Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
பொட்டு வச்ச வட்ட நிலா - cover

பொட்டு வச்ச வட்ட நிலா

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

சந்திரன் இன்னமும் மயக்க நிலையில்தான் இருந்தான். உயிர் வாயுக்கருவி, இன்னும் பிற மருத்துவக் கருவிகள் உடலின் சகல பாகங்களையும் சொந்தம் கொண்டாட, தலைக்கு மேல் இதயத் துடிப்பை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கும் கணிப்பொறி.ஆண்டாள் அவன் கால் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.நேற்று இங்கு வந்தது முதல் அவனைவிட்டு அவள் அசையக்கூட இல்லை.அவனுக்குத்தான் இன்னமும் விழிப்பே வரவில்லை.“உங்கள் மனைவி வந்திருக்கிறேன். உங்கள் மரணத் தேதி தெரிந்தும் இன்னமும் உயிருடன் உங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன்! என்னைப் பார்க்க மாட்டீர்களா ஒரு முறை?”ஊகூம்! விழிக்கவில்லை சந்திரன்.விடிந்து வெகுநேரமாகிவிட்டது. முதல் நாளே சந்திரனின் அப்பா தந்தி கொடுத்தபடியால் அவனுடைய அக்கா, தங்கை இருவரும் அலறியடித்துக் கொண்டு அதிகாலையிலேயே வந்துவிட்டார்கள், தங்கள் கணவன்மாருடன்.பெரிய மாப்பிள்ளை மாமனாரை நெருங்கினான்.“மாமா! நான் கேக்கறேன்னு தப்பா நினைக்கக்கூடாது. சொத்து விவகாரங்கள் முடிவு பண்ணியாச்சா?”“என்னங்க நீங்க? எந்த நேரத்துல எதைப் பேசறதுன்னு இல்லையா? தம்பியைவிட பெரிய சொத்து எங்க குடும்பத்துல என்ன உண்டு?”“நான் அதுக்குச் சொல்லலை. எப்படியும் உன் தம்பியின் உயிர் நிலைக்கப் போறதில்லை. அப்புறம் மற்ற விஷயங்களைப் பற்றி இப்பவே முடிவு செய்யறது நல்லது இல்லையா?“அப்பாவுக்கு அவன் ஒரே ஆண் பிள்ளை. எல்லா சொத்துக்களும் அண்ணனைத்தானே சேரணும்!” தங்கையின் குரலில் கொஞ்சம் ஆதங்கம் ஒளிந்திருந்தது.அவள் கணவன் முன்னால் வந்தான்.“அதெப்படி? லாரி தொழிலை நடத்திட்டு இருந்தது உங்கள் அப்பா தானே! அவரால முடியாம போனபிறகு உங்கண்ணன் நடத்தறார். அப்பா சம்பாதிச்ச சொத்துல பொண்ணுகளுக்கும் உரிமை உண்டு.”“அட, இருங்க சகலை! ஏன் மாமா ...இப்போது சொத்துக்கள் யார் பேர்ல இருக்கு?”“நாலு லாரி ஓடிட்டு இருக்கு. ரெண்டு லாரியை சந்திரன் பேருக்கு மாத்தி போன ஆண்டுதான் எழுதி வைச்சேன். மீதி இரண்டு என் பேர்ல இருக்கு”“உங்க வீடு?”“அதுவும் சந்திரன் பேர்லதான்!”“ஏன் அவசரப்பட்டு எழுதினீங்க?”“என்ன மாப்பிள்ளே நீங்க? சந்திரன் என்னோட பிள்ளைனே உங்களுக்கு மறந்து போச்சா?” அவர் குரலில் கோபம் எட்டிப் பார்த்து விட்டது.“மறக்கலை... இப்ப நிலைமை தலைகீழாக மாறிப் போச்சு இல்லையா?”“புரியலை!”“திடீர்னு புற்றுநோய் வந்து உங்கள் பிள்ளைக்கு மரணத் தேதி குறிச்சாச்சு. அவர் மூச்சு நிக்கிற நேரம் வந்தாச்சு. ரெண்டு லாரியோட மதிப்பு கிட்டத்தட்ட மூணு இலட்ச ரூபாய்க்கு மேல. இந்த வீட்டோட மதிப்பு அஞ்சு இலட்ச ரூபாய். வங்கில என்ன இருக்கு?”“ரெண்டு இலட்சத்துக்கு மேல!”“யார் பேர்ல?”“சந்திரன் பேர்லதான்!”ஏறத்தாழ பத்து இலட்ச சொத்து மதிப்பு, அப்படியே அந்த ஆண்டாள் தட்டிட்டுப் போகப் போறா! அவசியம்தானா இது?”மாமியார் குறுக்கிட்டார்.“அதுதானே நியாயம் மாப்பிள்ளை. ஆண்டாள் அவன் மனைவி. அவனோட எல்லாமே அவளைத்தானே சேரணும். சட்டம் கூட அதைத் தானே பேசும்?”“சட்டம் ஆயிரம் பேசும். மூணு வருடத்துல முத்து மழை. அந்தப் பொண்ணுக்கு மச்சம். முப்பது வருடமா சந்திரனைப் பராமரிச்ச பெத்தவங்களுக்கோ, அவனோட வளர்ந்த சகோதரிக்களுக்கோ ஒண்ணுமில்லையா?”“நீங்க என்ன சொல்றீங்க?”“இதோ பாருங்க மாமா! நமக்கு சந்திரன் முக்கியம். மறுக்கலை. அவனே இல்லைனு ஆனபின்னால யாரந்த ஆண்டாள்?”“என்னங்க!”“நீ சும்மார்றி! மாமா... பிள்ளையை வைச்சுத்தான் மருமகள் உறவு. உங்க வம்சம் விளங்க ஒரு பிள்ளையைக்கூட ஆண்டாள் இதுவரைக்கும் தரலை... உண்மை தானே?”“ம்...!”“அப்புறம் எல்லாத்தையும் அவள் தட்டிட்டுப் போறதுல என்ன நியாயம்?”“மாப்பிள்ளை?”“சொத்துக்கள் இத்தனையித்தனை... இன்னார் பேர்ல-இந்த விவரங்களெல்லாம் ஆண்டாளுக்குத் தெரியுமா?”“எதுவும் தெரியாது. வீட்டு நிர்வாகத்துல எப்பவுமே அவ தலையிட்டதில்லை. சந்திரன் எங்களைக் கேட்டுத்தான் செய்வான்.“நல்லது! இதுதான் உங்களுக்கு சாதகமான ஒண்ணு! உபயோகப்படுத்துங்க.”
Disponibile da: 16/01/2024.
Lunghezza di stampa: 88 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Mostra libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Mostra libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro