Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
நான் பேச நினைப்பதெல்லாம் - cover

நான் பேச நினைப்பதெல்லாம்

ஆர்.சுமதி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

மாதவனை நினைத்தால் சமத்துவத்திற்கு ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. ‘வேடிக்கையான மனிதன்’ என்று நினைத்துக் கொண்டான்.பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோதும் -மாதவனுடைய கண்கள் பேருந்திற்காகக் காத்திருக்கும் பெண்களின் பக்கமே இருந்தது. பக்கத்தில் நண்பன் இருக்கிறானே என்றுகூட ஞாபகம் இல்லாதவனாய் ‘ஜொள்ளு’ விட்டுக் கொண்டிருந்தான்.ஐந்து மணிக்கான பரபரப்பு கொஞ்சம் சோர்வு கலந்து இருந்தது. மாலை நேரக் கடைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சாலையோரம் போட்டு விற்கப்பட்டிருந்த பழைய புத்தகக் கடையை நோக்கி சென்றான் சமத்துவம். புத்தகங்களைப் புரட்டிப் புரட்டித் தேடினான்.அவனைத் திரும்பிப் பார்த்த மாதவன் ‘இவனைத் திருத்தவே முடியாது’ என்று நினைத்துக் கொண்டான். இரண்டு கவிதைப் புத்தகங்களை வாங்கினான். ஆரம்பகால கவிஞர்களின் கவிதைப் புத்தகங்கள் அவை. அந்த புதுக்கவிஞர்களின் புத்தம் புது எழுத்துக்களை ஆவலுடன் பிரித்தான்.“டேய்... பஸ் வருது வாடா...” திடீரென மாதவனின் குரல் வேகமாய் ஒலிக்க அவசரமாக புத்தகத்தை மூடிவிட்டு ஓடி வந்தான்.பேருந்து குப்பை வண்டியைப் போல் மக்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து நின்றது. படிகளில் திராட்சைக் கொத்தைப் போல் கூட்டம் தொங்கியது.உள்ளே எத்தனை பேர் மூச்சுத்திணறி செத்துப் போவார்களோ என தோன்றும்படியான ஒரு தோற்றத்தில் வந்து நின்றது பேருந்து. ஓட்டுநர் மட்டுமே தாராளமாக அமர்ந்திருந்தார்.“ஏறுடா.” மாதவன் துரிதப்படுத்தினான்.பேருந்து கிளம்பியது. வெளிக்காற்று உள்ளே நுழைய இடம் இல்லை. புழுக்கம் அதிகரிக்க வியர்வை நெடி மூக்கை நெருட மிகவும் தவித்தான் சமத்துவம். மாதவன், நெரிசலைப் பற்றியோ, வியர்வை நெடியைப் பற்றியோ துளியும் கவலைப்படாமல் ஒரு குழுவாய் நின்றிருந்த கல்லூரிப் பெண்களையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் விதவிதமான தங்களுடைய காதணிகள் ஊசலாட கொஞ்சம் கூட சோர்வின்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு அழகிய மாய உலகில் இருப்பதைப் போல் மாதவன் மயக்கமான ஒரு போதையில் நின்றான்.“மச்சான்... பாருடா... என்ன அழகு? என்ன அழகு?”“மீனாட்சியை விடவா?” என்ற சமத்துவத்தை முறைத்தான் மாதவன்.“எங்கே யாரை ஞாபகப்படுத்தணுமின்னு உனக்கு விவஸ்தையே கிடையாதுடா. மூடைக் கெடுத்துட்டியேடா பாவி...” என காலை வைத்து மிதித்தான்.அவன் காலை வைத்து மிதித்த அதே நேரம்தான் பேருந்தில் இருந்த அனைவரது காதில் விழுந்தது அந்த கணீரென்ற குரல்,“டேய்... நில்லுடா...”அனைவரும் குரல் வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தனர். சமத்துவமும் பார்த்தான். அவனுக்குப் பின்னால் நாலைந்து ஆடவர்களுக்குப் பின்னால்...அவள் ஒருவனின் சட்டையை தன் இரு கைகளாலும் இறுகப் பற்றியிருந்தாள.ஒரு கணம் அனைவரும் அந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டனர். சமத்துவத்திற்கு தன்னையே அவள் அப்படிப் பிடித்திருப்பதைப் போல் தூக்கிவாரிப் போட்டது. மாதவன் வாயைப் பிளந்தபடி அந்தக் காட்சியைப் பார்த்தான்
Disponible depuis: 14/02/2024.
Longueur d'impression: 106 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Voir livre