Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
பாகீரதி - cover

பாகீரதி

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

மறுநாள் விசாலத்தின் கணவர் வந்து விட்டார். விசாலம் கதறித் தீர்த்து விட்டாள்!அவர் மௌனமாக இருந்தார்.“நீங்க எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?”மனைவியை நெருங்கி அணைத்துக் கொண்டார்.“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? கோபாலும் நல்ல பையன்! விடும்மா! ஒரு நல்ல நட்பு உடையுது! அதுதான் வேதனை!”“என்ன சொல்றீங்க?”“அந்தக் குடும்பத்தோட நமக்குள்ள நட்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!”“சரிங்க! அந்த கூனி சும்மா இருப்பாளா!”“ஒதுங்கிப் போறவங்களை என்னம்மா செய்ய முடியும்? அவங்க நல்ல குடும்பம்! நான் அவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியும்! பாதிப்பு கோபாலுக்குத்தான்! வேணுமா! அவ அண்ணன் கோவிந்தனும் எனக்குக் கீழேதான் வேலை பார்க்கறான். அவனை யாருக்கும் புடிக்காது. விடு பாத்துக்கலாம்!” அவர் பெருந்தன்மையாக நடந்தார்.ஆனால் கூனி விடவில்லை!அம்மா, அண்ணனிடம் இதைப் பேச அவர்கள் வந்துவிட்டார்கள்.“முதல்ல ரேஸ்... இப்ப தப்பான சகவாசமா!”“நிறுத்து கோவிந்தா! உன் தங்கச்சி பக்குவமில்லாம பேசறான்னா, நீ யோசிக்கணும்.”“யோசிக்க என்ன இருக்கு! புருஷன் வெளியூருக்குப் போன நேரம் மாப்ளையோட துணை எதுக்கு? பெரியவங்க உங்க ரெண்டு பேருக்கும் புத்தி இல்லையா! பிள்ளை என்ன செஞ்சாலும் அதுக்கு ஆதரவு தருவீங்களா?”“என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்!”“புரியுதே லட்சணம். இப்பிடி நடந்தா, உங்க பிள்ளைக்கு உங்களை அப்பானு சொல்லமாட்டாங்க! மாமானு பேசுவாங்க!”கோபால் பாய்ந்து கோவிந்தனை அறைய,“என் பிள்ளையைக் கொல்றாங்க!” என பெரிய கூனி கதற,அக்கம் பக்கம் கூடி விட -வீட்டு விவகாரம் வீதிக்கு வந்து விட்டது.ஆள் ஆளுக்கு நாட்டாமை பேச,“அந்த மலையாள வீட்டம்மாதானே? அது ஒரு மாதிரித்தான்!” என யாரோ ஆரம்பிக்க,“பாவம் அவங்க! நல்ல பொம்பளை!” என வேறு ஒருத்தி பேச, பிரச்சனை பெரிதாகி விட்டது!யாரோ மத்யஸ்தம் செய்தார்கள்!இந்த பரபரப்பில் கஸ்தூரி போய் ஒரு மத்திய அரசு வேலைக்கான தேர்வை எழுதி விட்டு வர,அப்பா அம்மா விசாலம் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்க.“விடுங்க! நீங்க பெரியவங்க! எங்களைப் பெத்தவங்களுக்கு சமம்! உங்க மேல உள்ள பாசம் குறையாது! ஆனா இந்தப் பேயை கோபால் அடக்கணும்!”“அது முடியாது விசாலம்!”“கோபால் நிம்மதியா வாழணும்மா!”அவனை நாங்களே குழில தள்ளிட்டோம். படிச்ச வேலை பாக்கற பொண்ணு வேணும்னு கேட்டான்! குடும்பத்துக்கு தோதா ஒரு குத்து விளக்கு வேணும்டானு கேட்டு இவளைத் தேர்ந்தெடுத்தோம்!”“இவ குத்திட்டாம்மா! நெஞ்சுல குத்திட்டா!” அப்பா குரல் இடறியது!“அப்பா! நீங்க கலங்காதீங்க!”“இல்லை விசாலம்! அவ புருஷன் குடும்பம் தாங்கறானாம். நாங்க ஓசிச் சோறாம்! எனக்கு அந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை!”“அப்பா! கோபால் உங்க மகன்! உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நீங்க எதுக்கு விட்டுத்தரணும்?”“இல்லைம்மா! அந்த பிசாசுகூட தினசரி காலத்தை ஓட்டணுமே!”“உங்க பிள்ளை, எப்பவும் உங்க பக்கம்தானேப்பா?”“சரிம்மா! மனசுல நிம்மதி இல்லாம எப்படி நாட்களைக் கடத்த முடியும்?”“அப்பா! கஸ்தூரிக்கு கல்யாணம் நடக்கணும்! தேவா படிக்கறான் உங்களுக்கும் நிறைய பொறுப்பு இருக்கு! விட்டு விலக முடியுமா!”அம்மா உள்ளே வந்தாள்
Disponibile da: 16/01/2024.
Lunghezza di stampa: 78 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Mostra libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Mostra libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro