Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
தீயாய் வந்த தென்றல் - cover
LER

தீயாய் வந்த தென்றல்

ஆர்.மகேஸ்வரி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

சிறிய கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தது.“ஐயோ... ரத்தம் ஆறாய் போகுதே! பிடியுங்க... இறுக்கிப் பிடியுங்க...!” பதற்றத்தோடு கூறிய கவுதம், அவள் அருகே சென்று, காயத்தைப் பிடிக்கப் போக... அவன் கையை கோபமாக தட்டி விட்டாள்.“தொடாதீங்க... தொட்டால் நடக்கிறதே வேறு! நான் பொல்லாதவளா ஆயிடுவேன்!”“முதல்ல ரத்தத்தை நிறுத்தணும்... ஏராளமா ரத்தம் வீணாகுதே!” என்றவன், தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு... கைக்குட்டை எடுத்து உதறி கட்டுப் போடப் பார்த்தான்.அவள் பின்னே நகர்ந்தாள்.“போங்க... போயிடுங்க! என்னைப் பற்றிக் கவலைப்பட நீங்க யார்?”“சாரி... சாரிம்மா... நீங்க திடீர்னு வந்ததை நான் கவனிக்கலே! வேணும்னு உங்களை விழ வைக்கல. தெரியாமல் நடந்துடிச்சி! வாங்க, ஆஸ்பத்திரிக்கு போகலாம்... என் கார் அங்கே நிற்குது. கொண்டு வரேன்!”“ஆஸ்பத்திரிக்குத்தானே? எனக்கு போய்க்க தெரியும்! நீங்க உங்க வேலையைப் பாருங்க!’’கவுதம் புரியாமல் விழிக்க...“பெண்களை துரத்தும் உங்க வேலையைத்தான் சொன்னேன்!”பிரியா நக்கலாய் பேசினாள். கவுதமுக்கு அவமானமாக இருந்தது.“என்னைத் தப்பா புரிஞ்சிட்டீங்க!”“சரியாத்தான் புரிஞ்சிருக்கேன்!“அவள் என் மாமா பெண். அவளுக்கு சுடிதார் வாங்க வந்தேன். எனக்கு எதுவும் பிடிக்கலே! அவள் போவதைப் பார்த்ததும், அவளையே அழைச்சிட்டு வந்து... அவளுக்குப் பிடிச்சதா வாங்கலாம்னு ஓடி வந்ததில்... தெரியாமல் மோதிட்டேன். சாரி... வெரி சாரி... முதல்ல வாங்க... பேச நேரமில்லை!” அவன் அவசரப்படுத்த...“எனக்குப் போகத் தெரியும்!”“வீம்பு பிடிக்காதீங்க! சொன்னா கேளுங்க!”“ஆட்டோ... ஆட்டோ...” என்று கைதட்டி அழைத்து... அதில் ஏறிப் போனாள் பிரியா. இறக்கையை இழந்த வண்ணத்துப் பூச்சியாய் வலியில் துடித்தாள்.கவுதம் மனம் பதைபதைத்தது. ‘எக்கேடோ கெட்டுப் போகட்டும்’ என்று விட்டுப் போக மனமில்லாமல்... காரில் ஆட்டோவைப் பின்தொடர்ந்தான்.ஆஸ்பத்திரியில் காயங்களுக்கு தையல் போடப்பட்டது...வராந்தாவில் கையைப் பிசைந்து கொண்டு நின்றான் கவுதம். டாக்டர் வெளியே வர...“டாக்டர்... காயம் பலமா?”“ஆமா சார், நாளை வீட்டுக்குப் போகலாம். அவங்க உங்களுக்கு என்ன வேணும்?”“தெரிந்த பெண்!” என்றான், யோசிக்காமல்.“நான் பார்க்கலாமா?”“ஓ.கே!’’ என்று டாக்டர் சென்று விட உள்ளே நுழைந்தான்.“உங்களை யார் வரச் சொன்னது? எதுக்கு வந்தீங்க?” கோபமாய் கத்தினாள்.“தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிக்கக் கூடாதா?”“என்ன தெரியாமல்? அழகான பெண்களைக் கண்டால்... எதிரில் வருபவர்களைத் தெரியாதா?” சீறினாள்.“தப்பா பேசாதீங்க...“நான் அப்படித்தான் பேசுவேன்!”“மன்னிக்க முடியாதா... என் செயலை!”“முடியாது, முதலில் வெளியே போங்க!”“டாக்டர் உங்களை நாளைக்குப் போகச் சொல்கிறார். உங்க ‘அட்ரஸ்’ சொல்லுங்க.”அவள் முறைத்தாள். கண்களில் நெருப்பு கனல் வீசியது.“உங்க அப்பா பெயர் என்ன? உங்கள் வீட்டு போன் நெம்பர் கொடுக்க முடியுமா?”இந்தக் கேள்வியால் பத்ரகாளி ஆனாள்
Disponível desde: 15/02/2024.
Comprimento de impressão: 132 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Kamparamayanam Suntharakantam - cover

    Kamparamayanam Suntharakantam

    Kampar

    • 0
    • 0
    • 0
    கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 
    5            சுந்தர காண்டம் 14 படலங்கள் 
    1.   கடல் தாவு படலம் 
    2.   ஊர் தேடு படலம் 
    3.   காட்சிப் படலம் 
    4.   உருக் காட்டு படலம் 
    5.   சூடாமணிப் படலம் 
    6.   பொழில் இறுத்த படலம் 
    7.   கிங்கரர் வதைப் படலம் 
    8.   சம்புமாலி வதைப் படலம் 
    9.   பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் 
    10. அக்ககுமாரன் வதைப் படலம் 
    11. பாசப் படலம் 
    12. பிணி வீட்டு படலம் 
    13. இலங்கை எரியூட்டு படலம் 
    14. திருவடி தொழுத படலம் 
    15.  அனுமன் இலங்கைக்குச் செல்ல வான்வெளியில் பறந்து செல்கிறார். வழியில் எதிர்படும் தடைகளை இராம நாமம் கொண்டு வெற்றி பெற்று இலங்கையை அடைகிறார். அங்கே அசோகவனத்தில் உள்ள சீதையைக் கண்டு, தான் இராமனின் தூதுவன் என்று கூறி இராமனின் அடையாளமான மோதிரத்தினைத் தந்து தெரிவிக்கிறார். சீதையும் அந்த மோதிரத்தினைப் பெற்றுக் கொண்டு சூளாமணி எனும் அணியைத் தருகிறாள். இராவணனைச் சந்தித்து அனுமன் இராமனின் பெருமைகளைக் கூறி, சீதையை இராமனிடம் சேர்த்துவிடும்படி கூறுகிறார். ஆனால் இராவணன் அனுமன் வாலில் தீயிடுகிறான். அனுமன் இலங்கையையே எரித்துவிட்டு இராமனிடம் சென்று சீதையைக் கண்டதைக் கூறுகிறார்.
    Ver livro
  • Nankam Thirumurai - cover

    Nankam Thirumurai

    Navukkarasaar

    • 0
    • 0
    • 0
    தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் பாடியுள்ளார்கள். 
    முதல் இருவரும் கி.பி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 
    தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர். 
    திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். 
    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம். 
    10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.<
    Ver livro
  • Thiruvilaiyatarpuranam Thiruvalavaykantam - cover

    Thiruvilaiyatarpuranam...

    Paranjothimunivar

    • 0
    • 0
    • 0
    திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. 
    பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. 
    மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. 
    ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344-ஆவது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் தொடங்குகிறது. 
    திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
    மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள் 
    முதல் பகுதியான மதுரைக் காண்டம் இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை 18 படலங்களைக் கொண்டுள்ளது. அடுத்த கூடற் காண்டம் நான்மாடக் கூடலான படலம் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரையான 30 படலங்களையும், மூன்றாவது பகுதியான திருவாலவாய்க் காண்டம் திருவாலவாயான படலம் ம
    Ver livro
  • Cheettu - cover

    Cheettu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    கடமை ஒருபுறம் ஆசை மறுபுறம் என்று அலைகழிக்கப்படும் அழகப்பன். ஏக்கம், நம்பிக்கை துரோகம், வெளிக்காட்டாத எதிர்பார்ப்புகள் என்று உணர்ச்சிகள் தாக்க நிலை குலைகிறான். அலுவலக கோப்புகள், பதிவேடுகளுக்கு இடையே சிறு பார்வையின் ஒளி, தற்செயலாய் கண்ணில் படும் ஓர் காட்சி புயல் போல் அவனைத் தாக்க, சந்தேகத்தின் அரிப்பும், தவிப்பின் தாக்கமும் அவனை வேரோடு உலுக்கிவிடுகிறது. காதல், காமம், பணம், விசுவாசம் இவற்றிற்கிடையே சமரசங்களின் அழுத்தம் என்ன செய்யக்கூடும் என்று உணர்த்தும் கதை.
    Ver livro
  • Kaadu Haadiya Jaadu Hatthi - cover

    Kaadu Haadiya Jaadu Hatthi

    Karthikadithya Belgodu

    • 0
    • 0
    • 0
    ನನ್ನ ಮೊದಲನೇ ಪುಸ್ತಕ ಕಾಡು ಹಾದಿಯ ಜಾಡು ಹತ್ತಿ ಎಂಬುದು ಒಂದು ರೀತಿಯ ಆಕಸ್ಮಿಕ ಕೃತಿ ಅಂತಲೇ ನನ್ನ ಭಾವನೆ. ಇದು ನನ್ನ ಪ್ರಥಮ ಪ್ರಯತ್ನವಾಗಿದ್ದರಿಂದ ದೊಡ್ಡ ದೊಡ್ಡ ಕಥೆಗಳನ್ನು ಯಾರೂ ಓದಲಾರರು ಹೀಗಾಗಿ ಪುಟ್ಟ ಕಥೆಗಳನ್ನೇ ಬರೆಯಬೇಕು ಎಂಬುದಷ್ಟೇ ತಲೆಯಲ್ಲಿತ್ತೇ ಹೊರತು, ಎಂಥಾ ಕಥೆಯನ್ನು ಬರೆಯಬೇಕೆಂಬ ಪೂರ್ವಾಲೋಚನೆ, ಸಿದ್ದತೆಯಿರಲಿಲ್ಲ. ಹೀಗಾಗಿ ಅದರಲ್ಲಿರುವ ಎಲ್ಲಾ ಕಥೆಗಳೂ ಸಂದರ್ಭಾನುಸಾರಕ್ಕೆ ತಕ್ಕಂತೆ ಸೃಷ್ಟಿಸಲ್ಪಂಟಂತವು. ನಾನು ಕಂಡು ಕೇಳಿ, ಅನುಭವಿಸಿದ ಘಟನೆಗಳನ್ನೇ ಪುಟ್ಟ ಪುಟ್ಟ ಕಥೆಗಳನ್ನಾಗಿ ಹೊಸೆದೆ, ಓದುಗರಿಗೆ ಕಥೆಗಳು ಹತ್ತಿರವಾದವು. ಅನುಭವದ ಕಥೆಗಳಾಗಿದ್ದರಿಂದಲೇ ಅವು ಓದುಗರಿಗೆ ಆಪ್ತವಾಗಿದ್ದು. ಕಾರಣ, ನನ್ನ ಅನುಭವಗಳು ಅವರವೂ ಆಗಿದ್ದವು.
    ಹೀಗಾಗಿಯೇ ಈಗಲೂ ಎದುರಾಗುವ ಓದುಗರು ಆ ಪುಸ್ತಕದ ಕುರಿತೇ ಹೆಚ್ಚು ಮಾತನಾಡುತ್ತಾರೆ.
    Ver livro
  • Kathal Ninaivukal - cover

    Kathal Ninaivukal

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    தாய்மொழியின் வலிமையை தனது சிந்தனையாக வடிவமைத்து, பார்ப்பனர் அல்லாதார் பண்பாட்டைப் போற்றுகிற பாடல்களை தமிழில் கொடுத்தவர் பரதிதாசன். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்திலிருந்து தன் மொழி ஆற்றலை எடுத்து நவீன உலகில் கொடுத்தவர். புரட்சிக் கவியான பாரதிதாசன் எழுதிய காதல் கவிதைகளும் சிறப்பு வாய்ந்தவை. “எல்லோரும் பாட்டுக்கு உரை எழுதியபோது பெரியாரின் உரைக்கு எல்லாம் பாட்டெழுதியவன் பாரதிதாசன்” என்று புகழப்பட்ட பாரதிதாசன் தனது காதல் கவிதைகளிலும் சாதி எதிர்ப்பு மறுமணம் குறித்தெல்லாம் சேர்த்துப் பாடியவர். சங்க இலக்கியங்களில் காதலன் பொருள் தேடி பிரிந்து செல்லும்போது பாடப்படும் பாடல்களைப் போல, பொருள் சேர்க்க காதலன் சென்றதால் பிரிந்திருக்கும் காதலர்கள் எழுதிக் கொள்ளும் கடிதங்களில் தங்கள் வருத்தங்களை, அன்பை, காதல் ஏக்கத்தைப் பாடும் கவிதையாக வடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதம். மாந்தோப்பு எனும் கவிதையில் அமுதவல்லிக்கும் குப்பனுக்குமான காதலை பாடியிருப்பார். ஒரு பெண்ணை விரும்பி அவளிடம் தன் காதலை சொல்லும்போது, நான் சிறுவயதில் விதவையானவள் என்று அவள் கூறுகிறாள். குப்பன் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். பிற்போக்கு எண்ணம் கொண்ட ஊர்காரர்கள், சாதிகாரர்கள் போன்றோர் ஊர் விலக்கம் செய்வோம் என்று பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். சாதியவாதிகளை எல்லாம் மீறி அப்பெண்ணை மணக்கும் அந்த கவிதையில் மறுமணத்தை வலியுறுத்தி பாரதிதாசன் எழுதிய வரிகள் சிறப்பு வாய்ந்தவை. தமிழில் உழைப்பாளிகளின் காதலைப் பாடியவர் பாரதிதாசன். வண்டிக்காரர், மாடு மேய்ப்பவர், பாவோடு பெண்கள், தறித் தொழிலாளி நினைவு, உழவர் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக்(கோடரி)காரர், கூ
    Ver livro