Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
உன்னை பிரியாத வரம் வேண்டும்… - cover

உன்னை பிரியாத வரம் வேண்டும்…

ஆர்.மகேஸ்வரி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

நிலவுப் பெண் சீவிச் சிங்காரித்து... ஒளி வீசும் மேனியுடன்... மென்மையான நாணத்துடன், வானில் மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்க, நட்சத்திரப் பட்டாளங்கள் தோழியாய்க் கூடவே துணைக்குப் போக... வெண் மேகங்கள், நிலவுப் பெண்ணிற்குப் பட்டுக் கம்பளம் விரித்து... வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்க... என்று வானமே மிக ரம்யத்துடன் காணப்பட்டது. 
 
இரவு பத்து மணி.
 
மாடி போர்டிகோவில்... பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தார், சதாசிவம்.
 
மார்கழிப் பனியோடு... தோட்டத்து மலர்களின் வாசமும் இணைந்து, பின்னிப் பிணைந்து, அவரைத் தீண்டி நகர்ந்தது. 
 
அந்தக் குளிர்ந்த பனித் தென்றலை ஆழ்ந்து சுவாசிக்க, குளிரெடுத்தது. சால்வையை இழுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டார். 
 
அவரால் இப்பொழுதெல்லாம் நாள் முழுக்க உழைக்க முடியவில்லை. அஞ்சனா மட்டும் இல்லையென்றால் பெரிதாய்த் திண்டாடி விடுவார். 
 
சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று பெரும் அவதிப்படும் சதாசிவத்திற்கு இப்போதெல்லாம் நெஞ்சில் ஊசி குத்துவதுபோல வலி புறப்பட்டு அவரைக் கஷ்டப்படுத்தியது. 
 
அவ்வளவு பெரிய அரண்மனை போன்ற பங்களாவில் தனிமை வேறு வாட்டி வதைத்தது. இத்தனை நாளும் தெரியாத தனிமை வயதாக ஆகப் பாடாய்ப் படுத்தியது. 
 
எத்தனையோ கனவுகளோடும்... கற்பனைகளோடும் அவர் தேவகி என்ற அழகிய நங்கையை மணந்தார். 
 
தேவகியின் மிதமிஞ்சிய அன்பில், நேசத்தில், பாசத்தில், அக்கறையில் தண்ணீரில் கரையும் சர்க்கரையாய்தான் கரைந்து போனார். 
 
அவளைக் கைப்பிடித்த நேரம் பிசினஸும் பல்கிப் பெருகியது. அவர்களின் மிதமிஞ்சிய காதல் வாழ்க்கையில் ஜெயசூர்யா மலர்ந்தான்.
 
அவனுக்கு ஐந்து வயதாகும் போது... தேவகி மீண்டும் கருவுற்றாள்! ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் பெண் குழந்தை எனத் தெரிய வந்தது! சதாசிவம் பெரும் மகிழ்ச்சி கொண்டார். 
 
ஏழாம் மாதம் தேவகி சுரம் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அந்த சுரம் விஷ சுரமாய் மாறி... டாக்டர்கள் எவ்வளவு போராடியும் அவளைப் பிழைக்க வைக்க முடியவில்லை. தேவகி வயிற்றுப் பிள்ளையோடு இறந்து போனாள். 
 
நேசம் கொண்ட மனைவி மரணித்துவிட கத்தினார். துடிதுடித்தார். துவண்டு போனார்.
 
ஒரு நாள் தற்கொலைக்கு முயற்சிக்க. அவருடைய தாயும், தகப்பனும் கண்டுவிட்டுக் காப்பாற்றினர். 
 
“குழந்தையை அநாதையாக்கி விட்டுப் போயிடாதே, சிவம்! அவளுக்கு விதி... இப்படிப் பொட்டென்று போய்ச் சேரணும்னு. சிவம்... இந்தக் குழந்தையின் முகத்தைப் பார். அவன் எதிர்காலம் உன் கையில் தான் இருக்கு. இந்தக் குழந்தைக்காகவாவது நீ வாழ வேண்டும், சிவம்...!” 
 
“தேவகி உன் தலையில் பெரிய பொறுப்பையும், கடமையையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறாள்.  அதுவும் நீ செய்வாய் என்று நம்பி.” 
 
“ஏமாத்திவிடாதே, சிவம்! தாய் இறந்தது கூடத் தெரியாமல் வெள்ளையாய் விளையாடித் திரியும்... இந்த ஜெயசூர்யாவுக்குத் தாயுமானவனா நீ மாறணும், சிவம்!”
 
“மனசைத் தளர விடாதே. நம்பிக்கையை இழப்பது உயிரை இழப்பதற்குச் சமம்! சிவம்... சிவம்... உன்னால் இந்தத் துக்கத்திலிருந்து மேலெழ முடியும். உன்னால் இந்தத் துன்பத்தைப் புறம் கண்டு ஓட வைக்க முடியும். உன் மனைவியின் மரணம் தந்த காயம்... உன்னை மலையளவு எழுந்து நிற்க வைக்கும்.” 
 
“நீ நம்ம ஜெயசூர்யாவுக்காகவாவது வாழணும், சிவம்! எங்களை அநாதையாக்கிடாதேப்பா!” என்று தாய் பாகீரதி அழ... 
 
சதாசிவத்திற்கு அப்போதுதான் தான் எவ்வளவு பெரிய பாவம் செய்ய இருந்தோம் என்று தோன்றியது.
 
நிதானமாய் யோசித்தார். நிமிர்ந்து எழுந்தார்.
 
பாகீரதியின் அளவுக்கு அதிகமான புத்தி புகட்டலால்... விண்ணுக்கும் மண்ணுக்குமாய் உயர்ந்து நின்றார். 
 
அவருடைய தகப்பன், நகை, துணிக்கடை நிறுவினார் என்றால் அவரின் மகன் சதாசிவமோ கடைக்குத்  தேவையான தங்க, வைர, பிளாட்டின நகைகளைச் செய்யும் தொழிற்சாலையை நிறுவி... செய்கூலி, சேதாரம் இல்லாமல் விற்பனை செய்தார். 
 
அதே போல் துணிக் கடைக்குத் தேவையான துணிகளை நெய்யச் சொந்தமாக மில்லை நிறுவி... அங்கே நெய்யும் துணிகளைக் குறைந்த அளவு லாபத்திற்கு விற்க... விற்பனை அமோகமாய் இருந்தது. 
 
படிப்படியாய் உயர்ந்து தமிழக, ஆந்திர மலைப் பிரதேசங்களில் காபி தேயிலைத் தோட்டங்களை வாங்கிப் போட்டார். 
 
கர்நாடகாவின் பெங்களூரிலும், சிக்மங்களூரிலும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் என்றும்... 
 
ஆந்திராவின் செகந்திராபாத், வாரங்கல், மெஹ்பூப் நகர், திருமலை போன்ற இடங்களில் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும், 
 
ஐதராபாத்தில் கார் ஸ்பேர்பார்ட்ஸ் என்று நிறுவி வெற்றி நடைபோட்டார். 
Verfügbar seit: 07.02.2024.
Drucklänge: 150 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch