கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1971 1975
கி. ரா
Erzähler Ramani
Verlag: Ramani Audio Books
Beschreibung
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். இந்த ஒலி நூலில் 1971 முதல் 1975 வரையில் ராஜநாராயணன் எழுதிய எங்கும் ஓர் நிறை வந்தது கன்னிமை சந்தோஷம் மஹாலக்ஷ்மி வேட்டி ஜீவன் புறப்பாடு தான் விளைவு வேலை வேலையே வாழ்க்கை கனா கீரியும் பாம்பும் பூவை என்ற 14 கதைகள் இடம் பெறுகின்றன
Dauer: etwa 3 Stunden (02:48:16) Veröffentlichungsdatum: 03.06.2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

