Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
கற்பூர ஜோதி - cover

கற்பூர ஜோதி

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

தனக்குள் உண்டான சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தவதென தெரியாமல் திணறி நின்றாள் ரம்யா.தன்னுடைய பிரார்த்தனை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று கனவில் கூட நினைக்கவில்லை அவள்.சற்றுமுன் வேண்டிக் கொண்டிருந்த கடவுளுக்கு நன்றி கூறினாள்.பிரமிப்போடு நிற்கும் அவளை அசைத்தாள் மாமியார்.“என்ன நம்ப முடியலையா? உண்மையாத்தான் சொல்றேன். அவன் இப்பத்தான் போன் பண்ணி சொன்னான்.”அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சிக்கிடையிலேயும் சிறு ஏமாற்றம் நிலவியது.‘ச்சே... நான் பேச முடியாமல் போய் விட்டதே. இன்னொரு தடவை போன் பண்ணி அவர் என்னிடம் சொன்னாலென்ன?’ஏங்கினாள்.“இப்போ அவருக்கு லீவா? எத்தனை மாசம் லீவாம்?”“அதெல்லாம் அவன் சொல்லலை. விஷயத்தை சொல்லிட்டு உடனே போனை வச்சுட்டான். உன்கிட்ட அப்புறம் பேசறதா சொன்னான்.”அந்த பதில் உள்ளுக்குள்ளிருந்த ஏமாற்றத்தை சட்டென்று போக்கியது.‘என் செல்லக்குட்டிக்கு என்னோட பேசவில்லையென்றால் தூக்கம் வராது.’ நெஞ்சுக்குள் சிலிர்த்தாள்.எதிரே நிற்கும் மாமியான ரத்தினாம்பாளை முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சினிமாவில் வருவதைப் போல் தேவதைகள் புடைசூழ ஆடிப்பாட வேண்டும் போலிருந்தது.ரம்யா... வர்ற வெள்ளிக்கிழமை என்ன நாள்னு ஞாபகமிருக்கா?” மாமியார் குறும்பு மிளிர கேட்க மின்னலாக மூளையில் பளிச்சிட்டது.வர்ற வெள்ளிக்கிழமை அவளுடைய கல்யாண நாள். ஒவ்வொரு கல்யாண நாளின் போதும் அவள் கணவனின் பிரிவை எண்ணி மன அழுத்தத்துடன் இருப்பாள். கோயிலுக்குப் போவாள். புதுப்புடவை உடுத்துவாள். ஆனால் மனம் நிம்மதியுடன் இருக்காது. ஏதோ சந்தோஷத்தை இழந்ததைப் போலிருக்கும்.ரமேஷ் தொலைபேசி மூலம் பேசுவான். ஆனால் அது அவளுக்கு பூரணமானதொரு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் -இதோ இந்த முறை அவன் நேரில் வருகிறான். இந்தக் கல்யாண நாளையும் விரக்தியாகத்தான் கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். அவன் வருகிறான்.மருமகளின் முகத்தில் தெரிந்த நாணம் கலந்த பரவசத்தை கண்ட மாமியாரின் முகத்தில் சிரிப்பு பரவியது.“அத்தை... என்னோட கல்யாண நாள்...”“ரெண்டு வருஷமா ஒவ்வொரு கல்யாண நாள்லேயும் நீ கண் கலங்கி நிற்பே. இந்த வருஷம் அப்படியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கல்யாண நாளை நல்லா கொண்டாடணும்...”“அத்தை... இந்த சந்தோஷமான செய்தியை நான் உடனே எங்க அம்மா அப்பாவுக்குச் சொல்லணும்.”உற்சாகமாக குதிக்காத குறையாக இருந்தாள்.“தாராளமா சொல்லும்மா.”கையிலிருந்த அர்ச்சனைக் கூடையை அத்தையின் கையில் கொடுத்துவிட்டு தொலைபேசிக்கருகே ஓடினாள்
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 97 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch