Weitere Bücher, die Sie mögen werden
-
Magarantham Thangum Malaraval -...
Kamali Maduraiveeran
தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!
Zum Buch -
ஒற்றை ரோஜா - Ottrai Roja -...
Kalki Kalki
ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத் தியாகம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். திடீர் திடீர் என்று நமக்குத் தெரிந்தவர்கள் யார் யாரோ இறந்து போய்விட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்றலாம் என்றால், அதற்கு வழிவகை தெரிவதில்லை. யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பாபநாசத்தில் கல்யாணி தீர்த்தம் என்பதாக ஓர் இடம் இருக்கிறதென்றும், அதிலேதான் ஆசிரியர் வ.வே.சு. ஐயர் விழுந்து உயிரை இழந்தார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பெரியாரைப் பின்பற்றலாம் என்று எண்ணிக்கொண்டுதான் பாபநாசம் போனேன். இரண்டு காரணங்களினால் நான் உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. முதலாவது, அந்தக் கல்யாணி தீர்த்தம் இருக்கிறதே, அது பார்க்க மிகப் பயங்கரமாயிருந்தது. அன்னை பெற்றெடுத்த நாளிலிருந்து எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்த உடம்பு இது! இதற்கு எத்தனை எண்ணெய், எத்தனை சோப்பு! எத்தனை ஆடை அலங்காரம், எத்தனை வகை வகையான அன்னபானம்-அடடா! இதைப் புகைப்படம் பிடிப்பதற்காக மட்டும் எத்தனை செலவு! இவ்வாறெல்லாம் பேணி வளர்த்த உடம்பு அந்தப் பயங்கரமான தடாகத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது என்னும் எண்ணத்தை என்னால் கொஞ்சங்கூடச் சகிக்கவே முடியவில்லை. ...
Zum Buch -
நாணலே நங்கையானால் - Naanale...
Kamali Maduraiveeran
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன்.
Zum Buch -
Ponniyin Selvan - 5 - Thyaga...
Kalki Kalki
பொன்னியின் செல்வன் - பாகம் 5 - தியாக சிகரம் , First ever digitized album of Ponniyin Selvan released in 2010-2011 worldwide, narrated by Sri Srinivasa for all the characters in the novel - tamilaudiobooks.com - email ponniyinselvanaudio@gmail.com அமரர் கல்கியின் உன்னதமானதொரு காவியம் ; சரித்திரப் படைப்பு
Zum Buch -
Kadaivizhiyin Kadhalil Audiobook
Kamali Maduraiveeran
ஒரு அழகிய கிராமத்தில் வசிக்கும் பரிதீரன் மற்றும் மருதன் எனும் இரு இணைபிரியா நண்பர்கள், பரிதீரனின் அத்தை மகள் அலரியை பரிதீரனுக்கு திருமணம் முடிக்கத் துடிக்கும் பரிதீரனின் அத்தை மலர்விழி, தந்தையின் பணி இடை மாற்றத்தால் மதுரை சென்று, தன் சொந்த ஊருக்கே மீண்டும் திரும்பிவரும் இளவரசி. இளவரசியின் உயிர்த் தோழி அலரி. இவர்களுக்கு இடையில் நடக்கும் காதல் மற்றும் நட்பை நகைச்சுவை கலந்த எழுத்து நடையுடன் எழுதியுள்ளேன். இவர்களில் யார் யாருடன் இணைவார்கள்? தெரிந்து கொள்ள படியுங்கள் கடைவிழியின் காதலில்...
Zum Buch -
தேவன் நூறு - Devan 100
Dhivakar
தேவன் என்கிற தனிப்பட்ட மனிதரைப் பற்றி எழுதுவதை விட அந்த தேவன் என்கிற மாமனிதரை வெளிப்படுத்திய அந்த தேவ எழுத்துக்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல் இன்று நேற்றல்ல எத்தனையோ நாட்கள் என் உள்ளத்தின் அடியில் புதைந்திருந்ததுதான். அந்த புதைந்த எழுத்துகள்தான் அவரைப் பற்றி எழுத எழுத பெரும்புதையலாக வெளிப்பட் இந்த பதினான்கு அத்தியாயங்களிலும் அந்தப் புதையலில் கிடைத்த செல்வத்தை எல்லா வாசகருக்கும் சேர்த்துப் பகிர்ந்துள்ளேன்-- ஆசிரியர் திவாகர்
Zum Buch