Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
உன்னைக் கரம் பிடித்தே - cover

உன்னைக் கரம் பிடித்தே

தோழர் கா.கருமலையப்பன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

கலைந்த தலையோடு சுவரோரமாய் அமர்ந்திருந்த தாயை நெருங்கினாள் மான்விழி. சாப்பாட்டுக் கூடையை ஓரமாய் வைத்துவிட்டு அன்னையின் கூந்தலை ஒதுக்கி விட்டாள். 
 
திடுக்கிட்டு நிமிர்ந்த பார்வதி மகளைக் கண்டு ஒதுங்கினாள். கைகளைத் தட்டிவிட்டு கோபமாய் எழுந்து கட்டிலில் அமர்ந்தாள். வேதனை படிந்த முகத்தோடு தாயை நெருங்கி அவளது கூந்தலை ஒதுக்கிப் பின்னலிட்ட மான்விழியின் கண்களில் நீர் சுரந்தது. 
 
கருகருவென இடைவரை நீண்டு அடர்த்தியாய் இருந்த அன்னையின் சுருள் கேசம் இப்போது நிறையக் கொட்டியிருந்தது. பாதிக்கு மேல் வெளுத்திருந்தது. 
 
எப்போதும் படிய வாரி தலையில் பூவோடு காட்சியளித்த கூந்தல் கலைந்து காற்றிலாடி சிக்கல் பிடித்துப் போயிருந்தது. மெதுவாய் வலிக்காமல் விரல்களால் கோதிப் பின்னலிட்டு முடித்தாள். 
 
“அம்மா! சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சாப்பிடுறியாம்மா?” தாயின் முகத்தைப் பற்றியவாறே கேட்டாள் மான்விழி. கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பார்வதி. 
 
“ஏம்மா! எம்மேல என்ன கோபம்?” 
 
“முதல்ல வெளியே போ. இங்க எதுக்காக வந்தே?” - முகத்தைக் கடுப்பாய் வைத்துக் கொண்டாள் பார்வதி. 
 
“அம்மா! நான் உம் பொண்ணும்மா!”
 
“இல்ல. எனக்கு யாரும் கிடையாது. நீ போ!”
 
“அம்மா! ஏம்மா இப்படிப் பேசுற? சாப்பிடும்மா.” 
 
“அதான் வேண்டாம்னு சொல்றேனில்ல. எம்மேல உனக்கு என்ன அக்கறை? நீ யாரு?” 
 
“நான் மானும்மா. உன் பொண்ணம்மா” - கண்ணீரோடு சொன்ன மகளை உற்றுப் பார்த்துவிட்டு, எதையோ சிந்தித்தாள். பிறகு மறுப்பாய் தலையை அசைத்தாள். 
 
“இல்ல. நீ எனக்கு ஊசி போடத்தான் வந்திருக்க. நான் கையைத் தரமாட்டேன். போ.” 
 
“இல்லம்மா... நான்...” 
 
“போடி வெளியே. ஏன் என்னை எல்லோருமா சேர்ந்து சித்திரவதை பண்றீங்க? போ. போயிடு. என்னைத் தனியா இருக்க விடு. போ.” - வெறி வந்தாற்போல் மகளைப் பிடித்துத் தள்ளினாள் பார்வதி. 
 
தடுமாறி விழப்போனவளை அப்போதுதான் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த மருத்துவர் பிடித்துக் கொள்ள, கூடவே வந்த நர்ஸ் அதட்டினாள். 
 
“பார்வதிம்மா! என்ன பண்றீங்க? இவங்க உங்க பொண்ணு.” 
 
கோபமாய் நிமிர்ந்த பார்வதி வரிசையாய் ஆண் மருத்துவர்கள் வருவதைக் கண்டதும் புடவைத் தலைப்பால்  போர்த்திக் கொண்டு அமைதியாய் தரையில் அமர்ந்து கொண்டாள். 
 
“மிஸ் மான்விழி. ஆர் யூ ஓ.கே.” - கேட்ட மருத்துவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். 
 
“எனக்கு ஒண்ணும் இல்ல டாக்டர். அம்மா இன்னிக்கு ஏன் இவ்வளவு கோபமா இருக்காங்க டாக்டர்?” 
 
“காரணம் புரியல்ல. பட்! இன்னிக்கு மார்னிங் டாக்டர் ஷ்யாம் வந்தபிறகு செக்-அப் ரூமுக்கு கூட்டிட்டுப் போனோம். அப்போ இருந்தே இப்படித்தான் இருக்காங்க.” 
 
“புது டாக்டரா டாக்டர்?” 
 
“யா... மீட் மிஸ்டர் ஷ்யாம் ராகவ். நேற்று சொன்னேனே...” - என அருகே வந்து நின்ற இளம் மருத்துவரை அறிமுகப்படுத்தினார் டாக்டர் சுரேஷ். 
 
“வணக்கம் டாக்டர்.” 
 
“வணக்கம். நீங்கதான் இந்த அம்மாவோட பொண்ணா?” 
 
“ஆமா டாக்டர்.”
 
“கூட யாரும் வரவில்லையா?” 
 
“டாக்டர்...”
 
“வீட்ல பெரியவங்க யாரும் இல்லியா?” 
 
“இல்ல டாக்டர். அப்பா இல்ல. அண்ணன் மட்டும்  தான்.” 
 
see “அவரையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே!” 
 
“போன் பண்ணிட்டேன் டாக்டர். இப்ப வந்திடுவார். என்ன பாக்டர், எதுவும் பிரச்சனையா? அம்மாவை செக்-அப் பண்ணிட்டீங்களா?” 
 
“ம்... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாச்சு.” 
 
“டாக்டர்... அம்மாவுக்கு குணமாகிடுமில்ல?” - தயக்கமாய் ஆவலாய்க் கேட்ட பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தான் ஷ்யாம். 
 
“உங்க அம்மாவுக்கு எந்த நோயும் இல்ல.”
 
“டாக்டர்?” 
 
“யெஸ்! மனசளவில் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்க மனசு விட்டுப் பேசிட்டாலே போதும். எல்லாம் சரியாகிடும்.” 
 
“டாக்டர்!” 
 
“நான் கேட்கிற கேள்விக்கு நீங்க முதல்ல பதில் சொல்லுங்க.” 
 
“கேளுங்க டாக்டர்!” 
 
“மார்னிங் நான் உங்க அம்மாவைப் பார்க்கும் போது ரொம்ப அமைதியா இருந்தாங்க. நல்லாப் பதில் சொன்னாங்க. செக்-அப் ரூம்ல உள்ள காலண்டரைப் பார்த்த பிறகுதான் அவங்க பார்வை, பேச்சு எல்லாமே மாறிப்போச்சு.” 
 
புருவம் சுருக்கினாள் மான்விழி
Disponible depuis: 03/02/2024.
Longueur d'impression: 269 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Voir livre
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Voir livre
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Voir livre
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Voir livre