Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
தானாகத் தெரியும்! - cover

தானாகத் தெரியும்!

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

நாடோடிகள்’ சரியாகப் போகவில்லை!பாஸ்கி இயக்கும்போதே, நாடோடிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தது.ஜனா இயக்கத்துக்கு வந்த பிறகு இன்னும் மோசமானது!தயாரிப்பாளர் அதை நிறுத்திவிட்டு வேறு தொடரை ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.ஜனா, முருகன் இருவரையும் அழைத்தார்.“கைல எவ்ளோ எபிசோட் இருக்கு?”“ஷூட் பண்ணினது அஞ்சு இருக்கு சார்!”“இன்னும் ஒரு பத்து எபிசோட்ல முடிச்சுக்குங்க!”“சார்! கதைல இனிமேதான் ஒரு முக்கியமான திருப்பம் வரப்போகுது!” முருகன் சொன்னான்.“போதும் முருகன். என்ன பொல்லாத திருப்பம்? ஆரம்பம் முதலே உங்க சொந்தக் கற்பனை எதுவும் இல்லை. ‘நட்சத்திரம்’ ஜெயிச்சப்ப, அதுலேயிருந்து நிறைய காட்சிகளை உருவி இதுல போட்டீங்க. காப்பியடிக்கறதைத் தவிர, உருப்படியா என்ன செஞ்சீங்க?”முருகனின் முகம் இருண்டது!“இங்கே வேலைக்குச் சேர்ந்த புதுசுல நீங்களும் பாஸ்கியும் மாறி மாறி துரை சாரைக் குறை சொன்னீங்க. அவருக்கு எந்தத் திறமையும் இல்லை. ‘நட்சத்திரம்’ வெற்றிக்கு நீங்க ரெண்டு பேரும்தான் காரணம்னு வாய் கூசாம பொய் சொன்னீங்க. பாலமுருகன் டைரக்ஷன்ல துரைசார் எழுதி ‘நட்சத்திரம்’ கடைசிவரைக்கும் நல்லாத்தான் போச்சு! இப்ப வேற கம்பெனிக்கு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்றாங்க. அதுக்கும் நல்ல பேரு. மத்தவங்களைப் போட்டுக் குடுக்கறதை தவிர, உங்களுக்கு என்ன தெரியும்?“....!”“பத்து எபிசோட்ல முடிச்சிட்டு, எடத்தைக் காலி பண்ணுங்க.”இருவரும் எழுந்தார்கள்.“எப்பவுமே நம்ம உழைப்புல, திறமைல வாழணும்! மத்தவங்களை நாசப்படுத்திட்டு வாழற நம்ம வாழ்க்கை நிலைக்காது முருகன்! புரிஞ்சுக்குங்க!”அவர் எழுந்து போய்விட்டார்.இருவரும் வெளியே வந்தார்கள்.“ரொம்பத் தொங்குதுங்க! நீங்க இன்னும் கொஞ்சம் நல்லா எழுதினா, இந்தத் தொடரை நிறுத்த வேண்டிய நிலைமை வந்திருக்காது!” ஜனா ஆரம்பித்தான்.முருகனுக்கு சுருக்கென வந்துவிட்டது.கண்ணாடியை இறக்கிக்கொண்டு பார்த்தான்.“என் எழுத்தை விமர்சனம் பண்ற தகுதி இங்கே எந்த நாய்க்கும் இல்லை!”“இதப் பாருங்க முருகன். மரியாதையாப் பேசுங்க!”“உனக்கென்ன மரியாதை ஜனா?”“நான் ‘நாடோடிகள்’ டைரக்டர்.”முருகன் சிரித்தான்.“என்ன சிரிப்பு?”“பாஸ்கியைக் கவுத்துட்டு, நீ டைரக்டர் ஆயிட்டே! அதுவும் நிலைக்கலை பாரு! அடுத்தவங்களைக் கவுத்தா, இந்த நிலைமைதான்!”“நீங்க மட்டும் என்ன யோக்யம்? துரை சாரை நீங்க கவுக்கப் பாத்தீங்க! இப்ப உங்க கதி என்ன?எங்கிட்ட பேனா இருக்குடா!”“அதுல இங்க் இருக்கானு முதல்ல பாருங்க. துரை சாருக்கு பத்தாம் தேதி சம்பளம் தருவாங்க கம்பெனில. ஆனா உங்களுக்கு ஒண்ணாம் தேதி அவர் செக் தருவார். துணிமணி, கேட்டப்ப கடன், நல்ல ஓட்டல்ல சாப்பாடுனு சொந்தத் தம்பி மாதிரி அவர் உங்களை வச்சிருந்தார். பாஸ்கியையும், துரை சாரையும் பிரிச்சீங்க! சத்யமா நீங்க உருப்படப் போறதில்லை! நாசமாத்தான் போவீங்க!”“சாபம் விடறியாடா?”“விடாம? நான் தனிமனுஷன். நீங்கள்ளாம் குடும்பஸ்தன். பொண்டாட்டி கையால செருப்படி பட்டு தெருவுக்கு வரணும்யா நீ! ஆனா நீ மாமா வேலை செஞ்சாவது பொழைச்சுப்பே! உனக்கு ஏது மான, ரோஷம்?”முருகனுக்கு ஆத்திரம் உச்சந்தலைக்கு வந்துவிட்டது!ஆனால் பேச முடியாது!‘துரை நாக·கமானவர். ஓரளவுக்கு எதையும் பொறுத்துக்கொள்வார்!’இந்த ஜனாவெல்லாம் பொறுக்கிக்கூட்டம்!சாக்கடையில் கல் எறிவதைப் போலதான் இவர்களிடம் பேசுவது!“நீ எதுக்குடா இத்தனை காலம் பாஸ்கிகிட்ட ஜால்ரா போட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டிருந்தே? உன் தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் கேட்டிருந்தே! கொடுக்கலியோ?”“தேவையில்லை. இந்த இருபது எபிசோட்ல எனக்கு டைரக்டர் சம்பளம்தானே? அதுபோதும். பாஸ்கியை நம்பியா நான் பொறந்தேன்? அந்தக் குடிகாரனை நம்பி, அவன் பொண்டாட்டியே வாழ முடியாதே! மத்தவங்க எப்படி? சரி சரி மீதியை எழுதிக்குடுத்துட்டு நடையைக் கட்டுங்க!“நான் இப்ப காளிகாம்பா கோயிலுக்குப் போறேன்!
Disponibile da: 16/01/2024.
Lunghezza di stampa: 71 pagine.

Altri libri che potrebbero interessarti

  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Mostra libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Mostra libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro