Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கீல்வாத நோயை எதிர்கொள்வது - கீல்வாத நோய்ப் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அறிவியல் மற்றும் நோய் காரணங்கlள் - cover

கீல்வாத நோயை எதிர்கொள்வது - கீல்வாத நோய்ப் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அறிவியல் மற்றும் நோய் காரணங்கlள்

Owen Jones

Maison d'édition: Tektime

  • 0
  • 0
  • 0

Synopsis

கீல்வாதம், வலி மற்றும் நாட்பட்ட ஒருவகையான மூட்டழற்சி, அது உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்களைப் பாதிக்கிறது. மூட்டுகளில் யூரிக் அமில படிமங்கள் தங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது அதனால் மூட்டுகளில் அழற்சி ஏற்பட்டு தீவிர வலியை ஏற்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக மக்கள் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இந்த நோய் ஏன் ஏற்படுகிறது, எதனால் தூண்டப்படுகிறது மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் போன்ற விவரங்கள் இன்றுவரை அறியப்படாமல்தான் இருக்கிறது.
இந்த விரிவான புத்தகத்தில், கீல்வாத நோயின் வரலாறு, அதன் அறிவியல், நோயறிதல், பல்வேறு வகையான கீல்வாத நோய்கள், நோயை எப்படித் தடுப்பது மற்றும் பாதிப்பு தூண்டப்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை விவரிக்கப்படுகிறது. கீல்வாத நோயைக் குணப்படுத்த வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அலோபுரினோல் மற்றும் கொல்கிசின் போன்ற மருந்துகள் மற்றும் இயற்கை வைத்திய முறைகளும் ஆராயப்படுகிறது. மேலும் கீல்வாத நோய் மற்றும் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற மற்ற நோய்களுடன் அதன் தொடர்பைப் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.                  
நீங்கள் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது கீல்வாத நோய்ப் பாதிக்கப்பட்டவரைப் பராமரிப்பவர் என்றாலும், இந்த புத்தகம் கீல்வாத நோய்ப் பற்றிய முழுமையான புரிதல் மற்றும் நோயை எப்படி எதிர்கொள்வது என்றும் தெளிவான விளக்கத்தைத் தரும். தற்போதைய ஆராய்ச்சி மற்றும் உத்திகளை அலசி ஆராய்ந்து வாசகர்களுக்கு அவர்களின் உடல்நலத்தை கட்டுப்படுத்தி கீல்வாத நோயுடன் எப்படி வாழ்வது என்ற ஆலோசனையை இந்த புத்தகம் வழங்கும்.PUBLISHER: TEKTIME
Disponible depuis: 03/02/2025.

D'autres livres qui pourraient vous intéresser

  • Selvam Serkum Vazhigal - செல்வம் சேர்க்கும் வழிகள் - cover

    Selvam Serkum Vazhigal - செல்வம்...

    G. G.S.Sivakumar

    • 0
    • 0
    • 0
    A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது? * நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? . * செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? * எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொழில் தொடங்கி நடத்துவதா? * தொழில் எனில் எது பாதுகாப்பானது? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்? * கிடைக்கும் வருமானத்தை எப்படிச் சேமிப்பது? எப்படிப் பெருக்குவது? எப்படி முதலீடு செய்வது?யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது போன்ற தயக்கங்களை உதறித் தள்ளிவிட்டு இந்நூலை வாசிக்க ஆரம்பியுங்கள், வளமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. 
    எழுத்தாளர் G.S. Sivakumar எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Download FREE Aurality app now on play store and or iphone ios store
    Voir livre
  • Arasiyal Anmiga MGR - அரசியல் ஆன்மிக எம்ஜிஆர் - cover

    Arasiyal Anmiga MGR - அரசியல்...

    M. Venkatesan

    • 0
    • 0
    • 0
    எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 
    திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது. தனது ஆன்மிக நிலைப்பாட்டை என்றுமே எம்ஜிஆர் மறைத்ததில்லை என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, எம்ஜிஆரால் மிகவும் மதிக்கப்பட்ட ஈவெராவின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியதே இல்லை என்பதையும் உறுதிபடச் சொல்கிறது. 
    எம்ஜிஆரின் அரசியல் ஆன்மிகச் செயல்பாடுகளை விளக்கும் இப்புத்தகம், அதற்கு இணையாக, அக்காலக் கட்டத்தின் அரசியல் சித்திரம் ஒன்றையும் சேர்த்துத் தருகிறது. 
    காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற துறவிகளை ஆதரிப்பதால் தனக்கு வரும் முத்திரைகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாதவர் எம்ஜிஆர். தனக்கிருக்கும் ஆன்மிக நம்பிக்கைகளைப் பலமுறை உரக்கச் சொன்னவர் அவர். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, ஆய்வு செய்து, தன் வாதங்களுக்கு வலுவான நிரூபணங்களுடன் இந்த நூலை எழுதி இருக்கிறார் ம.வெங்கடேசன். 
    எழுத்தாளர் ம.வெங்கடேசன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Voir livre
  • Aimperung Kappiyam Full Stories - ஐம்பெருங் காப்பியம் - Tamil Audio Book - cover

    Aimperung Kappiyam Full Stories...

    Ilango Adikal, seethalai...

    • 0
    • 0
    • 0
    ஐம்பெரும் காப்பியங்கள் என்பது தமிழ் இலக்கியத்தின் பொற்காலத்தை பிரதிபலிக்கும் ஐந்து சிறந்த மகாகாப்பியங்கள் — சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. ஒவ்வொன்றும் தமிழ் பண்பாடு, சமயம், நெறி, தத்துவம், வரலாறு ஆகியவற்றை ஆழமாக வெளிப்படுத்துகின்றன. தமிழ் பாரம்பரியம், காப்பிய வரலாறு, சங்க கால இலக்கியத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இக்காப்பியங்கள் ஒரு அரிய பொக்கிஷம்.
    Voir livre
  • எமோஷனல் இண்டெலிஜென்ஸ் - Emotional Intelligenceஉணர்ச்சிகளை ஆளும் கலை - cover

    எமோஷனல் இண்டெலிஜென்ஸ் -...

    G.S. Sivakumar

    • 0
    • 0
    • 0
    Emotional Intelligence released by Aurality எமோஷனல் இண்டெலிஜென்ஸ் – உணர்ச்சிகளை ஆளும் கலை ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற்று தனது லட்சியத்தை அடைய அறிவாற்றல் மட்டும் போதுமா? ஐ. க்யு. அதிகம் பெற்று, படிப்பில் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்த பலர், தங்களது தொழில் வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி, தற்கொலை வரைக்கும் சென்றுவிடுவது ஏன்? உணர்ச்சிகளின் பின்னணி என்ன? மனிதனை ஆட்டிப்படைக்கும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நம் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவர முடியுமா? எமோஷனல் இண்டெலிஜென்ஸ் என்றால் என்ன? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எமோஷனல் இண்டெலிஜென்ஸுக்கும் என்ன தொடர்பு? சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் எமோஷனல் இண்டெலிஜென்ஸைப் பயன்படுத்தி வெற்றி காண்பது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம். எமோஷனல் இண்டெலிஜென்ஸ் குறித்த அனைத்தையும் எளிமையான தமிழில் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இருக்கிறார் ஜி.எஸ்.சிவகுமார் ஜி.எஸ்.சிவகுமார் எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம், Aurality release (Tamil Audio Book by Aurality) கேட்போம்
    Voir livre
  • Silapathikaram Full Story – Tamil Audiobook - cover

    Silapathikaram Full Story –...

    Ilango Adigal

    • 0
    • 0
    • 0
    சங்ககாலத்தின் சிறந்த காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள் எழுதியது. தமிழின் பெருமையை உலகறியச் செய்த இந்த காவியம், கண்ணகியின் பக்தி, பொறுமை, நீதி, மற்றும் வீரத்தை வெளிப்படுத்துகிறது. 
    இந்த ஆடியோபுக்கில், 
    சிலப்பதிகாரம் முழுக் கதை தமிழில் உரையாடல் 
    மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் ஆன்மீக ஆர்வலர்களுக்கு எளிய புரிதல் 
    இலக்கியத்தை காதோரம் கேட்கும் வசதி 
    தினசரி கேட்க சிறந்த வழிகாட்டி 
    சிலப்பதிகாரம் நம்பிக்கையும் நீதியும் எப்போதும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தும் மகத்தான காவியம்.
    Voir livre
  • Thabaalthalai Saathanaiyaalargal - தபால்தலை சாதனையாளர்கள் - cover

    Thabaalthalai Saathanaiyaalargal...

    Kamaraj Mani

    • 0
    • 0
    • 0
    இந்தியாவின் தபால்தலைகளில் பல சாதனையாளர்களின் முகங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் யார் இவர்கள், இவர்கள் ஏன் தபால்தலைகளில் இடம்பெற்றார்கள் என்று யோசித்திருக்க மாட்டோம். 
    தபால்தலை சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் புத்தகம் இது. எத்தனையோ வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, எத்தனையோ வழிகளில் பங்களித்து, நம் பாரத மண்ணைக் காக்க எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும். ஒரு தபால்தலைக்குப் பின்னால் இத்தனை வரலாறா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் நூலாசிரியர் காமராஜ் மணி. 
    எழுத்தாளர் காமராஜ் மணி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Voir livre