Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் - cover

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்

ஆர்.மகேஸ்வரி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

சக்திவேல் பெரும் பணக்காரர்!
 
ஊரே அவர் பின்புதான்!  
 
ஏதாவது அடிக்கடி, பிரச்சனை என்றால்... அந்த ஊர் மக்கள் காவல் நிலையம் செல்ல மாட்டார்கள். சக்திவேல் ஐயாவிடம் தான் வருவார்கள்.
 
நேர்மையானவர்! நியாயவாதி! பெரும் வள்ளல்!
 
இந்தத் தகுதிகள் போதாதா...? ஒரு ஊரையும், ஒரு பெரும் கூட்டத்தையும் கட்டிப் போட்டு வைப்பதற்கு! 
 
அவருடைய மகன்தான் ராகுல்! படிப்பு சரிவர ஏறாததால் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு தந்தையோடு பண்ணைக்கு விவசாயத்தைப் பார்வையிடச் சென்றான். பின் தந்தைக்கு வயசாக அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழு கணக்கு வழக்கு, பண்ணை நிர்வாகம் என்று பார்த்துக் கொண்டான்!
 
ராகுலின் மனைவி நித்யா! பத்து வயதில் பரத் என்று மகனிருக்கிறான்! 
 
சக்திவேல் ஐயாவின் இரண்டாவது பிள்ளை, மதிவதனா!
 
அவர் மனைவி கற்பகம் ராகுலைப் பெற்ற பின் நீண்ட நாட்கள் கருவுறாமல் இருந்து... பதினைந்து வருடம் கழித்து கருவுற்றாள். சக்திவேல் ஐயா மகிழ்ந்தார். மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். 
 
பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் கற்பகத்தைச் சேர்த்தனர். நீண்ட நாட்கள் குழந்தைபேறு இல்லாமல் இருந்ததாலும், வயதாகி விட்டதாலும், இடுப்பு எலும்பு நெகிழ்வு கொடுக்காமல் போக... பிரசவம் சிக்கலாகி மதிவதனா பூமியில் தவழ்ந்த அடுத்த நொடி விண்ணுலகு சென்று விட்டாள், கற்பகம். 
 
சக்திவேல் ஐயா சுடு மணலில் விழுந்தவராகத் துடித்துப் போனார்! மனைவியின் மரணம் அவரைப் படுக்கையில் தள்ளியது!
 
அவரை படுக்கையிலிருந்து எழுந்து நடமாட வைத்தது அவர் மனைவியின் ஜாடையை உரித்து வைத்துக் கொண்டு பிறந்த மதிவதனாதான்! 
 
'தாயை விழுங்கிக் கொண்டு வெளியே வந்த எமன்... தரித்திரம் பிடித்த சனியன்' என்று இது போன்ற குழந்தைகளை வெறுப்பவர்கள், ஏராளம்!
 
ஆனால், மாறாய் கற்பகம் ஜாடையில் இருந்த மதிவதனா மேல் அவர் மட்டற்ற அன்பும், பாசமும் கொண்டார்! தனது மனைவியே மீண்டும் மகள் உருவில் வந்து அவரோடு வாழ்வதாய் எண்ணி அந்தக் குழந்தைக்காக எழுந்து விட்டார், சக்திவேல் ஐயா!
 
ராகுலுக்கும் தங்கையென்றால் உயிர்! அவள் சொல்தான் அவனுக்கு வேதம்! 
 
தந்தையும், தமையனும் மாறி மாறி அன்பு, பாசம், நேசம் கொண்டு வளர்த்ததால் மதிவதனா ஒரு குட்டி இளவரசி கணக்காய் வளர்ந்தாள்.
 
மதிவதனா பிடிவாதக்காரி! எதையும் சாதித்தே பழகியவள்! 
 
இன்பத்தையே அறிந்தவள் ! துன்பத்தின், துயரத்தின் நிழல் கூட அறியாதவள்! 
 
அவளுக்கு படிப்பைத் தவிர... எந்த வேலையும் தெரியாது! 
 
தெரிந்தாலும் செய்ய வேண்டிய அவசியம் என்ன? காலால் இட்ட வேலைகளைக் கைகளால் செய்ய நிறைய வேலைக்காரர்கள் இருக்கும்போது! 
 
நன்றாக உடுத்திக் கொள்வாள்! பட்டுப்பாவாடை, தாவணி தான் அவளுக்குப் பிடித்தமான உடை! 
 
கல்லூரியில் தொளதொள, டைட்டான சுடிதாரில் வரும் பெண்களை விட... பட்டுப்பாவாடை, தாவணியில் அம்சமாய் வரும் இந்த அழகு தேவதையைத்தான் நிறைய கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும்! 
 
அவளின் தந்தைக்கு இருந்த செல்வாக்கு அடுத்ததாய் தங்கைமேல் உயிரையே வைத்திருந்த ராகுல்மேல் பயம் என யாரும் அவளை நெருங்க மாட்டார்கள்!
 
அவளும் தான் உண்டு, படிப்பு உண்டு என்று இருப்பாள்!
 
மதிவதனா... ஐந்தரையடி உயர அழகுப் பெட்டகம்!
 
முழுநிலவு போன்ற அழகான வட்டவடிவ வதனம்!
 
காதளவு நீண்ட இரு பெரிய நயனங்கள்! அந்த வட்ட முகத்துக்கு ஏற்ற கூரிய நாசி! 
 
செங்காந்தள் மலரின் நிறத்தைக் கொண்ட அழகான இரு இதழ்கள்! ஒரு ஆப்பிளை இருகூறாய் வெட்டி வைத்தாற்போன்ற சதைப் பற்றான கன்னங்கள்!
 
சிற்பி வடித்த சிலையாய்... வடிவான மார்புடன்... சிறுத்த இடையுடன் கூடிய உடலமைப்பு!
 
அலையலையாய் நீண்ட சுருண்ட கருங்கூந்தல்!
 
ஆனால், அவளின் நிறம் மட்டும் மாநிறம்!
 
எல்லா அம்சங்களும் பொருந்திய அவளுக்கு தன் நிறம் மீது ரொம்பவே கவலை! அதை ஒரு குறையாய் எண்ணி எண்ணி மருகிப்போவாள்!
 
சிவப்பு தோல் மேல் பெரிதும் மோகம், அவளுக்கு! 
 
ராகுல் தங்கையின் அறைக்குச் செல்ல... அவளோ போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்க தங்கையை தட்டி எழுப்பினான்.
Disponible depuis: 07/02/2024.
Longueur d'impression: 138 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre