Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
அன்பிற்குப் பஞ்சமில்லை - cover

அன்பிற்குப் பஞ்சமில்லை

ஆர்.சுமதி

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

அந்த பெரிய துணிக்கடை எதிரில் நின்றுகொண்டு ஆதிரையும், குகனும் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் புற்றீசலாய் பறந்து கொண்டிருந்தது. அதை மீறி ஆதிரை பேசினாள்.“இதோப் பாருண்ணே அடம்பிடிக்காமல் உனக்கும் ஒரு பேண்ட் சட்டை வாங்கிக்க. எனக்கு பட்டுச்சேலை வேண்டாம். நீ துணி எடுத்துக்காட்டி நான் அப்படியே திரும்பி போய்விடுவேன்” என்று மிரட்டினாள்.“நான் சொல்றதை நீ கேளு. எனக்கு ஒண்ணும் வேண்டாம்” என்றான் குகன்.அதேநேரம் பின்னால் ஒரு குரல் அவர்களின் உரையாடலுக்கு இடையில் புகுந்தது.“அலோ... குகன்...”குரல் அதிரடி தாக்குதலாய் கேட்க சண்டைக்கிடையில் சட்டென அமைதியாகி திரும்பினான் குகன். மறுகணம் பற்பசை விளம்பரமாய் சிரித்தான்.அவனுடைய அலுவலக மேனேஜர் சந்திரன் நின்றிருந்தான்.“அலோ சார் நீங்களா? எங்கே இந்த பக்கம்?” என்றான்.“சும்மாதான்... தீபாவளிக்கு துணி எடுக்கலாம்ன்னு வந்தேன்.”ஆதிரை அவனைப் பார்த்தான். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற சதை பிடிப்பு. ஒழுங்காய் வாரிய தலை. கண்களில் சுடர்விடும் படிப்பறிவு. முகத்துக்கேற்ற மீசை. லேசாக தொப்பை தெரிவதைப் போன்ற தோற்றம். கருப்பு கலர் பேண்ட். வெள்ளை நிற சட்டை. அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தான்.ஆதிரையை பார்த்ததும் “இவங்க...” என்று இழுத்தான்.“என்னுடைய ஒரே தங்கை ஆதிரை” குகன் அறிமுகப்படுத்தி வைக்க,“அலோ...” என புன்னகை புரிந்தான். கூடவே அவளை அளந்தான்.‘எப்படியும் என் தோள் உயரம் இருப்பாள். என்னைவிட நிறம். இறுக்கிப் பின்னாமல் தளர்ந்த சடை. வட்ட முகத்தில் ஒட்டும் பொட்டு பளிச்சென இருந்தது. முத்தமிடும் உணர்வை தூண்டுகிற இதழ்கள். என்னவோ மந்திரவித்தை கற்ற விழிகள். இழுத்துக் கொண்டதே என் பார்வையை. திணறடிக்கும் இளமைகள். வளைந்த வாகான இடை. தரைவரை புரளும் சேலை. அழகு மான் ஒன்று சாலையில் நிற்பதைப் போல் நிற்கும் இவள் குகனின் தங்கையா? இப்படி ஒரு தங்கை இருக்கிறாளா இவனுக்கு?”இப்படியெல்லாம் எண்ணினான் சந்திரன். ஆதிரை அடக்கமாகப் புன்னகைத்தாள். அவளின் அடக்கமான புன்னகைக்குள் அடங்கிப் போனான் சந்திரன். அவள் சிரித்தது நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ஒருவித மென்மையான துடிப்புகள். அவசரமாக, ஏதாவது பேசியாக வேண்டுமே என“உங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறதா சொல்லவே இல்லையே...” என்றான்.“ஆமா. சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கலை. ஆதிரை இவர் எங்கள் மேனேஜர் சந்திரன்” என்று அவனை அறிமுகப்படுத்தினான்.அவன் மேனேஜர் எனத் தெரிந்ததும் ஒரு மதிப்பு வந்தது அவன் மேல்.“என்ன படிக்கறீங்க?” என்று அண்ணனை விடுத்து நேரடி உரையாடலில் இறங்கினான் சந்திரன்.“படிச்சு முடிச்சிட்டேன். பி.ஏ. இப்ப ஒரு பள்ளியில வேலை பார்க்கிறேன்.”“ஓ...” என்றவன் மேற்கொண்டு என்ன பேசுவதென அண்ணன் பக்கம் திரும்பி “என்ன தீபாவளிக்கு துணி எடுக்க வந்தீங்களா?” என்றான்.“ஆமாம். அதான் துணிக்கடை வாசலில் நின்னுகிட்டு ரெண்டு பேரும் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்று குகன் சொல்ல ஆதிரை பானுப்பிரியா கண்களில் கோபம் காட்டினாள்.“விவாதமா... சண்டை! நீங்களே இதைக் கேளுங்க மிஸ்டர்...” என்று அவன் பெயர் தெரியாமல் நிறுத்தினாள்.“என் பெயர் சந்திரன்” என்றான் சந்திரன்“மிஸ்டர் சந்திரன்” என்று தொடங்கியவள் - “இங்க பாருங்க, எங்க அண்ணனோட சம்பளம் மூவாயிரம்.”“தெரியும்.”“என் சம்பளம் அறுநாறு”“அடப் பாவமே...”“இதுல மாசா மாசம் சேர்த்த பணம் கொஞ்சம். மொத்தமா இப்ப கைவசம் ஐய்யாயிரம். இதுல தீபாவளி டிரஸ் எடுக்கணும். சுவீட், பட்டாசு... இப்படி நிறைய. இந்த அண்ணன் என்னன்னா எல்லாப் பணத்துக்கும் எனக்குப் பட்டுச்சேலை எடுத்தாலே எடுத்தபடின்னு ஒத்தக்கால்ல நிக்கிது. எங்க அண்ணனுக்கு டிரஸ் வேண்டாமாம்.தீபாவளின்னா சந்தோஷமா கொண்டாடணும். நான் மட்டும் பட்டுல நிக்கணும். இவர் பழைய டிரஸ்ல நிக்கறதை பார்த்துகிட்டு நான் எப்படி சந்தோஷமா இருக்கமுடியும். பட்டு வேண்டாம். வேற சேலை எடு. உனக்கும் பேண்ட், சட்டை எடுத்துக்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறார். நீங்கள் சொல்லுங்க சார்...”அவளின் கண்ணில் அதற்குள் கண்ணீர் தளும்பியது
Disponible depuis: 14/02/2024.
Longueur d'impression: 106 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre