Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
தென்றலே என்னைத் தொடு! - cover

தென்றலே என்னைத் தொடு!

ஆர்.சுமதி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

“மாமா...”புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு வந்த ஜான்சியை நோக்கி ஓடினான் அசோக்.“ஜானுக்குட்டி...” என அவளைத் தூக்கிக் கொண்டான்.ஒரு கையில் அவளையும் இன்னொரு கையில் அவளுடைய ஸ்கூல் பேகையும் தாங்கியபடி தன்னுடைய பைக்கை நோக்கி நடந்தான்.“மாமா... இன்னைக்கு எங்களுக்குப் புது மிஸ் வந்தாங்க தெரியுமா?” - என அசோக்கின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் ஜான்சி.“அப்படியா! வெரி குட் நல்லாப் பாடம் நடத்தினாங்களா?”“பாடமா?” - என்றவள் கலகலவெனச் சிரித்தாள்.“ஏன்... பாடம் நல்லா நடத்தலையா?”“நாங்க இன்னைக்கு மிஸ்கிட்ட படிக்க மாட்டோம், எழுத மாட்டோம்னு சொல்லிட்டோம்.”“ஐய்யோ... அப்ப உங்களையெல்லாம் சரியான மக்குப் பசங்கன்னு நினைக்க மாட்டாங்களா?”“இல்லையே! இன்னைக்குப் பூரா எங்க கூட மிஸ் பாட்டு, டான்ஸுன்னு ஒரே ஜாலியா இருந்தாங்க.”“அப்படியா!. வந்தவுடனே ஸ்கேலைக் கையில் எடுக்காம இப்படி ஜாலியா இருந்திருக்காங்களே! அப்ப உண்மையிலேயே நல்ல மிஸ்தான்!” என்றபடி அவளைப் பைக்கில் உட்கார வைத்துத் தானும் அமர்ந்து இயக்கியபோது...“மாமா... எங்க மிஸ் பேர் என்னன்னு உனக்குத் தெரியுமா?”அவங்களுக்குப் பேர் வைக்கிற விழாவுக்கு என்னைக் கூப்பிட்டிருந்தா ஒருவேளை தெரிஞ்சிருக்கும். என்னை அவங்க கூப்பிடலையே?”“போ... மாமா!” - அவள் சிணுங்கிய அதே நிமிடம்... ஒரு சில ஆசிரியைகளுடன் சந்திரபிரபா வந்து கொண்டிருந்தாள்.“மாமா.. மாமா... அங்க பார். அதுதான் எங்க மிஸ்...”கைநீட்டிய திசையில் பார்த்தான் அசோக்.“அங்கே மூணு டீச்சர் வர்றாங்க. அதுல யாரு உன் புது டீச்சர்?”“அதோ நடுவுல சிவப்பா உயரமா ரொம்ப அழகா இருக்காங்களே... அவங்கதான்.”அதற்குள் அவர்கள் நெருங்கி விட்டனர்.நடுவில் வந்தவளைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வந்த நிலவைப் போல்...மலர்ந்த முகம். கவர்ந்த அழகு. எடுக்க முடியாமல் போனது பார்வை.தொடுக்க முடியாமல் உதிர்ந்த பூக்களாக உணர்வுகள்.வாகனத்தை இயக்க முனைந்தவன் இயக்க முடியாமல் மயக்கமுற்றதைப் போல் ஒரு நிலை...!தயக்கமாக இழுக்க வேண்டியிருந்தது புத்தியை.“மாமா... எங்க மிஸ் எப்படி?”“ம்...”உள்ளுக்குள் எதுவோ நிகழ்ந்த நிலையில் அவன் உயிர் இல்லாத உடல் வாகனத்தை இயக்கும் அதிசயத்தை செய்து கொண்டிருந்தான்.பள்ளி வளாகத்தைக் கடந்தபின் சாலையில் பரவியபோது கேட்டான்.“ஜானு...”“என்ன மாமா?”“உங்க மிஸ் பேர் என்ன?”அசோக் அப்படிக் கேட்டதும் ஜான்சி கலகலவெனச் சிரித்தாள்
Disponible depuis: 14/02/2024.
Longueur d'impression: 121 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre