Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
காதலிக்க நேரமில்லை - cover

காதலிக்க நேரமில்லை

LS Morgan

Traduttore Charlie

Casa editrice: Tektime

  • 0
  • 0
  • 0

Sinossi

காதலிக்க நேரமில்லை

ஜார்ஜ் கோல்ப்பிற்கு யாரையும் காதலிப்பதில் விருப்பமில்லை, அவர் எந்த ஒரு பெண்ணுடனும் உணர்ச்சிகரமான உறவை நீட்டிக்க விரும்பவில்லை. ஆனால் ஜூலியானா ஃபுயெண்டஸ் என்ற இந்த அழகிய பெண்ணை சந்திக்கும்போது, அவரது பிரம்மச்சாரி வாழ்க்கை மற்றும் மன உறுதி இரண்டுமே அவரது விருப்பத்திற்கு நேர்மாறாக செயல்படப் போகிறது என்பதை அவர் எதிர்பார்கவில்லை.

பாவ கதை வரிசையில் காமக் கதை
Disponibile da: 06/09/2023.
Lunghezza di stampa: 42 pagine.

Altri libri che potrebbero interessarti

  • வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே - Vanjithaai Vanjikkodiye - cover

    வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    சிறுவயது முதலே நாயகனை மனதில் வைத்து காதலில் உருகும் நம் நாயகிகள் இதழினி மற்றும் தன்மதி. 
    தன் குரல் மூலம் அறிமுகமாகிய பெண்களை விரும்பும் நாயகர்கள் ஜீவன் மற்றும் சஞ்சய். 
    தந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமண வாழ்வில் இணையும் ஜீவன்-இதழினி மற்றும் சஞ்சய்-தன்மதி. 
    இரு நாயகர்களும் தங்கள் காதலை தங்கள் மனம் முடித்த பெண்களிடம் உணர்வார்களா? அல்லது அவர்கள் காதலித்த வஞ்சியின் குரலை மனதில் நிறுத்தி கரம் பிடித்த பெண்களை தண்டிப்பார்களா? 
    வஞ்சனையில் சிக்கிய நாயகர்களை அதிலிருந்து மீட்பார்களா வஞ்சிக்கொடிகள்?
    Mostra libro
  • நம்பிக்கை ஒளி - Nambikkai Oli - Short Story - குறுநாவல் - cover

    நம்பிக்கை ஒளி - Nambikkai Oli -...

    Pavala Sankari

    • 0
    • 0
    • 0
    நம்பிக்கை ஒளி - Nambikkai Oli நம்பிக்கை ஒளி இரவென்று ஒன்றிருந்தால் பகல் என்ற ஒன்று வந்தே தீருமல்லவா ? இதில் தீவிரமான நம்பிக்கை கொண்டவர்களே சாதனையாளராகிறார்கள் கடலில் அலை ஓய்ந்தால்தான் மீன் பிடிப்பேன் என்பது சாத்தியமில்லை . அலையை எதிர்த்துப் போராடும் வல்லமையுடன் வாழ்ந்து பார்த்தால் அதன் சுகமே அலாதிதான். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை ஒளி வழிகாட்ட, அந்த தைரியத்தில் வானத்தை வசப்படுத்தி வெற்றி கண்ட நாயகிதான் மாலதி
    Mostra libro
  • Pirivom Sandhippom - 1 - cover

    Pirivom Sandhippom - 1

    Sujatha

    • 0
    • 0
    • 0
    ரகு, மதுமிதா, ரத்னா, ராதா கிருஷ்ணன் இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை சொல்லித்தருகிறார் எழுத்தாளர் சுஜாதா. காதல் ஏற்படுத்தும் சுகம், வலி, விழிப்புணர்வு, விபரீத முடிவு என அனைத்துத் தளத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது நாவலுக்கு கூடுதல் பலம். பெண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அவர்கள் காரணமல்ல என்றும், வெள்ளந்தியான பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் இந்தக் கதையில் இயல்பாக பதியவைக்கப்பட்டிருக்கிறது.
    நம் தேசத்தில் இருந்து அயல் நாட்டிற்கு குடியேற விரும்புகிறவர்கள் இருப்பதுபோல தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் எழுத்தாளர், அவர்களின் மனங்கள் படும் பாட்டையும் பட்டியலிடுகிறார். முதல் காதல் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை இந்த நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.
    Mostra libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • நீங்காத நினைவிதுவோ - Neengatha Ninaivithuvo - cover

    நீங்காத நினைவிதுவோ - Neengatha...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தன் ஊனோடும், உணர்வுகளோடும் கலந்து, தன் உதிரத்தை பரிசளித்து, அளவில்லா காதலை அள்ளித்தெளித்து, கைக்கெட்டாத தூரம் காற்றோடு கலந்தாலும், என்றும் உன் நினைவுகள் தரும் சுகமான வலிகளுடனும் அழியாக் காதலுடனும், நான்... இக்கதையின் நாயகி.
    Mostra libro
  • ஆழியின் நேச அரசனவன்! - Aaliyin Nesa Arasanavan - cover

    ஆழியின் நேச அரசனவன்! - Aaliyin...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    😍😍வனத்தின் மகளான நம் நாயகியும் பண முதலைகளில் ஒருவனான நம் நாயகனும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். தன் நேசத்தால் நாயகன் எண்ணத்தை மாற்றினாளா நம் கதையின் நாயகி என்பதை இருவருக்கும் இடையே நிகழும் சுவாரஸ்யமான காதல் காட்சிகளுடனும் பல எதிர்பாராத திருப்பங்களுடனும் ரசிக்கும் படியாக எழுதியுள்ளேன்.  
    நிச்சயம் இந்தக் நாவல் உங்கள் அனைவர் மனதையும் கவரும் என்று நினைக்கிறேன்.😍😍
    Mostra libro