Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
கண் வரைந்த ஓவியமே! - cover

கண் வரைந்த ஓவியமே!

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

எமகாதகனாக இருப்பான் போலிருக்கிறது. எதுவும் தெரியக்கூடாது என்று தானே அப்படிப் பொய் சொன்னேன். ஆனாலும் எப்படியோ கண்டு பிடித்து விட்டானே?’வீட்டிற்குத் திரும்பும் போது இதையே யோசித்துக் கொண்டிருந்தாள் மங்களா.“ச்சே... எங்கெங்கெல்லாம் வேலைக்கு முயன்றேன். எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் இந்தக் கம்பெனிக்கு வரவேண்டியதாகிப் போனதே! உண்மையை மறைத்தும் எல்லாம் தெரிந்து விட்டது. இவனுடையபேச்சில் நாகரீகம் தெரிகிறது. கடைசி வரை இதை கடைப்பிடிப்பானா? இல்லை மெல்ல மெல்ல ராஜி கம்பெனி பற்றிய விவரங்களைக் கிளறத் தொடங்குவானா? இவன் எப்படிப் பட்டவன்? அடுத்தவனைக் குப்புறத் தள்ளி விட்டு தான் முன்னேற வேண்டும் என நினைப்பது தானே உலகம்? அப்படி ஏதாவது கிளற நினைத்தால் வேலையை விட்டுவிட வேண்டியதுதான்.’இப்படி நினைத்தபோது உள்ளுக்குள் மனதின் மூலை யின் ஒரு குரல் சிரித்தது.‘பைத்தியம்! பழைய கம்பெனியிலிருந்து விலகிய பின் வேலை தேடி எவ்வளவு சிரமப்பட்டாய்! ஒரு வருடம் சரியாக ஒரு வருடம் வேலை இல்லாமல் அலைந்ததை மறந்து விட்டாயா? ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட எவ்வளவு சிரமப்பட்டாய்? புதிதாக ஒரு வேலை கிடைத்ததும் பழைய அலைச்சலும், கஷ்டங்களும் மறந்து விட்டதா? வெகு எளிதாக வேலையைத் தூக்கி எறிவேன் என நினைக்கிறாயே? பைத்தியம். பணம்! பணம்தான் வாழ்க்கை. பணம் இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.அந்தப் பணத்திற்காகத்தானே அக்கா அருந்ததி அடிக்கடி வந்து நிற்கிறாள். அந்தப் பணத்திற்காகத் தானே நான் அந்தக் கோசலை மைந்தனிடம் போய் நிற்க வேண்டியிருந்தது.’‘பணம். பணம் என்னடா பணம் பணம்? குணம் தானடா நிரந்தரம்?‘கவிஞர் எப்படி இந்த வரிகளை எழுதியிருப்பார்? அவரே எவ்வளவோ தடவை பணத்திற்காக பரிதவித்த பின்னும் இப்படி எழுத எப்படி மனம் வந்தது?’குணம் நிரந்தரமென்றால் அக்கா அருந்ததியை அத்தான் கொண்டாடியிருக்க மாட்டாரா? கொண்டு வாடி என ஏன் அடிக்கடி துரத்தியடிக்கிறார்?வியாபாரத்திற்கு ஐம்பதாயிரம் பணம் வேண்டும் வாங்கி வா என புருஷன் அனுப்பியதாக வந்து நின்ற அருந்ததி திரும்பிப் போக வேண்டுமென்றால் கண்டிப்பாக ஐம்பதாயிரம் கொடுத்தே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் அவளை வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாப் பொறுப்புகளையும் உதறிவிட்டு இறைவனைத் தேடி இமயமலைக்குச் செல்லும் துறவிகளைப் போல் அப்பா காவி கட்டாமலேயே கைலாசத்திற்குப் போய் விட்டார். இருப்பதைப் போட்டு அக்காவை கட்டிக் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டாலும், இன்னும் என்ன இருக்கு எடுத்து வா என அக்கா புருஷன் அனுப்பிக் கொண்டேயிருக்க அவளுடைய தேவைகளைத் தீர்க்கும் தேவதையானாள் மங்களா.அந்தத் தேவையைத் தீர்க்க இந்தத் தேவதை போய் நின்றது கோசலை மைந்தனிடம்!அவர் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ள நினைத்தார்.‘இந்தப் பணம் தானே கோசலை மைந்தனை என்னைத் தவறாக எடை போட வைத்தது!’நெஞ்சு கொதித்தது நிமிடத்தில்! மறக்க முடியுமா அந்த மனவேதனையை?மோதி மிதித்து விட்டாள். முகத்தில் உமிழ்ந்து விட்டாள். விலகி வந்து விட்டாள். விவேகத்துடன் மன்னித்து விட்டாள்.ஆனால்? ஆனால்..?உள்ளுக்குள் கூனி குறுகிப் போய் விட்டாளே!கடனாகப் பணம் கேட்டதற்கு அவன் சம்பளத்தில் கழித்துக் கொள்ளாமல் சல்லாபத்தில் கழித்துக் கொள்ள நினைத்தது எதனால்?பெண்! பெண் என்ற ஒரே காரணத்தில் தானே?பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிறார்கள். அது முற்றிலும் சரியான வார்த்தையே!அந்தக் கோசலை மைந்தனிடம் வலியச் சென்று விழும் பெண்களால் தானே அவன் என்னையும் அதே கோணத்தில் பார்த்தான். ஆபாசம் கூடாது என மேடை போட்டு பெண்கள் பேசுகிறார்கள். போஸ்டரைக் கிழிக்கிறார்கள். சினிமா எடுத்த இயக்குனர்களை சாடுகிறார்கள். ஆண்கள் காமப்பேய்கள் என்கிறார்கள். அரைகுறை ஆடையில் பெண்கள் ஆடமுடியாது. நடக்க முடியாது என்று சொன்னால் அவரைகளைக் கட்டி வைத்து அடித்தா நடிக்க வைக்கிறார்கள்? அரைகுறை ஆடையில் நடிக்க நாங்கள் தயார் எனச் சொல்லும் நடிகைகள் பெண்கள் தானே? அவர்கள் தானே முதல் எதிரிகள்?பெண் கொடுமைகள் மட்டுமல்ல சமுதாயத்தில் பெண்களின் கேவலமான நிலைக்கும் பெண்களே காரணம்.
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 139 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Zum Buch
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Zum Buch
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch