Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
தொட்டு விடும் தூரம்! - cover

தொட்டு விடும் தூரம்!

தேவிபாலா

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

ராகுல் காலையில் தாமதமாக எழுந்தான். குளித்து விட்டு உடை மாற்ற, டெலிபோன் ஒலித்தது.எடுத்தான்.“ராகுல்! இப்ப மணி என்ன?”“குட்மார்னிங் மேம்! எட்டரை!”“ஒன்பது மணிக்கு போர்ட் மீட்டிங்! இன்னும் நீங்க வீட்டை விட்டே புறப்படலை!”குரலில் அதட்டல் இருந்தது.“வந்துட்டே இருக்கேன் மேம்!”அதை மறந்துவிட்ட ராகுல், பதட்டமாக புறப்பட்டான். சரியாக உடைகூட உடுத்திக் கொள்ள வில்லை!ஆபீசுக்கு வந்து விட்டான்.காஞ்சனா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்!“என்ன ராகுல் இப்படி அலங்கோலமா இருக்கீங்க? வாட் ஹேப்பன்ட்? சரி! போர்ட் மீட்டிங்குக்கு எல்லாம் ரெடியா?”“இதோ பண்ணிர்றேன் மேடம்!”அவன் குரல் பிசிறடிக்க, கால்கள் நடுங்க, கம்பீரமான ராகுல் தொலைந்து போயிருந்தான்.ராகுலை அழைத்தாள் காஞ்சனா.“இன்னிக்கு மீட்டிங் கேன்சல்! சொல்லிருங்க!”“மேம்! வேண்டாம். நான் இப்பவே...”“என் ரூமுக்கு வாங்க!” காஞ்சனா உள்ளே போய் விட்டாள். ராகுல் பின்தொடர்ந்தான்.“ஒக்காருங்க ராகுல்!”“இருக்கட்டும்!”“என்னாச்சு? ஸிட்டவுன் ஐஸே!”சரக்கென உட்கார்ந்தான்.“இப்ப நான் உங்க பாஸ் இல்லை. தோழி காஞ்சனா! சொல்லுங்க! நீங்க இப்படி டிஸ்டர்ப்டா இருந்து நான் பார்த்ததே இல்லை ராகுல்!”நிமிர்ந்து பார்த்தான்.“நான் தெரிஞ்சுக்கக் கூடாத சொந்தப் பிரச்னையா இருந்தா, நீங்க சொல்ல வேண்டாம்!”“அப்படி எதுவும் இல்லை மேம்! என் சிஸ்டர் ரூபா ஒரு இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ண மும்பை போயிருக்கா! தனியா இதுவரைக்கும் அனுப்பினதில்லை. அந்தக் கவலை, பயத்துல ராத்திரி முழுக்கத் தூங்கலை!”சிரித்தாள் காஞ்சனா!“வேடிக்கையா இருக்கு!”“இல்லை மேடம். அவ மேல வச்ச அளவு கடந்த பாசம்!”“தப்பு! பாசம், பந்தங்களை முடமாக்கக் கூடாது ராகுல். அவ பெண். தன்னம்பிக்கையோட தலை நிமிர வேண்டாமா? தனிச்சு போராட வேண்டிய கட்டாயம் இங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் என்னிக்காவது ஒரு நாள் வந்தே தீரும். நீங்க கோழையாக்கி வச்சா, அவ என்ன ஆவா? கம்மான் ராகுல்!”அவன் பேசவில்லை.“என்ன கம்பெனி அது? தகவல் இருக்கா?”“பேர் ஞாபகம் இல்லை.சரி விடுங்க! செல்போன் வச்சிருக்காளா?”“இருக்கு மேம்! நான் முயற்சி பண்ணேன். ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா!”“எங்கே தங்கப் போறா உங்க தங்கை? விலாசம் இருக்கா?”“தந்துட்டுப் போயிருக்கா!”“இன்னமும் ரயில் போய் சேர்ந்திருக்காது. ஒரு மணி நேரம் கழிச்சு அவளே பேசுவா! இல்லைனா, நீங்க பேசுங்க! அப்படியும் நீங்க சமாதானமாகலைனா, ஃப்ளைட்ல புக் பண்ணித் தர்றேன். ராத்திரிக்குள்ள மும்பை போய்ச் சேருங்க! போதுமா?”“கோவமா மேம்?”எழுந்தாள் காஞ்சனா. மெல்ல நடந்தாள்.“எங்கப்பா மல்ட்டி மிலியனர். இப்பவும் வருஷத்துல 300 நாட்களும் வெளிநாட்டுப் பயணம் பண்ணிட்டு இருக்கார். இங்கே நிர்வாகம் மொத்தமும் நான்தான்! விரலை அசைச்சா காலடில வந்து சேவகம் செய்ய ஒரு மினி அரசாங்கமே தயாரா இருக்கு! எதுக்கு? எல்லாருக்கும் பயம் இருக்கு. பின்னால ஆசையும், சுயநலமும் ஒளிஞ்சுகிட்டிருக்கு! பாசம் காட்ட ஒரு ஜீவன் கூட இல்லையே ராகுல்?”முடிக்கும் போது குரல் கரகரத்தது.ஒரு நொடி திடுக்கிட்டான் ராகுல்!சட்டென சிரித்தாள்.“லிவிட்! அதுக்காக நான் வருத்தப்படலை. ஜஸ்ட்லைக்தட் சொன்னேன்! உருகிட்டு ஒக்காந்தா பிஸினஸ் வருமா? ஓக்கே! எல்லாத்தையும் விலைக்கு வாங்க வேண்டியதுதான். அஃப்கோர்ஸ்! பாசத்தையும்தான். அது தரமா ஐ எஸ் ஐ முத்திரையோட எங்கே கிடைக்கும் ராகுல்?”வெகு இயல்பாகப் பேசினாலும், வார்த்தைகளில் வலி தெரிந்தது.
Disponible depuis: 16/01/2024.
Longueur d'impression: 71 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Voir livre
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Voir livre
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Voir livre