Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
உனக்கே உயிரானேன் - cover

உனக்கே உயிரானேன்

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

யாழினி வீட்டிற்கு வந்ததும் மகிழ்ச்சிப் பெருக்கிலும் ஒரு விதப் படபடப்பிலும் மிதி வண்டியை நிறுத்தி இறங்கினாள். பூட்டக் கூடத் தோன்றாமல் உள்ளே ஓடினாள்.“அம்மா...”அம்மா துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்தாள். மகளின் உற்சாகமான குரல் கேட்டுத் திரும்பினாள்.“என்னடி... இன்டர்வியூ நல்லா இருந்ததா? நல்லா பதில் சொன்னியா? வேலை கிடைக்க அறிகுறி ஏதாவது இருந்ததா?” என்றாள்.வியர்த்துக் கொட்ட நின்றிருந்தாள் யாழினி. அருகே வந்த அம்மா தன் முந்தானையால் அவளுடைய முகத்தைத் துடைத்தாள்.“அறிகுறி என்னம்மா? வேலையே கிடைச்சாச்சு” என்றாள்.“என்னடி சொல்றே?”“உண்மையாத்தாம்மா சொல்றேன். எனக்குத்தான் வேலை கிடைச்சிருக்கு.”“ரொம்ப சந்தோஷமா இருக்குடி. எனக்குத் தெரியும். உனக்குத்தான் இந்த வேலைன்னு. ஆனால்... வேலை கிடைக்கிறது பெரிய விஷயம் இல்லைடி, ஒரு பொண்ணுக்கு. நல்ல வாழ்க்கை கிடைக்கணும். எவ்வளவோ படிச்சுட்டுப் பெரிய பதவியில இருக்கற பெண்களுக்கு நல்லவாழ்க்கை கிடைக்கலைடி. உனக்கு வேலை கிடைச்சது எனக்கு சந்தோஷம் தான். ஆனா... நான் மனசுல நினைக்கிற மாதிரி உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ எந்தக் கவலையும் இல்லாம இங்க இருக்கற மாதிரியே சந்தோஷமா வாழணும். அதான் என் ஆசை...”“அம்மா... வேலை கிடைச்சதும் கல்யாணப் பேச்சை எடுத்திட்டியா?காலா காலத்துல உனக்கொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும். நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை அமையணும். எனக்குக் கிடைச்சமாதிரி ஒரு வாழ்க்கையை இல்லை. மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத ஒரு இடமா உனக்குப் பார்க்கணும்.”“இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்? கொஞ்ச நாளைக்கு என்னை சுதந்திரமா இருக்கவிடு.”கல்யாணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் யாழினி சாப்பிட்டு விட்டு எழுந்தாள். நிம்மதியாக சற்று நேரம் படுத்தாள். மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. காலையில் பள்ளிக்கு செல்வதைப் பற்றியே நினைவு சுழன்றது. அந்தப் பள்ளிக்கூடமே நினைவிற்கு வந்தது. சுகமாக இருந்தது அந்த நினைவு.அப்படியே கண்கள் சொருக உறங்கினாள். பள்ளிக்கூடம் செல்வதைப் போலவும் பாடம் எடுப்பதைப் போலவும் பகல் கனவு வந்தது. கூடவே அவளுடன் பேசிய அந்த இளைஞனின் முகமும் அவனுடன் ஏதேதோ பேசுவதைப்போலவும் காட்சிகள் வந்தன.விழித்தபோது மணி மாலை நான்கு. எழுந்து குளியலறைக்குள் சென்று சந்தன சோப்பில் முகம் கழுவி வாசனையாக வந்தாள்.அம்மா, சூடாக காபியும் பஜ்ஜியும் தந்தாள். சாப்பிட்டு முடித்துவிட்டு முகத்தில் பவுடர் போட்டு பொட்டு வைத்த போது எதிர்வீட்டுக்கார அம்மாவின் மகள் வந்தாள். அவள் கல்லூரியில் படிப்பவள்.“அக்கா... வாழ்த்துக்கள்.. வேலை கிடைச்சிருக்காம். அம்மா சொன்னாங்க” என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.“வா... ராணி... உட்கார்.” தனக்கு வேலை கிடைத்த பள்ளியின் பெயரைச் சொன்னாள்.“நல்ல ஸ்கூல்க்கா” என்ற ராணி, “அக்கா... கோவிலுக்கு வர்றியா? போயிட்டு வருவோம்” என்றாள்.“கோவிலுக்கா?” யோசனையாய் முகத்தில் அதிகப்படியாய் இருந்த பவுடரைத் துடைத்தாள் யாழினி.“போ போயிட்டு வாயேன்டி. வேலை வேற கிடைச்சிருக்கு. அம்பாளுக்கு உன் பெயருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா” என்றாள் அம்மா.யாழினிக்கும் எங்காவது வெளியே சென்றால் தேவலாம் போலிருந்தது.“சரி வர்றேன்” என்றாள்.பூஜைக் கூடையுடன் சேலை மாற்றிக் கொண்டு கிளம்பினாள். இரண்டு தெரு தாண்டி ஒதுக்குப் புறமாய் அமைதியாய் இருந்த அம்மன் கோவிலுக்கு இருவரும் வந்தனர்.உள்ளே நுழையும் போதே கவனித்தாள் யாழினி. தீபன் ஒரு தூணோரம் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 107 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Zum Buch
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch