Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
சதிகள் இலவசம் - cover

சதிகள் இலவசம்

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

கையகலக் கண்ணாடியை வைத்துக் கொண்டு, பவுடர் பூசும் முயற்சியில் வெகு தீவிரமாக இருந்தாள் மேனகா.
 
அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்த அம்மா, எட்டிப் பார்த்தாள் மெல்ல.
 
“எங்கேயாவது போறியா மேனகா?”
 
“லைப்ரரிக்கும்மா!”
 
“எங்க போனாலும் அப்பா வர்றதுக்குள்ள வீடு வந்துரு. சாயங்கால நேரத்துல, வயசு வந்த பெண்ணை ஏன் வெளிய அனுப்பறன்னு சத்தம் போடுவார்!”
 
மேனகா உதட்டுக்குள் முணுமுணுத்தாள்.
 
“ஆமா... அப்பாவோட பொறுப்பு தெரியாது? வயசுப் பெண்ணை வீட்ல வச்சுட்டு, ராத்திரி அப்பா அடிக்கற கூத்து...! ப்ச்!”
 
வேறு புடவை மாற்றி அணிந்து கொண்டாள்.
 
புறப்பட்டு விட்டாள்.
 
“ஏண்டீ... லைப்ரரி போறேன்னு சொல்லிட்டு, கையில புத்தகம் இல்லாம போறியே!”
 
மேனகா ஒரு நொடி தடுமாறிப் போனாள்.
 
“அ... அது வந்து... நம்ம பங்கஜம் இல்லை... அவகிட்ட இருக்கு புத்தகம்!”
 
அடுத்த நொடியும் அங்கே தாமதித்தால், இன்னும் உளற வாய்ப்புண்டு என்பதால் சரேலென வாசலை அடைந்து விட்டாள். ஓட்டமும் நடையுமாக தெருவைத் தாண்டியதும், நிம்மதியாக மூச்சு வந்தது.
 
வீடு சிந்தாதிரிப்பேட்டையில்!
 
சாமி நாயக்கன் தெருவில்
 
நடந்தே சிம்சனை அடைந்து, குறுக்கே ஓடிய அகலசாலையைக் கடந்து, ராஜாஜி மண்டபத்தைத் தொட்டு, விலகி, ஆடம்ஸ் சாலையில் கால் பதித்து, நாலடி நடப்பதற்குள், பின்னால் வந்தது அந்த நர்மதா வண்டி.
 
“நடையா இது நடையா!”
 
'விருட்'டென்று திரும்பினாள்.
 
“அவளை உரசியபடி வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான் வெங்கடேசன்.”
 
“சரியா வந்துட்டியே! ம் ஏறி ஓக்காரு!”
 
பயத்துடன் விழிகளை ஒருமுறை ஓட விட்டாள்.
 
“யாரும் வர மாட்டாங்க. தைரியமா ஏறி ஒக்காரு!”
 
அவள் உட்கார்ந்ததும், சட்டென வண்டியைக் கிளப்பி, டி.வி. ஸ்டேஷனை தொட்டுக் கொண்டு, பாலமேறி, பீச் ரோட்டில் பிரவேசித்து எம்.ஜி.ஆர். சமாதி கடந்து, காந்தியைக் குறிவைத்து விரட்டினான்.
 
நாலு மணி வேளை... வெயில் இன்னும் முற்றிலுமாக விலகாமல், கடற்காற்று வரட்டுமா என்று கேட்கத் தொடங்கியிருந்த நேரம்.
 
காந்தி சிலையை அணுகி, சற்று உள்பக்கமாக வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு, நடந்தார்கள். சற்று ஒதுக்குப் புறமான பகுதியைத் தேர்ந்தெடுத்து உட்கார,
 
“ம், சொல்லு மேனகா!”
 
“நீங்கதான் எதையும் சொல்றதில்லை!”
 
“என்ன சொல்லலை உனக்கு?”
 
“நீங்க வேலை பாக்கற இடத்தைச் சொல்லலை. உங்களுக்கு என்ன சம்பளம்னு சொல்லலை. உங்க அப்பா, அம்மா பத்திச் சொல்லலை!”
 
“எத்தனை நாளா பழகறோம் ரெண்டு பேரும்?”
 
“நாலு மாசமா!”
 
“அதுக்குள்ள அவசரப்பட்டா? அப்பா, அம்மா சின்ன வயசுல செத்தாச்சு. எப்படியெல்லாமோ வளர்ந்து, இப்ப இப்படி இருக்கேன். உத்யோகம் ஒரு கம்பெனில விற்பனை உதவியாளன். ஆயிரத்துக்கும் மேல சம்பளம். போதுமா விவரங்கள்!”
 
“நம்மோட காதல் எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா, நிலைமை மோசமாயிரும் வெங்கட். எனக்கு பயமாயிருக்கு!”
 
“இன்னும் நேரம் வரலை. நானே உங்கப்பாவைச் சந்திச்சுப் பேசறேன்! சுண்டல் சாப்டலாமா?”
 
ரெண்டு பொட்டலம் சுண்டல் வாங்கினான்.
 
ஒன்றை அவளிடம் நீட்டும் போதுதான், அதை கவனித்தாள்.
 
“என்ன வெங்கட் இது?”
 
“எது மேனகா?'“
 
அவன் முன் கையில் மணிக்கட்டுக்கும் சற்று மேலே, ஓரங்குல நீளத்துக்கு 'b' என்ற எழுத்து பச்சை குத்தப் பட்டிருந்தது.
 
அதை அவள் சுட்டிக் காட்டிய நிமிடம்,
 
அவன் முகம் சட்டென ஒரு நொடி, இருளுக்குப்போய், மறுபடியும் வெளிச்சம் வந்தது.
Disponibile da: 03/02/2024.
Lunghezza di stampa: 95 pagine.

Altri libri che potrebbero interessarti

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Mostra libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Mostra libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Mostra libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Mostra libro