச்...”“என்னோட கவலை உனக்குப் புரியாது...”“நான் எங்கே போனாலும் பைக்கிலும் காரிலும் நீங்க அனுப்பற செக்யூரிட்டி ஆட்கள் நிழல் மாதிரி வர்றாங்களே… அவங்களுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திட்டிங்கனா நான் எங்கே இருக்கேன்... என்ன பண்றேன்னு அவங்க மூலமாகவே தெரிஞ்சிக்கலாமே...?”“லே… லேகா...”“என்னப்பா அதிர்ச்சி ஆயிட்டிங்க..?”
Verfügbar seit: 08.02.2024.
Drucklänge: 88 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Zum Buch
  • Jadi Maleya Ratri - cover

    Jadi Maleya Ratri

    Yandamoori Veerendranath

    • 0
    • 0
    • 0
    ಬದುಕು ಇಂಡೆಕ್ಸ್ ಇಲ್ಲದ ರಟ್ಟಿನ ಪುಸ್ತಕ. ಎಚ್ರಿಕೆಯಿಂದ ಹುಡಿಕಿದರೆ ನಮಗೆ ಬೇಕಾದ ಪದಗಳು ಬೇರೆ ಬೇರೆ ಪುಟದಲ್ಲಿ ಸಿಗದೇ ಇರಲಾರವು! ನಾವು ಮಾಡಬೇಕಾಗಿದ್ದು ಅವುಗಳನ್ನು ಸಮನ್ವಯ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು ಮಾತ್ರವೇ...
    Zum Buch
  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Zum Buch
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Zum Buch
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Zum Buch
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Zum Buch