Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Hören Sie die ersten Kapitels dieses Hörbuches online an!
All characters reduced
கோவலன் கதை - cover
HöRPROBE ABSPIELEN

கோவலன் கதை

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Erzähler Ramani

Verlag: Ramani Audio Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

 கோவலன் க​தை பெரிய எழுத்துக் ​கோவிலன் க​தை என்றும் ​கோவலன் க​தை என்றும் வழங்கப்படுகிறது. இக்​கோவிலன் க​தையைப் புகழேந்திப் புலவர் என்பவ‌ர் எழுதியுள்ளார். நாட்டுப்புற மக்களி​டை​யே காணப்பட்ட ​கோவிலன் கதை​யை அப்படி​யே மக்கள் விரும்பும் வண்ணம் ​இ​சையுடன் கூடிய கதைப்பாடலாகப் புக​​ழேந்திப் புலவர் இயற்றியுள்ளார். நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அ​மைப்பி​லே​யே இக்க​தை ஆசிரியரால் கூறப்படுகின்றது. இந்நூ க​தையில் வினாயகர் துதியோடு ​தொடங்கி சுப்பிரமணியர் துதி, ​சொக்கநாதர் துதி, திருமால் துதி, சரஸ்வதியம்மன் துதி ஆகிய கடவுளர்களின் துதியானது இடம்​பெற்றுள்ளது. அதன் பின்னர் புலவர் ​நேரடியாக​வே க​தை​யின் வரலாறு என்று க​தையைக் கூறத் ​தொடங்குகின்றார். கோவிலன் க​தைப் பாடலில் ஊழ் ​கொள்​கையானது கதையின் ​தொடக்கத்தி​லேயே இடம் ​பெற்றுள்ளது. க​தையின் ஒவ்வொரு பகுதியிலும் இக்கொள்கையானது ஆசிரியரால் வலியுறுத்தப்படுகின்றது. 
அரசியலில் தவறி​ழைத்​தோ​ரை அறக்கடவு​ளே தண்டிக்கும் என்ற கருத்தானது புகழேந்திப் புலவரின் கோவலன் க​தையில் ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கப்​பெற்றுள்ளது. சிலம்பின் செல்வாக்கினால் புக​ழேந்திப் புலவர் கண்ணகி​யே காளியாக உருமாறி, அழிப்பதாகப் ப​டைத்துக் காட்டுகின்றார். 
கண்ணகி பாண்டியர் அரச​வைக்குச் ​செல்வதாக இளங்​கோவடிகள் ப​டைத்துக் காட்டுவார். ஆனால் புகழேந்திப் புலவ​ரோ பாண்டியர்கள் கண்ணகி​யைத் ​தேடிவருமாறு ப​டைத்துக் காட்டுகின்றார். அப்பாண்டியர்கள் ஆறாயிரம் பேரையும் அழித்தொழிக்கின்றாள் காளியாகிய கண்ணகியாள். கண்ணகி​யைக் காளியின் மறுவடிவாகக் ​கொண்​டே புலவர் ​கோவலன் கதை​யை நகர்த்துகின்றார். மாதகி பல ​கொடு​மைக​ளைக் ​கோவலனுக்குச் ​செய்யும் கொடுமையான பரத்தையாகக் ​கோவலன் கதையில் சித்திரிக்கப்படுகிறாள். பரத்​தைய​ரை நாடினால் எவ்வா​றெல்லாம் துன்புற ​நேரிடும் என்பதை மாதகி வசந்தமா​லை ஆகி​யோரின் வழி புக​ழேந்தியார் தெளிவுறுத்துகிறார். சிலம்பின் ​செல்வாக்கால் பிற்காலத்தில் எழுந்த இந்த கதைப்பாடல் பனுவலானது பல்​வேறு வ​கையிலும் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்ட கதையமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் இந்த நூலைக் கேட்கலாம்.
Dauer: etwa 4 Stunden (03:51:10)
Veröffentlichungsdatum: 27.09.2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —