Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
கீல்வாத நோயை எதிர்கொள்வது - கீல்வாத நோய்ப் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அறிவியல் மற்றும் நோய் காரணங்கlள் - cover

கீல்வாத நோயை எதிர்கொள்வது - கீல்வாத நோய்ப் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அறிவியல் மற்றும் நோய் காரணங்கlள்

Owen Jones

Übersetzer Charlie

Verlag: Tektime

  • 0
  • 0
  • 0

Beschreibung

கீல்வாதம், வலி மற்றும் நாட்பட்ட ஒருவகையான மூட்டழற்சி, அது உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்களைப் பாதிக்கிறது. மூட்டுகளில் யூரிக் அமில படிமங்கள் தங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது அதனால் மூட்டுகளில் அழற்சி ஏற்பட்டு தீவிர வலியை ஏற்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக மக்கள் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இந்த நோய் ஏன் ஏற்படுகிறது, எதனால் தூண்டப்படுகிறது மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் போன்ற விவரங்கள் இன்றுவரை அறியப்படாமல்தான் இருக்கிறது.
இந்த விரிவான புத்தகத்தில், கீல்வாத நோயின் வரலாறு, அதன் அறிவியல், நோயறிதல், பல்வேறு வகையான கீல்வாத நோய்கள், நோயை எப்படித் தடுப்பது மற்றும் பாதிப்பு தூண்டப்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை விவரிக்கப்படுகிறது. கீல்வாத நோயைக் குணப்படுத்த வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அலோபுரினோல் மற்றும் கொல்கிசின் போன்ற மருந்துகள் மற்றும் இயற்கை வைத்திய முறைகளும் ஆராயப்படுகிறது. மேலும் கீல்வாத நோய் மற்றும் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற மற்ற நோய்களுடன் அதன் தொடர்பைப் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.                  
நீங்கள் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது கீல்வாத நோய்ப் பாதிக்கப்பட்டவரைப் பராமரிப்பவர் என்றாலும், இந்த புத்தகம் கீல்வாத நோய்ப் பற்றிய முழுமையான புரிதல் மற்றும் நோயை எப்படி எதிர்கொள்வது என்றும் தெளிவான விளக்கத்தைத் தரும். தற்போதைய ஆராய்ச்சி மற்றும் உத்திகளை அலசி ஆராய்ந்து வாசகர்களுக்கு அவர்களின் உடல்நலத்தை கட்டுப்படுத்தி கீல்வாத நோயுடன் எப்படி வாழ்வது என்ற ஆலோசனையை இந்த புத்தகம் வழங்கும்.
Verfügbar seit: 03.02.2025.
Drucklänge: 44 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Sri Annai - cover

    Sri Annai

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கணவனும் மனைவியும் வழிபாட்டிற்காக இரு வீடுகளிலும் தடை சொல்லாத ஒரே கோயிலுக்கு இணைந்து வர விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆன்மீகக் கடவுளும் ஆன்மீகக் கோயிலும் இன்று அவசியமாகிறது. ஸ்ரீஅன்னை நெறி ஜாதி மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதது. ஸ்ரீஅன்னையும் அரவிந்தரும் போதித்த நெறி மதங்கடந்த ஆன்மீக நெறி. அவர்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவான கடவுளர்கள். அரவிந்தர் மையங்கள் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள். எதிர்காலத்தில் ஸ்ரீ அன்னை நெறியின் தேவை இன்றுள்ளதை விட இன்னும் அதிகமாகும். ஸ்ரீஅன்னையைத் தேடிவரும் அடியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதை இப்போது காண்கிறோம். இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாவதை எதிர்காலம் காணும்.
    ஜாதி மதங்களில் ஏற்றத் தாழ்வு காணாதவர்கள், தீண்டாமை ஒரு கொடிய பாவம் என்பதை உணர்ந்தவர்கள், பெண்களும் ஆன்மிகத்தில் ஆணுக்கு நிகராகவும் மேலாகவும் உயரலாம் என்ற கோட்பாட்டை ஏற்பவர்கள் என இவர்களெல்லாம் இந்தப் புத்தகத்தை கேட்கும் தகுதி படைத்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் இதயங்களில் இந்தப் புத்தகம் மேலும் வெளிச்சம் ஏற்படுத்தும். ஸ்ரீஅன்னையின் பரிபூரண அருள் இந்த நூலின் வாசகர்களுக்குக் கிட்டுமாக.
    Zum Buch
  • Seevaga Sinthamani Full Story | சீவக சிந்தாமணி | திருத்தக்கதேவர் | Tamil Audio Book - cover

    Seevaga Sinthamani Full Story |...

    Thiruthakka Devar

    • 0
    • 0
    • 0
    சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும் மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.[1][2] 
    சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றிச் சீவகசிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது
    Zum Buch
  • Shirdi Baba - cover

    Shirdi Baba

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "ஷிர்டி பாபாவும் மதங்கடந்து எல்லா மக்களையும் கவர்ந்த ஒரு மகான். இந்து முஸ்லீம் ஒற்றுமை பாரதத்தில் மிக அதிகமாகத் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில், ஷிர்டி பாபாவின் வரலாறு இறையன்பர்கள் படிப்பதற்கும் பாராயணம் செய்வதற்கும் ஏற்றது. நதிகள் அனைத்தும் கடலில் கலக்கிற மாதிரி, எல்லா மதங்களும் பரம்பொருள் என்ற சமுத்திரத்தில்தான் கலக்கின்றன என்ற பரமஹம்சர் வாசகத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
    
    இந்த நூலைப் பயில்பவர்கள் இம்மைப் பயன்கள், மறுமைப் பயன்கள் இரண்டையும் பெறவும், மதங்களில் எல்லாம் உயர்ந்த மதம் அன்புதான் என்ற உண்மையை உணரவும், எல்லோர் மனத்திலும் சாந்தியும் சமாதானமும் நல்லிணக்கமும் நிலவவும் ஷிர்டி பாபாவின் அருள் துணைநிற்கட்டும்."
    Zum Buch
  • Manimegalai Full Story - மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் - Tamil Audio Book - cover

    Manimegalai Full Story -...

    Seethalai Saathanar

    • 0
    • 0
    • 0
    மணிமேகலைக் காப்பியம் – சங்க இலக்கிய காலத்து புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்று. சீத்தலைச் சாத்தனார் எழுதிய இக்காப்பியம் புத்த மதக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. தமிழ் பண்பாடு, மதம், வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் இந்த ஆடியோபுக் அனைவருக்கும் பயன்படும்.
    Zum Buch
  • வெற்றிவேற்கை (நறுந்தொகை) | அதிவீர ராம பாண்டியர் | Athiveera Rama Pandiyan | VetriVerkkai (Narunthogai) | Tamil Audio Book - cover

    வெற்றிவேற்கை (நறுந்தொகை) |...

    Athiveera Rama Pandiyan

    • 0
    • 0
    • 0
    தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை ஆகும். இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும்.அதிவீரராம பாண்டியர் என்பவர் இந்த நூலின் ஆசிரியர் ஆவார். இளைஞர்கள் நல்ல நெறிகளை அறிய வேண்டி நல்ல சொற்றொடர்களால் இந்நூல் யாக்கப்பெற்றுள்ளது.நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை என்று பொருள் கொள்ளப்பட்டு, பழைய நீதிநூல்களின் சாரமாக அமைந்த எளிமையான நூல் என்று உரைக்கப்படும். மேலும் இந்நூலின் சில சொற்றொடர்கள் புறநானூறு, நாலடியார் போன்ற நூல்களின் பாக்களோடும், சொல்லோடும், பொருளோடும் ஒத்து இருக்கின்றன.இந்நூல் எண்பத்தியிரண்டு எளிமையான சொற்றொடர்களால் ஆனது.
    Zum Buch
  • Nakare Aakare - cover

    Nakare Aakare

    Gangavathi Pranesh

    • 0
    • 0
    • 0
    ತಮ್ಮ ಮಾತಿನ ಬಾಣದಿಂದ ನಮ್ಮನ್ನೆಲ್ಲ ನಕ್ಕು ನಗಿಸುವ ಗಂಗಾವತಿ ಪ್ರಾಣೇಶ್ ಅವರು ತಮ್ಮ ಅಗಾಧ ತಿರುಗಾಟ, ಸಮಾಜದ ಜೊತೆಗಿನ ಒಡನಾಟ ಮತ್ತು ಓದನ್ನು ಬರಹಕ್ಕೆ ಇಳಿಸಿದಾಗ ಹುಟ್ಟಿದ ಕೃತಿಗಳಲ್ಲೊಂದು ""ನಕ್ಕರೆ ಅಕ್ಕರೆ"". ಬದುಕಿನ ಜಂಜಡಗಳ ನಡುವೆ ಬದುಕಿಗೆ ಬೇಕಿರುವ ಸ್ಪೂರ್ತಿ ತುಂಬುವ ಟಾನಿಕ್ ಇಲ್ಲಿನ ಬರಹಗಳಲ್ಲಿದೆ.
    Zum Buch