Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது - வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது - cover

குறட்டை (சத்தம்) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது - வீட்டில் இருக்கும் அனைவரும் நன்றாகத் தூங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது

Owen Jones

Maison d'édition: Tektime

  • 0
  • 0
  • 0

Synopsis

குறட்டை ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அதற்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் போன்ற குறட்டை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. உடல் எடைக் குறைப்பு மற்றும் தூங்கப் போவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்ற  வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய மூக்கின் மேல் ஒட்டக்கூடிய பட்டைகள் (நேசல் ஸ்ட்ரிப்) மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தெரிந்துகொள்வோம். மேலும் அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான நேர்மறை காற்று பாதை அழுத்த (CPAP) சிகிச்சை போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம். குறட்டை ஏற்படுவதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிவது மற்றும் அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவ சேவை வழங்குநருடன் எவ்வாறு ஆலோசிப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வோம்.
மேலும், குறட்டை விடும் நபர் மற்றும் அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள்ளும் துணைவரின் தூக்கத் தரத்தை மேம்படுத்துவது, குறட்டை விடுவதினால் உறவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் வசதியான மற்றும்  உகந்த சூழலைஅமேசான் தளத்தில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் நூலாசிரியர்களில் ஒருவர் ஓவன் ஜோன்ஸ், இவர் வேல்ஸ் நாட்டின் பாரி நகரத்தைச் சேர்ந்தவர், இவர் பல நாடுகளில் வசித்திருக்கிறார் மேலும் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ௧௯  70 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, ​​அவர் உளவாளிகளுடன் தொடர்ந்து பழகினார். பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்குப் பிறகு, சுரினாம் நாட்டில், ​​1982 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அவருக்குத் தொடர்பிருக்கிறது மற்றும் அவர் கூலிப்படையை சேர்ந்தவர்  என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தபோது, ​​பாலைவனப் புயல் ஏற்பட்டபோது பாரி நகரிலிருந்து ஜிப்ரால்டருக்கு நான்கு பேர் பயணம் செய்த குழுவில் துடுப்பு வளிக்கும் அடிமையாக பயணம் செய்தார் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் படகில் அவர்கள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணத்தின் போது, ​​அவர்கள் பயணித்த படகு ஏறக்குறைய ஒரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் - தி அட்லாண்டிக் சேலஞ்சர் ஆகியவற்றில் மோதியது. 2004 ஆம் அண்டு முதல், அவர் பெரும்பாலும் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும்  தாய்லாந்து நாட்டில் வசித்தார். அவர் இப்போது தனது மனைவியுடன் அவரது ஆள் அரவமற்ற வடக்கு பகுதியில் இருக்கும் விவசாய கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் மேலும் கதை எழுதுவது மற்றும் அவர் எழுதிய கதைகளை அதிகளவில் மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்.PUBLISHER: TEKTIME
Disponible depuis: 25/03/2023.

D'autres livres qui pourraient vous intéresser

  • பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரர் (The Richest Man in Babylon) [Tamil] - cover

    பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரர்...

    ஜார்ஜ் எஸ். கிளாசன்

    • 0
    • 0
    • 0
    அதிகம் விற்பனையாகும் ஒரு தனித்துவமான புத்தகம், இதற்கென்று ஒரு ரசிகர் வட்டத்துடன் நவீனகாலப் பொக்கிஷமாக உள்ளது. 
    "பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்" புத்தகம் நிதித் திட்டமிடல் மற்றும் சுய முன்னேற்றத்தில் மிகவும் பிரபலமான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று. 
    செழிப்பிற்கான உலகளாவியச் சட்டங்களை முதன்முதலில் கண்டறிந்த பண்டைய பாபிலோனியர்கள் பற்றிய ஊக்கமூட்டும் மற்றும் தகவல்பூர்வமான கதைகளின் மூலம், செல்வத்தை உருவாக்குவதும் பாதுகாப்பதும் வளர்ப்பதும் எப்படி என்பதற்கான சிறந்த அறிவுரைகளை ஜார்ஜ் கிளாசன் வழங்குகிறார். 
    இந்த ஆடியோ புத்தகத்திலிருந்து நீங்கள் இவற்றை அறிந்துகொள்ளலாம்: 
    -          பணத்தைக் கையாளுவதன் சரியான வழிகள் மற்றும் நிலையான நிதிநிலையை அடைவதற்கான ரகசியங்கள்; 
    -          கடினமான பொருளாதாரச் சூழல்களைச் சமாளிக்க உதவும் அடிப்படை நிதிக் கோட்பாடுகள்; 
    -          உங்கள் திட்டங்கள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான சிறந்த அணுகுமுறைகள்; 
    -          விரும்பியவற்றை எல்லாம் பெற்று நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கான நுட்பங்கள். 
    ஆசிரியர் குறிப்பிட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றி உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். சேமிப்பை நிர்வகிப்பதற்கு இந்தப் புத்தகத்திலுள்ள உதவிக்குறிப்புகளை நீங்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கினால், அவை உண்மையில் பலனளிப்பதை விரைவில் கவனிப்பீர்கள். 
    நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் புதிய உயரங்களை எட்டவும் ஊக்கப்படுத்துவதன் மூலம், இந்தப் புத்தகம் சுய முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. 
    "பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்" புத்தகத்திலுள்ள ஊக்கமூட்டுகின்ற, அறிவுப்பூர்வமான கதைகளைக் கேட்டபிறகு, முடியாதது என்று எதுவுமே கிடையாது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்! 
    ©2023 ABP Publishing. Translation Naga Chokkanathan, ℗2023 ABP Publishing 
    Original title: The Richest Man in Babylon
    Voir livre
  • Porkai Swamigal – Sri Sheshadri Swamigal - பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - cover

    Porkai Swamigal – Sri Sheshadri...

    Sathiyapriyan

    • 0
    • 0
    • 0
    a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - காற்றின் திசை காற்றின் வேகம் காற்றின் மொழி. ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். ஞான திருஷ்டியில் முக்காலமும் திரிபவர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞானத்தைத் தன் சிஷ்யர்களுக்கு அளித்தவர். காஞ்சி காமாட்சியின் அவதாரம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போலப் பல சித்தர்கள் எவ்வித உரைநூலோ உபதேசங்களோ வழங்காமல், தங்களது யோக சித்திகள் மூலம் வாழ்ந்து காட்டிச் சென்று விடுகிறார்கள். அவர்களது ஞானத்தின் விரிவு நூல்களாகத் தொகுக்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை இதுபோன்ற சித்திரமாகத் தீட்டும்போதுதான், அவர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும். சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிப் பேசும்போது பகவான் ரமணரைப் பற்றிப் பேசாமல் இருப்பது எங்கனம்? இந்த நூல் பகவான் ரமணரைப் பற்றிய ஒரு சித்திரத்தையும் சேர்த்துத் தருவது அழகு. அதோடு, சுவாமிகளின் சமகாலத்து ஞானிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. படிப்பவர்களைக் கரைய வைக்கும் அழகுத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud audiobook production from Aurality
    Voir livre
  • Sithuvelaikal Aanmeegamalla - cover

    Sithuvelaikal Aanmeegamalla

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Voir livre
  • Murpagalum Pirpagalum - cover

    Murpagalum Pirpagalum

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Voir livre
  • Yudhishtram - Short Story Collection - cover

    Yudhishtram - Short Story...

    Vidya Subramaniam

    • 0
    • 0
    • 0
    வித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர். உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்படும் சிறுகதைகள், பல்வேறு கோணங்களில் பயணித்து, வாழ்க்கைத் தருணங்கள் குறித்த பல கேள்விகளை உருவாக்கி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று உச்சம்கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்கின்றன. சாதாரண மனிதர்களின் அசாதாரணத்துவத்தை இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளிலும் நாம் காணலாம்.  
    எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Voir livre
  • Aadukiraan Kannan - cover

    Aadukiraan Kannan

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Voir livre