Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
நதிமூலம் - cover
LER

நதிமூலம்

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

அவர்கள் வாழ்வது ஒரு சிற்றூர்தான். கிராமத்துக்கும் கொஞ்சம் மேலே சின்ன ஓடை என்ற அந்த ஊரில் சொல்லும்படியாக செழிப்பு இல்லை! ஒரு ரயில் நிலையம் உண்டு. நூறு கிலோமீட்டர் பயணம் செய்தால், சேலத்துக்கு வந்து விடலாம்.
 
சின்ன ஓடை ரயில் நிலையத்துக்குள் நுழைந்தான் கண்ணாயிரம். காலை ஏழு மணி அப்போது.
 
ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது.
 
அங்கே விரைவு வண்டிகள் எதுவும் நிற்காது. காலை முதல் மாலை வரை உள்ளூர் பாசஞ்சர்கள் ஆறு வண்டியோ என்னமோ போகும்!
 
ஸ்டேஷன் மாஸ்டர் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார்.
 
ரவிக்கையில்லாத தயிர்க்காரியின் கறுத்த மேனியை காமத்துடன் மேய்ந்து கொண்டிருந்தன அவரது கண்கள்.
 
பெயர்ப் பலகை அருகில் ரெண்டு பேர், மூணு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
 
உள்ளே நுழைந்தான் கண்ணாயிரம்.
 
“வா கண்ணாயிரம்!”
 
“முதல்ல தயிர்க்காரியை ஜாக்கெட் போட்டுக்கச் சொல்லணும்!”
 
“கஷ்டமா இருக்கா?”
 
“எனக்கில்லை! வீட்ல அக்காவை பிரசவத்துக்கு அனுப்பியாச்சா?”
 
“போன வாரமே!”
 
“என்ன வயசு உங்களுக்கு?”
 
“நாப்பத்தி அஞ்சு!”
 
“இப்பத் தேவையா? நாலாவது குழந்தை இது!”
 
“சின்ன ஓடைல என்ன பொழுதுபோக்கு இருக்கு? சொல்லு!”
 
“நீங்க இதே வேகத்துல போனா, சின்ன ஓடை, பெரிய ஓடை ஆயிடும்! சரி! ரயில் வருமா?”
 
“வருமே! டிக்கெட் வேணுமா?”
 
“வேண்டாம். நம்மூர்ல யாரு டிக்கெட் வாங்கறாங்க? நான் சேலத்துக்கு லோக்கல் வண்டில போயிர்றன்!”
 
“சாயங்காலம் வந்துருவியா?”
 
“இல்லை! இனிமே வர மாட்டேன்!”
 
“என்னப்பா சொல்ற?”
 
“நான் தண்டச்சோறுனு எங்கண்ணன் வீட்டை விட்டு விரட்டிட்டார். அதான் புறப்பட்டுட்டேன்!”
 
“எந்த ஊருக்குப் போற?”
 
“தெரியலை! படைச்சவன் செலுத்தறான். தற்சமயம் நூல் அறுந்த பட்டம் எங்கேயெல்லாம் பறக்குதுன்னு பாக்கலாமே!”
 
“கடவுளே! மாசக் கடைசி! எங்கிட்ட இருபது ரூபா இருக்கு. நீ வச்சுக்கறியா?”
 
“வேண்டாம் சார்! உங்களை நான் மறக்க மாட்டேன்!”
 
அவர் உள்ளே போனார். திரும்பி வந்தார்.
 
“மெட்ராஸ் போற ஏற்காடு எக்ஸ்பிரஸ் வருது!”
 
“இந்த நேரத்துல ஏற்காடு எக்ஸ்பிரஸா? எப்படி?”
 
“இது ஸ்பெஷல் ரயில்டா! மாநாட்டுக்காக விட்டிருக்காங்க! நம்ம அவுட்டர்ல வாங்கணும்!”
 
“ஏன்?”
 
“ஒரு கூட்ஸ் க்ராஸிங் இருக்கு!”
 
“அப்படீன்னா, நம்மூர்ல எக்ஸ்பிரஸ் நிக்குமா?”
 
“எப்பவும் இல்லை! இது மாதிரி சில சூழ்நிலைகள்ல!”
 
பத்தாவது நிமிடம் ஏற்காடு ஸ்பெஷல் வந்து விட்டது. அவுட்டரில் தள்ளி நின்றது.
Disponível desde: 03/02/2024.
Comprimento de impressão: 75 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro