Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
கொலைவிழும் மலர்வனம் - cover

கொலைவிழும் மலர்வனம்

ரமணிசந்திரன்

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

நித்யா ஆச்சரியமாய் நாகலட்சுமியைப் பார்த்தாள். புன்சிரிப்போடு கேட்டாள்.“ஏன் அத்தை அப்படிச் சொன்னீங்க?”“இந்த சம்பந்தம் எனக்குப் பிடிக்கலை”“உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிச்சிருக்கிறதா மாமா சொன்னாரே!” ‘‘அவர் பொய் சொல்லியிருக்கார்.”“அவர் ஏன் பொய் சொல்லணும்?”“நித்தி! உனக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பத்தி நான் ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கேன். உன்னோட குணத்துக்கும் அழகுக்கும் இந்த பெங்களூர் மாப்பிள்ளை கட்டுப்படியாக மாட்டான். உங்க மாமா உனக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சு உயிலோட வாசகத்தை நிறைவேத்திடனும்னு நினைக்கிறார். உன்னைத்தேடி ஒரு ராஜகுமாரன் வர்றதுக்குள்ளே ஒரு சிப்பாயைப் பார்த்துக் கட்டி வெக்க ஆசைப்படறார்”நித்யா சிரித்தாள்.“அத்தை! மாமா எனக்கு என்னிக்குமே நல்லதைத்தான் பண்ணுவார். உங்களுக்கு நல்லாவே தெரியும். எனக்கு ரெண்டு வயசோ, மூணு வயசோ இருந்தப்ப அம்மாவும், அப்பாவும் இறந்துட்டாங்க. கிட்டத்தட்ட அம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை இந்தப் பதினேழு வருஷமா கட்டிக் காத்து ஒரு கார்டியனா இருந்து, ஒரு சல்லிக் காசுக்குக்கூட ஆசைப்படாமே என்கிட்ட மாமா குடுத்திருக்கிறார். இந்தப் பதினேழு வருஷத்துல அவர் நினைச்சிருந்தா என்னை எமாத்தியிருக்க முடியும் ஆனால் அவர் என்னை ஏமாத்தலை. எல்லாகாரியத்துக்குமே அவர் எனக்கு அப்பாவா, நீங்க அம்மாவா இருந்திருக்கீங்க. மாமா எனக்குப் பார்த்திருக்கிற இந்த மாப்பிள்ளை நல்லவரோ கெட்டவரோ எனக்குத் தெரியாது. அவர் முடிவு பண்ணிட்டார். நான் கழுத்தை நீட்டப் போறேன்”நாகலட்சுமி ‘உச்’ கொட்டினாள்உன்னோட மாமா மாதிரியே நீயும் அவசரப்படறே நித்தி. இப்போ பார்த்திருக்கிற பெங்களூர் மாப்பிள்ளையைப் பத்தி நான் எந்தக் குறையும் சொல்லத் தயாராயில்லை, என்னோட தம்பி கோபிநாத் பெங்களூர் போய் ஒரு வாரம் இருந்து மாப்பிள்ளையைப் பத்தின. சகல விஷயங்களையும் சேகரிச்சுட்டு வந்திருக்கான். அவனுடைய ரிப்போர்ட்படி மாப்பிள்ளைக்கு நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் தரலாம். இருந்தாலும் என் மனசுக்குப் பிடிக்கலை. இதைக் காட்டிலும் ஒரு நல்ல இடம் வரும். அது வரைக்கும் வெயிட் பண்ணு நித்தி”நித்யா பார்வையைக் கீழே தாழ்த்தி ஒரு ரோஜா மோக்கைக் கை விரலால் தடவிக் கொண்டே சொன்னாள். “ஸாரி அத்தை. நான் பெங்களூர் வரப்போறதா மாமாகிட்டே சொல்லிட்டேன். எல்லாத்துக்கும் மேலா எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கு...”நாகலட்சுமி நித்யாவின் கன்னத்தை தட்டினாள்.சிரித்தாள்.“ஒகே நித்தி... உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான்... உன்கூட பெங்களூர் வரணும்ன்னு எனக்கும் ஆசைதான். ஆனா இந்த நொண்டியாலே வர முடியாது... பங்க்‌ஷனை வீடியோ எடுத்தா கேஸட்டைக் கையோட வாங்கிட்டு வா. போட்டுப் பார்க்கலாம்...”நித்யா நாகலட்சுமியின் மின்சாரம் பாய்ந்து சாம்பல் நிறமாகிப் போன கால்களைக் கழிவிரக்கத்தோடு பார்த்தாள்.நாம கார்லதானே போறோம் அத்தை. வீல்சேரை காரோட டாப் காரியரில் கட்டி பெங்களூர் கொண்டு போயிடலாமே...!”“வேண்டாம் நித்தி... நான் வரலை. ஒரு சுப காரியம் நடக்கறப்போ நான் நாற்காலியை உருட்டிக்கிட்டு அலைஞ்சா அது பார்க்கிறதுக்கு நல்லா இருக்காது. மாமாவே வர வேண்டாம்ன்னு சொல்லிட்டார். சொர்ணம் இருக்கா. என்னைப் பார்த்துக்குவா...”“ஓ.கே… அத்தை நான் குளிச்சுட்டு வந்துடறேன்நித்யா நகர, நாகலட்சுமி மறுபடியும் கூப்பிட்டாள்.“நித்தி”“ம்...”நந்த கோபாலின் மனைவி லட்சுமியும், மகள் ஷோபனாவும் பக்கத்து அறையிலிருந்து ஒன்றாய் வெளிப்பட்டுப் புன்னகைத்துக் கொண்டே நித்யாவின் தோளைப் பற்றினார்கள்
Disponibile da: 08/02/2024.
Lunghezza di stampa: 93 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Mostra libro
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Mostra libro
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Mostra libro
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Mostra libro
  • I am Tired - ஐ யம் டயர்ட் - துப்பறியும் நாவல் - cover

    I am Tired - ஐ யம் டயர்ட் -...

    Kavani

    • 0
    • 0
    • 0
    I am tired - ஒரு திரைப்படத்திற்காக எழுதப்பட்ட திரைக்கதையை நாவல் வடிவில் தந்துள்ளேன். பணப் பற்றாக்குறையால் இத் திரைப்படம் தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நாவலை வாசித்துவிட்டு, தங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்கள் திறனாய்வுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!  
     - ஆசிரியர் - கவாணி  
    Mostra libro
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Mostra libro