Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
தென்றல் வந்து என்னை தொடும் - cover

தென்றல் வந்து என்னை தொடும்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

குளித்துவிட்டு தலையை காய வைத்தபடி வெளியே வந்த வித்யா, படிகளில் இறங்கி வரும் இளைஞனை பார்த்தாள்.சுருண்ட முடி, அடர்த்தியான மீசை, மாநிறம். பார்ப்பதற்கு கண்ணியமான குணத்துடன் இருந்தான். வாசலில் நிறுத்தியிருந்த மாருதி காரில் ஏறி புறப்பட்டு செல்லும் அவனை பார்த்தபடி நின்றாள் வித்யா.“சவுந்தர்யாம்மா, உள்ளேதான் இருக்கீங்களா”‘‘வாங்க, உட்காருங்க”“இருக்கட்டும். சீனி இருந்தா ஒரு டம்ளர் கொடுங்க. என் புள்ளை செல்வத்துக்கிட்டே நேத்து சொல்லி அனுப்பினேன். மறந்துட்டான். இன்னைக்கு வரும்போது வாங்கிட்டு வந்துடுவான். தந்திடறேன்.’’“இருக்கட்டுமா. இருங்க கொண்டு வரேன்”உள்ளே செல்ல,“பேச்சு சப்தம் கேட்குதே. காலேஜ் ஹாஸ்டலில் இருந்த உங்க மகள் படிப்பு முடிச்சு வந்துட்டா போலிருக்”“ஆமாம். காலையில்தான் வந்தா... வித்யா..... வித்யா இங்கே வாம்மா. வீட்டுக்காரம்மா வந்திருக்காங்க.”உள் அறையிலிருந்து வெளிப்பட்ட வித்யாவை மேலும், கீழும் பார்த்தாள்.ஆளை அசத்தும் அழகு. செளந்தர்யாவுக்கு நேர்மாறாக சிவந்த நிறம். நீண்ட விழிகளும், எடுப்பான நாசியுமாக பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள்.“வாங்கம்மா.”தன்னை நோக்கி வரும் வித்யாவை, ஒருவித பொறாமையுடன் பார்த்தாள். “வாம்மா, நல்ல லட்சணமா சினிமா நடிகை மாதிரி இருக்கே. படிப்பை முடிச்சிட்டியோ”என்ன இவள் வயசுக்கு தகுந்த மாதிரி பேசாமல், முதன் முதல் அறிமுகமாகுபவரிடம், எப்படி பேசுவது என்ற நாகரிகம் கூட தெரியாமல், முதல் பார்வையிலேயே அவளை பிடிக்காமல் போக,“ம்... முடிச்சிட்டேன்மா “அதற்குள் செளந்தர்யா, சீனி டம்ளருடன் வர, “என்ன சவுந்தரியாம்மா. உங்க மகள் அளந்துதான் பேசுவா போலிருக்கு... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றா.”“அது ஒண்ணுமில்லை. உங்ககிட்டே இன்னும் பழகலை. அதான் தயங்கறா”“இதிலென்ன தயக்கம். வயசுப்பையனா எதிரில் உட்கார்ந்திருக்கான் தயங்கறதுக்கு. இந்த காலத்தில் பொம்பளை புள்ளைங்க, இப்படித்தான்... பாதி நடிப்பு, ஆம்பளைங்களை பார்த்தால் கலகலன்னு பேசறாங்க. இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற பாவனை.”சொன்னவள், வித்யாவின் முகம் சிவப்பதைப் பார்த்து,“நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே. உன்னை சொல்லலை. சாதாரணமாக, எல்லா பெண்களையும் பற்றி பொதுவான அபிப்ராயம் சொன்னேன். வரட்டுமா.இன்னைக்கு காலையிலேயே, என் மூத்த தாரத்து மகன் விக்ரம் வந்து என் பாதி உசிரை எடுத்துட்டு போயிட்டான். அவனோட கத்தி தொண்டையே வறண்டு போச்சு. போய் சூடா காபி கலந்து குடிக்கணும்”“என்னம்மா இது, இந்தம்மா மோசமானவாங்களாக இருப்பாங்க போலிருக்கே. குத்தலான பேச்சு, பொறாமை வீசும் பார்வை. ஆளே சரியில்லமா”“நமக்கென்ன வந்தது. அவங்க எப்படியோ இருந்துட்டு போகட்டும். வாடகைக்கு இருக்கிறோம். ஒண்ணாந்தேதி பணத்தை கொடுத்துட்டு நம்ப வேலையை பார்ப்போம்”“இப்படி உங்களுக்குள்ளே பண்டமாற்று அடிக்கடி நடக்கும் போலிருக்கே.”“நான் எதைக் கேட்டும் அவங்க வாசல்படி ஏறமாட்டேன். அந்த பங்கஜம் வாரம் ஒரு தடவையாவது எதையாவது கேட்டு வந்துடுவாங்க. அரிசி, சீனி, பருப்புன்னு என்ன செய்யறது. கொடுக்க வேண்டியதா இருக்கு.”“திரும்ப வருமா”“எப்பவாவது மனசு வந்தா கொண்டு வந்து கொடுப்பாங்க. வாடகையோடு இதையும் சேர்த்துக்க வேண்டியதுதான்”“சரிம்மா, நான் பேங்க் வரைக்கும் போய்ட்டு வரேன்.”“ஆமாம் வித்யா. நானே சொல்லணும்னு இருந்தேன். உன் பேரில் போட்ட பணம் அஞ்சு லட்சம், வட்டியெல்லாம் என்ன வருதுன்னு பாரு. அஞ்சு வருஷத்துக்கு போட்டது முடிஞ்சிருக்கும். எல்லாம் கணக்கு பண்ணிட்டு வா... அதை எடுத்து உனக்கு கொஞ்சம் நகை வாங்கலாம்னு பார்க்கிறேன். இன்னும் இரண்டு வருஷத்தில் உன் கல்யாணத்தை முடிக்கணும். உனக்கானவன் எங்கே பிறந்திருக்கானோ. வலைவீசி தேடணும்.”“ஆரம்பிச்சுட்டியா. நான் கிளம்பறேன்”“இரு வித்யா. நீ குளிக்கும்போது ஊட்டி ரோஸ் வந்தது. வாங்கி வச்சேன். உனக்கு பிடிக்குமே. எடுத்திட்டு வரேன் வச்சுட்டு போ”ரத்த சிவப்பில், மலர்ந்தும், மலராமல் கூம்பு வடிவில், பெரிதாக இதழ்களை விரித்திருக்கும், அந்த இரண்டு ரோஜாக்களையும், ஹேர்பின்னையும் எடுத்து வருகிறாள் சௌந்தர்யா.“காதோரத்தில் வச்சுக்க வித்யா”“இல்லேம்ம... முடியை தளரவிட்டு கிளிப் பண்ணியிருக்கேன். நடுவில் வச்சாதான் அழகு.” இரண்டையும் சேர்த்து வைத்து ஹேர்பின்னை செருகுகிறாள்.“அம்மா, நல்லாயிருக்கா”“நீ கட்டி இருக்கற ரோஸ் கலர் புடவைக்கும், சிவந்த நிற ரோஜாவுக்கும் ரொம்பவே அழகாயிருக்கு. போயிட்டு சீக்கிரம் வந்துடு வித்யா. உனக்கு பிடிச்ச வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு வறுவலும் செய்து வைக்கிறேன்.”
Verfügbar seit: 12.02.2024.
Drucklänge: 47 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch