Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
காணும் விழி நான் உனக்கு! - cover

காணும் விழி நான் உனக்கு!

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

காயம் சுமந்தகற்பனைகள்இருட்டுக்குள் நுழைந்தஇதயம்விரலை மறந்த வீணைவிதியின் மூத்த பிள்ளைநான்.அயர்ந்து போனாள் மாதவி. உணவு இடை வேளையில், வாரப் பத்திரிகையை புரட்டிக் கொண்டிருக்கும்போது, இடையில் இருந்தது மடிக்கப்பட்ட ஒரு காகிதம்.பிரித்தால்,சுகமான இந்தக் கவிதை!“ஜனனி... இங்க வாயேன்!”“என்ன மாதவி?”“கவிதை எழுத வருமா உனக்கு?”“அந்த மாதிரி தப்புகளையெல்லாம் செய்யறதுக்குன்னே பிறந்த ஒரு ஜீவன் எங்க வீட்ல இருக்கு. புத்தகத்துக்குள்ள இருந்ததா?”“ம்! யாரது?சாட்சாத் எங்கண்ணன்.”“வாவ்! அவரை நான் பார்கணுமே”“நீ பார்க்கலாம். ஆனா அவனால உன்னைப் பார்க்க முடியாது. குருடன் அவன்.”“ஷ்! ‘பார்வை இல்லாதவர்’னு நாசூக்கா சொல்லேன்.”“சரி ஏதோ ஒண்ணு!”“நிறைய எழுதுவாரா? அவரேவா?”“ம்! ப்ரெய்ல் மூலம் படிக்க எழுத கத்துக்கிட்டான். வேலை பார்க்க வேற ஆசை. எங்கப்பா அனுமதிக்கலை. பிறவிக் குருடன் சந்துரு.”“நான் அவரைப் பார்க்க முடியுமா?”“எந்த நேரமும் வீட்ல உட்கார்ந்து எதையாவது கிறுக்கிட்டு இருப்பான். பத்திரிகைக்குப் போடச் சொல்லுவான். வேற வேலையில்லை. குப்பைத் தொட்டிக்கு நல்ல தீனி.”உடம்பு திகுதிகுவென எரிந்தது மாதவிக்கு.‘ச்சே! என்ன பெண் இவள்? கவிதை குணம் கொண்ட ஒருவனைப் புரிந்து கொள்ள ஏன் இவளால் முடியவில்லை? இவள் மட்டும்தான் இப்படியா? வீட்டில் எல்லாருமா?’‘இருட்டுக்குள் நுழைந்தஇதயம்விதியின் மூத்த பிள்ளைநான்!’காயத்தில் கசிந்த வரிகள்.‘இவனை சந்திக்க வேண்டும்!மாலை மூன்று மணிக்கு வந்து, “நான் பர்மிஷன்ல போறேன் மாது.”“வீட்டுக்கா ஜனனி?”“ம்!”“நானும் வரலாமா உன்னோட? உங்கண்ணனை நான் பார்க்கணும்.”“பைத்தியமா உனக்கு? சரி வா.”ஜனனியுடன் புறப்பட்டாள். வீடு ராஜா அண்ணாமலை புரத்தில் சற்று வசதியான பிரதேசத்தில் இருந்தது.ஜனனியின் அம்மா மட்டும் இருந்தாள் வீட்டில்.“அம்மா, இவ மாதவி. சந்துருவோட கவிதைகளைப் பாராட்ட வீடு தேடி வந்திருக்கா.”“அவனுக்கு கண்ணு தெரியாதுனு சொன்னியா?”“ம். வா மாதவி. நீ சந்துருகூட பேசிட்டு இரு. அதுக்குள்ள நானும், அம்மாவும் ஷாப்பிங் போயிட்டு வந்திர்றம்.”உள்ளே நுழைந்தார்கள்.“சந்துரு! உன்னைப் பார்க்க ஒரு பைத்தியம் வந்திருக்கு. உனக்கு கூட நாட்ல ஒரு ரசிகை. எல்லாம் நேரம். வர்றேன் மாதவி”“வணக்கம். வாங்க.”கரம் குவித்தான்.திருத்தமாக இருந்தான். பார்வை மட்டும்தான் இல்லை. முகத்தில் களை இருந்தது
Disponibile da: 13/01/2024.
Lunghezza di stampa: 73 pagine.

Altri libri che potrebbero interessarti

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Mostra libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro