Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
பாச மலர்கள் - cover

பாச மலர்கள்

ஆர்.சுமதி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

சாரதா குளித்து விட்டுப் புத்துணர்வுடன் வந்தபோது ப்ரவீண் கோவிலிலிருந்து வந்திருந்தான். கையோடு கொண்டு போயிருந்த பையிலிருந்து தேங்காய் மூடி பழம் பூ என எடுத்து மனைவியின் கையில் கொடுத்துக் கொண்டிருந்தான்.சாரதாவைப் பார்த்ததும் அவனுடைய முகம் பூவாக மலர்ந்தது.“அக்கா கிளம்பிட்டியா?”“கிளம்பிக்கிட்டேயிருக்கேன்” என்றாள் சாரதா புன்னகையுடன்.“அக்கா உனக்காகக் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துட்டு வர்றேன். முதன் முதலா வேலையில சேரப் போறே. அதுவும் சாதாரண உத்யோகம் இல்லை. கலெக்டர் உத்யோகம். நினைச்சாலே உடம்பு சிலிர்க்குது. எவ்வளவு பெரிய பதவி. இப்படி ஒரு வேலை பார்ப்பேன்னு யாராவது நினைச்சுப் பார்த்திருப்போமா? இப்ப மட்டும் நம்ம அம்மாவும் அப்பாவும் இருந்தா எப்படியிருந்திருக்கும்?”அவன் கேட்க அவள் விரக்தியாகச் சிரித்தாள்.“நான் இந்த நிலைமைக்கு நிச்சயம் வந்திருக்க முடியாது. என்னை நாலு சுவத்துக்குள்ள அடைச்சுப் போட்டிருப்பாங்க.”“ப்ச்! அக்கா... இந்த நல்ல நேரத்துல ஏன் பழசைசெயல்லாம் கிளறிக்கிட்டு. சந்தோஷமா கிளம்புக்கா. மஞ்சு அக்காவுக்கு விபூதி குங்குமம் கொடு.”“மஞ்சு... பானுவும், பாக்யாவும் எழுந்துட்டாங்களா?” என்றாள்.“இல்லை இன்னும்நீ சீக்கிரம் எழுந்திருக்கிறது பெரிசில்லை. குழந்தைங்களை சீக்கிரம் எழுப்பிப் படிக்க வை. காலையில் எழுந்து படிக்கிற பழக்கம் அதுங்களுக்கு வரணும். ப்ரவீணுக்கு இன்னைக்கு டியூட்டி உண்டா?”“இல்லை சித்தி. இன்னைக்கு அவருக்கு லீவு தான்.”“சரி பசங்களை எழுப்பி படிக்க வை.”“சரி சித்தி...” மஞ்சு நகர்ந்ததும் சாரதா மறுபடியும் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்.நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றி ஏதோ ஒரு சிந்தனையிலிருந்து விடுபடுவதைப் போல் தலையை உதறிக் கொண்டாள்.மஞ்சு சாப்பிட அழைத்தபோது பானுவும் பாக்யாவும் சாப்பாட்டு மேசையின் முன் மடிப்பு கலையாத சீருடையில் பளிச்சென்றிருந்தனர்.“ஆன்ட்டி... குட்மார்னிங்”இருவரும் கோரஸாக கூறினர்.“குட்மார்னிங்” என அவர்களுடைய தோளில் செல்லமாகத் தட்டியபடியே இருவருக்கும் இடையே அமர்ந்தாள்.“ஆன்ட்டி... நீங்க இன்னைக்கு கலெக்டர் வேலையில சேரப் போறீங்களா?” பானு ஆர்வமாகக் கேட்டாள்.பானு மூத்தவள். ஐந்தாம் வகுப்பு படிப்பவள்.“ஆமா. எப்படிக் கண்டுபிடிச்சே?”“அம்மா சொன்னாங்க.”“ஆன்ட்டி... நாங்களும் உங்களை மாதிரியே கலெக்டராவோமா?” பானு ஏக்கமானதொரு குரலில் கேட்டாள்.“ஓ... ஷ்யூர். நல்லா படிச்சா ஆன்ட்டி போலவே கெலெக்டராகலாம்.”சாரதா அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வந்து விட்டனர். அவளை வாழ்த்திப் பேசினர்.
Disponible depuis: 14/02/2024.
Longueur d'impression: 108 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre