Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
வாழ்க்கை அல்லது வெறும் இருப்பு - cover

வாழ்க்கை அல்லது வெறும் இருப்பு

Eduard Wagner

Verlag: BookRix

  • 0
  • 0
  • 0

Beschreibung

No AI, No AI translated by Eduard Wagner
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். இது நிறைவான வாழ்க்கையா இல்லையா என்பதை வாசகனாகிய உங்களிடமே விட்டு விடுகிறேன். நிச்சயமாக நான் நிறைய தவறுகளை செய்தேன், ஆனால் மற்றவர்களை நான் உண்மையில் குறை சொல்ல முடியாது, பெரும்பாலானவற்றிற்கு நான் என்னை மட்டுமே குற்றம் சொல்ல முடியும்.
Verfügbar seit: 19.09.2024.
Drucklänge: 253 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Andal hymns - cover

    Andal hymns

    Andal

    • 0
    • 0
    • 0
    நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களுக்கு சாஸ்திரிய சங்கீத வடிவு தந்திருக்கிறார்கள். அப்படி நம்மை வந்தடையும் பாடல்கள் நாலாயிரத்தில் ஓரிரு நூறு பாடல்களே. சற்றே நீண்ட வடிவில் பாராயணமாகக் கிடைக்கின்றன. 
    பிரபந்தப் பாடல்கள் இயற்றமிழ் பாற்பட்டவை. இயற்றமிழ்ப் பாடல் வகைகளுக்கும் இனங்களுக்கும் ஓசை வகுப்பு முறை இருக்கிறது. இவ்வோசையில் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் தரும் ஒரு முயற்சிதான் இந்த ஒலியாக்கம். செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசைகளில் யாப்பிலக்கிணத்துக்கு ஏற்ப ஆண்டாளின் பாடல்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். 
    ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்கள் மற்றும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களை இந்த ஒலி நூலில் கேட்கலாம். பன்னிரு ஆழ்வார்களின் பாடல்கள் தனித்தனி ஒலி நூல்களாக ரமணி ஒலி நூலகத்தில் கிடைக்கின்றன. 
     The Vaishnavite hymns, Nalayira Divya Prabantham are set to music as well as recited in the recitation (parayana) tradition. While a randomly selected couple of hundreds of poems only are set to music and sung by performing artists, the recitation has been established as a discipline. These hymns have been composed according to Tamil Prosody known as //yappu//. They belong to what is known as //iyatramiz//. Such classical compositions have four kinds, AkavarpA, Venpa, Kalippa and Vanjippa (Pavinankal). Each of these have several derivative forms known as Pavakaikal. These conform to the traditional method of rendering in Akavalosai, Seppalosai, Thullalosai and Thunkalosai. This tradition has been lost for good. In an attempt to revive the traditional methods of rendering, Ramani Audio Books has recorded about 1500 hours of audio beginning from Ettuththokai down to contemporary literature through Epics, Bhakthi literature (Saivam, Vaishnavam, Buddhism, Islam) as well as Middle Age Tamil Literature. 
    In this audiobook you can listen to Thiruppavai (30 verses) and Nacciyar Thirumozhi (143) verses rendered in crisp and prosodically correct rendering. Other works by Azhvars are given in separate books.
    Zum Buch
  • கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985 - cover

    கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985

    கி. கி.ரா

    • 0
    • 0
    • 0
    கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 
    1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 
    கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. 
    ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். 
    இந்த ஒலி நூலில் 1981 முதல் 1985 வரையில் ராஜநாராயணன் எழுதிய 
    சுப்பண்ணா 
    நிலை நிறுத்தல் 
    அவுரி 
    ஒரு செய்தி 
    மொத்தைப் பருத்தி 
    விடுமுறையில் 
    குருபூசை 
    சுற்றுப்புற சுகாதாரம் 
    தாச்சண்யம் 
    இவர்களைப் பிரித்தது 
    உண்மை 
    தாவைப் பார்த்து 
    நாற்காலி 
    என்ற 13 கதைகள் இடம் பெறுகின்றன‌
    Zum Buch
  • Manimekalai Venpa - cover

    Manimekalai Venpa

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை. இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரின் படைப்புகள். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறும் காப்பியம் மணிமேகலை. அகவற்பாவாலானது. பல கிளைக் கதைகள், வரலாற்று நிகழ்வுகளைக் கூறுவது. பாவேந்தர் பாரதிதாசன் கிளைக்கதைகளை விடுத்து வெண்பா யாப்பில் மணிமேகலையின் கதையைச் சொல்லிப் போகிறார். உருக்கமும் எளிமையும் ஒருங்கிணைந்த‌ படைப்பு. 288 நேரிசை வெண்பாக்களால் ஆனது இந்த நூல்.
    Zum Buch
  • Avvaiyar Verses - cover

    Avvaiyar Verses

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    அவ்வையார் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, அகநானூற்றில் 4,புறநானூற்றில் 33 என்ற எண்ணிக்கையில்  அமைந்துள்ளன. தம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு, நெடுங்காலம் தம் அரசவையிலேயே ஔவையாரை அமர்த்தி அவர் புலமையை மதித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான். ஔவையார் தன் காதலைப் புரிந்து கொள்ளாமல் உறங்குகின்ற ஊரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு அந்த ஊர்மக்களைத் தாக்கி வீழ்த்தித் தன்னிலையைப் புலப்படுத்த முயல்கிறாள். 
    முட்டுவேன்கொல்! தாக்குவேன் கொல்! 
    ஓரேன் யானும்; ஓர் பெற்றி மேலிட்டு 
    ஆஅ! ஒல் எனக் கூவுவேன் கொல்! 
    அலமரல் அசைவளி அலைப்ப, என் 
    உயவுநோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே! 
    ஆத்திசூடி என்பது 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. 
    தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். 
    கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவராகிய முருகனைப் போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்: 
    “கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை 
    என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” 
    நல்வழி: மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலின் க
    Zum Buch
  • Ribu Geethai - cover

    Ribu Geethai

    Ribu

    • 0
    • 0
    • 0
    ரிபு கீதை அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். சிவரகசியத்தில் ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண மகரிஷி அவர்கள் ரிபுகீதையை பாராயணம் பண்ணுமாறு பலருக்குச் சொன்னதோடு தாமே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவற்றை பாராயணம் பண்ண ஊக்குவித்திருக்கின்றார். ரிபு கீதை என்ற இந்த நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் கேதார்நாத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது. இந்த நூல் தஞ்சை மாவட்டத்தினை சார்ந்த கோவிலூர் மடத்தினைச் சார்ந்த அருணாசல சுவாமி என்னும் துறவுசுவாமியால் வெளிவந்தது. ஐம்பது அத்தியாயங்களில் 2493 ஸ்லோகங்களைக் கொண்ட வடமொழி மூலத்தை, உலகநாத ஸ்வாமிகள் என்னும் துறவுநாமம் பூண்ட திருவிடைமருதூர் பிரம்மஸ்ரீ பிக்ஷு சாஸ்திரிகள் தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 விருத்தப்பாக்களாக ஆக்கியுள்ளார். ரமணியின் இந்த ஒலி நூலில் ரமணர் தெரிந்தெடுத்த 139 பாடல்கள் அமைந்துள்ளன.
    Zum Buch
  • Thiruviruththam Thiruvasiriyam Periya Thiruvanthathi - cover

    Thiruviruththam Thiruvasiriyam...

    Nammazhvar

    • 0
    • 0
    • 0
    நம்மாழ்வார் எனப்படும் மாறன் சடகோபன் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தார். இவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார். 
    நம்மாழ்வார் 
    திருநெல்வேலி சீமையில் தாமிரபரணி கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் பொற்காரியார் மற்றும் சேர நாட்டு திருவெண்பரிசாரத்தை ஆண்ட மன்னனின் மகளான உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43-ஆவது நாளில் அவதரித்தார். இவர் பாண்டிய மரபினர் ஆதலால் மாறன் என்ற இயற்பெயரையும் மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியை விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் வென்றதால் "சடகோபன்" என்றும் மாறன் சடகோபன் என அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போலப் பரன் ஆகிய திருமாலைத் தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும் தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார். 
    நூல்கள் 
    நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி இவை ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாகப் பெரியோர்கள் சொல்வார்கள். இந்தத் திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 8 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார். 
     நம்மாழ்வார் பாடல்களை ஒலி நூலாக்கம் செய்திருக்கும் ரமணி தன் முனைவர் பட்டத்துக்கா
    Zum Buch