Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
அழகே உன்னை ஆராதிக்கிறேன் - cover

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

ஆர்.மகேஸ்வரி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

குட்மார்னிங் சார்...!” பவ்யமாய் அவனைப் பார்த்து சொன்னாள் நந்தினி.‘நினைத்தேன் வந்தாய்... நூறு வயது...!’ என்று பாடவேண்டும் போலிருந்தது திலகனுக்கு.“நான் வரட்டுமா சார்? அப்படியே நான் சொன்னதையும் கொஞ்சம் சிந்திச்சி பார்த்தா நல்லது!” நமட்டாய் சிரித்துவிட்டு போய் விட்டான் மோகன்.“குட்மார்னிங்... மிஸ் நந்தினி! என்னைக்குமில்லாத அதிசயமா இன்னைக்கு ஏன் இவ்வளவு தாமதம்னு தெரிஞ்சுக்கலாமா?”“சாரி... சார்! வழக்கம் போல நான் சரியான நேரத்துக்குத்தான் கிளம்பி வந்தேன். பாரீஸ் கார்னர்ல இறங்கி இன்னொரு பஸ் பிடிக்கிற அவசரத்துல ரோடு தாண்டினப்ப... ஆட்டோ ஒண்ணு...”“அய்யோ... அடிபட்டிருச்சா? எங்கே ரொம்ப பலமாவா? மருத்துவமனைக்கு போனீங்களா?” சீட்டைவிட்டே எழுந்துவிட்டான் திலகன்.நந்தினி அவனை புரிந்தும் புரியாமல் பார்த்தாள். இதயத்தில் சந்தோச நீரூற்று குப்பென்று பீய்ச்சி அடித்தது.‘திலகன்... உங்கள் மனதில் நானிருக்கிறேனா?’ கோடிட்டு காட்டிய அவன் செயல் நந்தினியை மகிழவைத்தது.“இல்லை... நீங்கள் நினைப்பது போல் அப்படி எதுவும் நடக்கவில்லை. எதிரே வந்த ஆட்டோ, என்மேலே சேற்றை வாரியிறைத்து விட்டு போய்விட்டது என்றுதான் கூறவந்தேன்.”‘‘அப்பாடா!” நிம்மதியாய் மூச்சுவிட்டான். அதேநேரம், தன்னை மீறிய அவளைப் பற்றிய அக்கறை உணர்ச்சி வெளிப்பட்டுவிட்டதே என்று சற்றே வெட்கமும் எழுந்தது.“அதனால்... உடைகளை மாற்ற மறுபடி வீட்டுக்கு போய் வரவேண்டியிருந்தது. வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிட்டு... மன்னிச்சிடுங்க சார்!“பரவாயில்லே நந்தினி... மிக அவசரமாக பார்த்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. நான் நேத்து அந்த மேட்டர் விசயமா சில குறிப்புகள் கொடுத்தேனே... முதல்ல லண்டனுக்கு, நம்ம பாஸ் பெயருக்கு ஒரு பேக்ஸ் அனுப்பிடுங்க!”“சரி சார்” நந்தினிக்கு பலூனில் ஊசி குத்தியது போலிருந்தது.‘தன்னைப் பற்றி அக்கறையாய், அன்பாய் மேலும் நாலு வார்த்தை பேசுவான்’ என்று எதிர்பார்க்க... அவனோ சடாரென்று வியாபார விசயத்திற்கு தாவி கட்டளையிடுகிறான்... இருக்கட்டும். எத்தனை நாளுக்கு கண்ணாமூச்சி ஆடுகிறார் என்று பார்ப்போம்! ஒரு ஆண் பிள்ளைக்கு இந்தளவு தயக்கம் அவசியமா? பெண்களாய் வலிய போய் தன் மனதை வெளிப்படுத்தினால், ‘ஒரு மாதிரியான கேசு’ என்று சடுதியில் வேறு மாதிரி கணக்குப் போடும் உலகமிது.உம்... இவர் எப்போது மனசை திறந்து பேசி... பழகி, உல்லாசமாய் பறந்து திரிந்து, பூங்கா, கடற்கரை, சினிமா என்று சுற்றி, வீட்டில் சொல்லி திருமணம் செய்து, தாம்பத்யம், குழந்தை என்று குடும்பமாய் செட்டிலாவது எப்போது? சரியான... சாம்பிராணி, சாமியார், ச்சே...!“நந்தினி... ஏன் ஒரு மாதிரியாயிட்டீங்க? பேக்ஸ் கொடுக்கச் சொன்னது...!”“காதில் விழுந்தது சார்!” பட்டென்று பதிலளித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள். அப்படி இப்படியென்று மதிய உணவு இடைவேளை வரைக்கும் அவன் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை நந்தினி.திலகனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.‘திடீரென்று என்னாகிவிட்டது இவளுக்கு? சே... எனக்கும்தான் மூளை பிசகிவிட்டது. எத்தனை அருமையான வாய்ப்பு? மெல்ல நம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான சந்தர்ப்பத்தை பாழாய்ப்போன கோழைத்தனத்தால்... கெடுத்து... சே! அவள் முகத்தைப் பார்த்தால்... அதிலும் ஊடுருவிப் பார்க்கும் அந்த கண்களை சந்திக்கும் எப்பேர்பட்ட மாவீரனும் ஊமையாகிவிட மாட்டானா? இதில் நான் எம்மாத்திரம்?’ தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.‘நீ உருப்படவேப் போறதில்லேடா!’ கோபமாய் கண்களை உருட்டினான் மோகன், மனதிற்குள் நுழைந்து
Verfügbar seit: 13.01.2024.
Drucklänge: 74 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Zum Buch
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch