Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
கிழக்கு வெளுத்ததம்மா - cover

கிழக்கு வெளுத்ததம்மா

ரமணிசந்திரன்

Casa editrice: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinossi

அன்றைய மீட்டிங் தன்னை இவ்வளவு தூரம் பாதித்து விடக்கூடும் என்று எட்டாத கற்பனையில் கூட மீரா எண்ணியிருக்கவில்லை. பாதிப்பை உணர்ந்த பிறகும் கூட அவளால் அதை நம்ப இயலவில்லை.ஆறு ஆண்டுகள்!நீண்ட நெடிய ஆறு ஆண்டுகளாகப் பயின்று வைத்திருந்த அமைதி அப்படிப் பறந்துவிடுமா?எதையோ இழந்துவிட்டாற்போல என்னவோ கிட்டாமல் போனதுபோல நெஞ்சுக் கூட்டினுள் ஏன் இந்தத் தவிப்பு?அன்றைய நிகழ்ச்சிகளை அசைபோடக்கூட! உள்ளுர அவளுக்கு அச்சமாக இருந்தது.அச்சமென்ன? அதற்கு அவசியமே இல்லையே என்று வெகு சிரமப்பட்டு ஓர் அலட்சியத்தை வருவித்துக் கொண்டு அவள் நிமிர்ந்தபோது அவளது காண்டஸா, கேட்டின் வழியே வழுக்கிய படி சென்று அவளது வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் முன்னே சென்று நின்றது.சூழ்நிலையை உணர்ந்து சுதாரித்து அவள் திரும்புமுன் பணியாளர் ஒருவன் ஓடிவந்து கார்க் கதவைத் திறந்து விட்டுப் பணிவுடன் ஒருபுறம் ஒதுங்கி நின்றான்.தன் உடைக்குப் பொருத்தமாக எடுத்துச் சென்றிருந்த வெள்ளி நிறக் கைப்பையைக்கூட மறந்து, இயந்திரமாய் இறங்கி வீட்டுப் படியேறினாள மீரா.நேராக அவளது அறைக்குள் சென்று விட்டால், குளிரக் குளிர ஷவரில் குளித்து விட்டால் இந்தக் கொதிப்பு அடங்கி விடுமோ!ஆனால் கொதிப்பா இது?... கொஞ்...சம் கூடக் கோபமே இல்லையே
 
முகத்துக்கு நேராகப் ‘பொய்க் கணக்குச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர்கள்’ என்று அவன் குற்றம் சாட்டும் போது கூட ஆத்திரம் வரவில்லையே.ஆனால் உடம்பெல்லாம் எரிகிற மாதிரி இந்த அனலைக் குளிர்விப்பதே நினைவாக மாடிப்பக்கம் திரும்பியவளுக்குத் தன் அறையில் இருந்த ஆள் உயரப் படங்கள் நினைவு வந்தன.அவைகளைப் பார்த்தால் அமைதி திரும்பக் கூடுமோ என்று எண்ணி ஓர் எட்டு எடுத்து வைத்தவள் தயங்கி பக்கவாட்டில் இருந்த ‘ஃப்ரெஞ்ச் லிண்டோ’ வைத் திறந்து கொண்டு இறங்கித் தோட்டத்திற்குச் சென்று மரத்தடிகளில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த ஆசனங்களுள் ஒன்றில் அமர்ந்தாள்.சீராக வெட்டப்பட்டிருக்கும் பாந்த புல் தரையும், இடை இடையே வட்டப் பாத்திகளில் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகளும் ஆங்காங்கே மரங்களுமாக அந்தப் பரந்த தோட்டம் எப்போதுமே அவளுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவது வழக்கம்.இன்று அதுவும் தோற்றது.இத்தனைக்கும் வானம் கொஞ்சம் அதிக நீலமாக, இலைகள் கொஞ்சம் அதிகப் பசுமையாகத் தான் தெரிகிறது. மலர்கள் கூடக் கொஞ்சம் அதிக அழகாகத்தான் பளிச்சிட்டன...ஆனாலும்...“என்ன நடந்தது மருமகளே!”சற்றுத் திகைத்து “ஓ...ஒன்றுமில்லை மாமா.” என்று பணிவுடன் எழுந்தாள் மீரா.“பரவாயில்லை. உட்காரம்மா.” என்று தானும் அமர்ந்து கொண்டார் சேதுபதி.அவள் மீண்டும் அமரும் வரையில் பொறுத்திருந்து விட்டுப் “பின் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார். “வந்து ஒரு காபி கூடக் குடிக்கவில்லை? இங்கேயே கொண்டு வரச் சொல்லிவிட்டு வந்தேன்.” என்றார் கரிசனத்துடன்.பாசத்தைப் பொழியும் இவரிடம் என்னவென்று சொல்வது?
Disponibile da: 03/04/2025.
Lunghezza di stampa: 181 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Manaiviyin Kaadhalan - cover

    Manaiviyin Kaadhalan

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Mostra libro
  • Anaarkali - cover

    Anaarkali

    Va Ve Su Iyer

    • 0
    • 0
    • 0
    தமிழின் முதல் சிறுகதையாக கருதப்படுகிறது. சிறுகதை என்ற வடிவம் இந்தக் கதையோடுதான் தொடங்குவதாக கருதப்படுகிறது. எளிமையான, மிகை உணர்ச்சிக் கதை என்றாலும் இன்றும் படிக்கக் கூடிய கதைதான்.
    Mostra libro
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Mostra libro
  • I am Tired - ஐ யம் டயர்ட் - துப்பறியும் நாவல் - cover

    I am Tired - ஐ யம் டயர்ட் -...

    Kavani

    • 0
    • 0
    • 0
    I am tired - ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட திரைக்கதையை நாவல் வடிவில் தந்துள்ளேன். பணப் பற்றாக்குறையால் இத் திரைப்படம் தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நாவலை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்கள் திறனாய்வுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!  
     - ஆசிரியர் - கவாணி  
    Mostra libro
  • Avvaiyar Verses - cover

    Avvaiyar Verses

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    அவ்வையார் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, அகநானூற்றில் 4,புறநானூற்றில் 33 என்ற எண்ணிக்கையில்  அமைந்துள்ளன. தம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு, நெடுங்காலம் தம் அரசவையிலேயே ஔவையாரை அமர்த்தி அவர் புலமையை மதித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான். ஔவையார் தன் காதலைப் புரிந்து கொள்ளாமல் உறங்குகின்ற ஊரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு அந்த ஊர்மக்களைத் தாக்கி வீழ்த்தித் தன்னிலையைப் புலப்படுத்த முயல்கிறாள். 
    முட்டுவேன்கொல்! தாக்குவேன் கொல்! 
    ஓரேன் யானும்; ஓர் பெற்றி மேலிட்டு 
    ஆஅ! ஒல் எனக் கூவுவேன் கொல்! 
    அலமரல் அசைவளி அலைப்ப, என் 
    உயவுநோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே! 
    ஆத்திசூடி என்பது 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. 
    தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். 
    கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவராகிய முருகனைப் போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்: 
    “கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை 
    என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” 
    நல்வழி: மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலின் க
    Mostra libro
  • Hymns from 11th Thirumurai - cover

    Hymns from 11th Thirumurai

    Nampiandarnampikal

    • 0
    • 0
    • 0
    பதினொன்றாம் திருமுறையில் பத்துப் பிரபந்தங்களை அருளிச் செய்தவர் நம்பியாண்டார் நம்பிகள். தேவாரத் திருமுறைகளை பொல்லாப் பிள்ளையார் துணைக்கொண்டு தில்லையிலிருந்து வெளிப்படுத்தியும் திருமுறைகளை வகுத்தும் தந்த பெருமைக்குரியவர் இவர். விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தம் பாடிப் போற்றினார். 
    நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாந் திருமுறையாக வும் தொகுத்ததோடு மணிவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் ஆகியவற்றை எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத்தேவர் முதலானவர்கள் அருளிய திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகிய வற்றை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலர் அருளிய திரு மந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்களைத் தொகுத்துப் பதினொன்றாம் திருமுறையாகவும் வகுத்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை யின் வகைநூலாய் பொல்லாப்பிள்ளையார் தமக்கு உணர்த்தியருளிய நாயன்மார்களின் பிற வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு திருத் தொண்டர் திருவந்தாதி என்ற வகை நூலையும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் மீது திருஏகாதசமாலை என்னும் பிரபந்தத்தையும் அருளி இத்திருமுறையில் சேர்த் தருளினார்.
    Mostra libro