Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
ஆசை ஆசை ஆசை - cover

ஆசை ஆசை ஆசை

ரமணிசந்திரன்

Casa editrice: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinossi

இனிமையான நாதஸ்வர இசை! கம்பீரமும் குழைவுமாகக் கேட்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது!ஆனாலும் ஒரு குறை! ஓடிக் கொண்டிருந்தது, டேப்! பெரிய வித்வானின் வாசிப்புதான் என்றாலும், அந்தப் பெரிய திருமண மண்டபத்துக்கும், அதில் நடக்க இருக்கும் விழாவுக்கும், டேப்ரிகார்டருக்கும் சற்றும் ஒத்து வராதது போல, மதிவதனிக்குத் தோன்றியது!அதுவும் கொஞ்சம் விலை மலிவான ப்ளேயர்! அத்தை வீட்டில் விலை உயர்ந்ததும் இருக்கத்தான் செய்கிறது! ஆனால், மண்டபத்துக்கு அதைக் கொணர்ந்து திருட்டுப் போய்விட்டால்?அந்த ஒரு காரணத்துக்காகவே கொண்டு வரப்பட்டது, இது! அதற்காக, இது திருட்டுப் போனால் பரவாயில்லை என்பதல்ல!“அதன் மேல் ஒரு கண் வைத்துக்கொள், வதனிக் கண்ணு! திருமணமும் அதுவுமாக உருப்படியான ஒரு பொருள் தொலைந்து போனால் நல்லதில்லை! அதனால் தான் பார்த்துக்கொள் என்று உன்னைச் சொல்லுகிறேன்! உனக்குத் துணையாகத்தான், உன் சித்தி, மாமா, பெரியம்மா, அவர்கள் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமே வந்திருக்கிறார்களே! ஒரு கண் வைத்துக் கொள்ளும்படி, எல்லாரிடமும் சொல்லி வைத்துவிடு!” என்று சொல்லி விட்டுத்தான் அத்தை நகர்ந்தாள்.“எங்கள் அண்ணி கூப்பிட்டிருக்கிறார்கள். வராவிட்டால் தப்பாகி விடும். அதனால், குடும்பத்தோடு எல்லோருமே வந்துவிடுங்கள்” என்று மதியுடைய அன்னை சொல்லித்தான், அவள் வழி உறவினர் எல்லோரும், இந்த மாப்பிள்ளை அழைப்பும் பட்டுக் கட்டுவதுமான முந்தைய நாள் விழாவுக்கே வந்ததே!இப்போது, அதையுமே மட்டம் தட்டுவது போலப் பேசுவதா என்று, மதிவதனிக்குச் சற்றுக் கோபம்தான்! அத்தையின் பேச்சு எப்போதுமே, இப்படித்தான்! தரம் சற்றுக் குறைவுதான்இந்த டேப் ரிக்கார்டரைப் போல!கொஞ்சம் இரண்டாவது நிலையில் உள்ள நாயனம் என்றாலும், ஒத்தும், தவிலும், தாளமுமாக, அந்தக் கம்பீரத் தோற்றமே, திருமணத்தை அழுத்தத்துடன் முன் மொழிவது போல இருக்குமே!அதை விட்டு, இருந்திருந்து, இதில் போய்ப் பெரிதாகச் சிக்கனம் பிடிக்கிறார்களே, இந்த அத்தை! இதில் மட்டுமல்ல! அவர்களால் முடிந்த எல்லாவற்றிலும்!மதிவதனியுடைய தந்தைகூட, அவருடைய தங்கையும், மணப் பெண்ணான மோனி என்கிற மோகனாவுடைய தாயுமான சுந்தரியிடம் சொல்லிப் பார்த்தார்!“போங்கண்ணா! நானே பெரிய இடத்தில் பெண்ணைக் கொடுக்கிறோமே என்று, தங்கமும் வெள்ளியுமாகப் பெரும் செலவில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்! இந்த மண்டபத்துக்கே எவ்வளவு பணம்! உங்களிடம் பணம் இருந்தால், நல்லதாக ஒரு நாதசுர செட்டை நீங்களே ஏற்பாடு பண்ணுங்கள்! என்னால் ஆனது இவ்வளவுதான்!” என்று முடித்துவிட்டு, “எனக்கு எவ்வளவு வேலை கிடக்கிறது? உதவிக்கு ஒரு நாதி இல்லாமல் நான் பாடாய்ப் பட்டுக் கொண்டிருக்கிறேன்! என்னை நிறுத்தி வைத்துப் பேசுகிறீர்களே!” என்று குறைப்பட்டவாறே, அங்கிருந்து போய் விட்டாள்.உதவிக்கு ஒரு நாதி இல்லாமலா?வேர்த்து வடிய, இங்குமங்கும் ஓடி, மண்டபத்துக்கு முன்னதாக வந்துவிட்ட உறவினர்களை வரவேற்பதும், உணவு பானம் அளித்து உபசரிப்பதும், இடையிடையே சுந்தரியின் அழைப்புகளுக்கு ஓடுவதுமாகப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்த மனைவியைப் பார்க்கையில், சுதர்சனத்துக்கே பாவமாக இருந்தது!அதே போல, மகள் மதிவதனியும், மண்டபத்துக்கு வந்ததில் இருந்து வேலைதான் செய்து கொண்டிருக்கிறாள்!அவள் மட்டுமல்ல! அவளுடைய தாய்வழி உறவுப் பெண்களும், அவளோடு வந்து, மாப்பிள்ளை அழைப்புக்கான ஆரத்தித் தட்டுகளை விதம் விதமாக அலங்கரித்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்!
Disponibile da: 03/04/2025.
Lunghezza di stampa: 185 pagine.

Altri libri che potrebbero interessarti

  • திருப்புகழ் - சுவாமிமலை திருத்தணிகை - cover

    திருப்புகழ் - சுவாமிமலை திருத்தணிகை

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் மூன்றாம் தொகுதியாக 201 முதல் 308 வரையிலான 108 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் சுவாமிமலை, திருத்தணிகை, குன்றுதோறாடல், ஆறு திருப்பதி ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. 
     
    Mostra libro
  • Ilaignar Ilakkiyam - cover

    Ilaignar Ilakkiyam

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    இளைஞர் இலக்கியம் என்ற நூலை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். இந்நூலினை மரபுப்பாடல்களால் ஆக்கியுள்ளார். ஒன்பது பெருந்தலைப்புகளின் கீழ் அமைந்துள்ளன. ஒன்பது தலைப்புகளிலும் வெவ்வேறு குறுந்தலைப்புகளில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. பாவேந்தர் குழந்தைகள் மனதில் நற்சிந்தனைகளை  இனிய தமிழில் எடுத்துரைப்பது சிறப்பானதாகும். கவிதைக்கு அழகைச் சேர்ப்பது பைந்தமிழ்ச் சொற்கள். ஆதலால் இலக்கியச் சொற்களைக் கவிதைகளில் கூட்டும் போது குழந்தைகளின் சொல் அறிவும், மொழி அறிவும் அதிகரிக்கும். “வில்லடித்த பஞ்சு /  விட்டெறிந்த தட்டு /  முல்லை மலர்க் குவியல்; /முத்தொளியின் வட்டம்; / நல் வயிரவில்லை; /நானில விளக்கு” சந்திரனுக்கு நல்ல தமிழ்ச்சொல் நிலவு. அந்த நிலவில் அந்த நிலவின் அழகைப் பாவேந்தர் குழந்தைகளுக்கு இலக்கிய சொற்களைக் கொண்டு எடுத்துக்கூறும் விதம் சிறப்புக்குரியது. அகழி, முணறி, குணகடல், உய்யும் என்பன கவிஞர் பயன்படுத்தியிருக்கும் சொற்களாகும். “சொக்க வெள்ளித்தட்டு – மிகத் / தூய வெண்ணெய்ப்பிட்டு / தெற்கத்தியார் சுட்டு – நல்ல / தேங்காய்ப் பாலும் விட்டு” நாளைய தலைமுறைகளான குழந்தைகளின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்ந்த வேண்டும் என்ற கற்பனை எண்ணத்துடன் பாவேந்தர் கவிதை படைக்கிறார். “குயிலே குயிலே கூவாயோ? / குரலால் என்னைக் காவாயோ? / பயிலும் உன்வாய் பூவாயோ? / பயனை அள்ளித் தூ வாயோ?” எனும் இப்பாடல் குழந்தைகளுக்கு ஓசையின்பம் அளிக்கிறது. “சின்னஞ்சிறு குட்டை – அதில் / ஊறும் தென்னை மட்டை – அதோ கன்னம் கரிய அட்டை – எதிர் / காயும்
    Mostra libro
  • Valayapathi Full - வளையாபதி - Tamil Audio Book - cover

    Valayapathi Full - வளையாபதி -...

    Unknown

    • 0
    • 0
    • 0
    தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது, சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. 
    கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துகளை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை, கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.
    Mostra libro
  • Avvaiyar Kondrai Vendhan - Tamil Audio Book - கொன்றை வேந்தன் - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Kondrai Vendhan - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    கொன்றை வேந்தன் ஒளவையார் எழுதிய  ஒழுக்க நூல்களில் ஒன்று. இந்த நூல் மன்னர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நல்லாட்சி, தர்மம், நீதிமுறை, பக்தி, கல்வி போன்ற வாழ்க்கை நெறிகளை எளிய முறையில் எடுத்துரைக்கிறது. 
         அடக்கம், பணிவு, கருணை, அறிவு, கல்வி, பக்தி ஆகிய நல்லொழுக்கங்கள் போதிக்கப்படுகின்றன மேலும் இதில் அரசனின் கடமைகள், குடிமக்களின் நெறிகள் மற்றும் மனித வாழ்வின் உயர்ந்த வழிமுறைகள் விளக்கப்படுகின்றன. 
    இது தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஒழுக்க நூல்களில் ஒன்று  
    கொன்றை வேந்தனைப் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் நல்லாட்சி, நீதிமுறை, தர்ம சிந்தனை ஆகியவை வளரும்.
    Mostra libro
  • Sirappuranam Nubuvvaththukkantam - cover

    Sirappuranam Nubuvvaththukkantam

    Umaruppulavar

    • 0
    • 0
    • 0
    தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர். இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். 
    நபிப்பட்டம் பெற்ற படலம்; தொழுகை வந்த வரலாற்றுப் படலம்; தீனிலைக்கண்ட படலம்; உமறுகத்தாபீமான் கொண்ட படலம்; உடும்பு பேசிய படலம்; உத்துபா வந்த படலம்; அபீபு மக்கத்துக்கு வந்த படலம்; மதியையழைப்பித்த படலம்; தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்; அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்; ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்; மானுக்குப் பிணை நின்ற படலம்; ஈத்தங்குலை வரவழைத்த படலம்; ஒப்பெழுதித் தீர்ந்த படலம்; புத்து பேசிய படலம்; பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்; பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்; அத்தாசீமான் கொண்ட படலம்; சின்களீமான் கொண்ட படலம்; காம்மாப் படலம்; விருந்தூட்டுப் படலம் என ரமணியின் இந்த ஒலி நூலில் நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்) 20 படலங்கள் உள்ளன.
    Mostra libro
  • Kanivu - cover

    Kanivu

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Mostra libro